RECENT NEWS

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

Jul 19, 2025

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

Jul 19, 2025

BIG STORIES

காபி வித் ஸ்லீப்பிங் ரகசிய சினேகிதியின் சமையல் மந்திரம்..! உளுந்தங்களியில் இருந்தது என்ன ?

Jun 19, 2025 02:33 AM

189

காபி வித் ஸ்லீப்பிங் ரகசிய சினேகிதியின் சமையல் மந்திரம்..!
உளுந்தங்களியில் இருந்தது என்ன ?

காபி வித் ஸ்லீப்பிங் ரகசிய சினேகிதியின் சமையல் மந்திரம்..! உளுந்தங்களியில் இருந்தது என்ன ?

திண்டுக்கல் அருகே சென்னம்ம நாயக்கன்பட்டி கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் இளைஞர் சடலமாக கிடந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக , இளைஞரை கொலை செய்ததாக ராணுவவீரரின் மனைவி , காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் அருகே உள்ள சென்னம்மநாயக்கன்பட்டி கிராமத்தின் மேற்குப் பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற காவல் துறையினர் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் வேடசந்தூர் பூதாம்பட்டியில் சலூன் கடை நடத்தி வந்த ஜோதிமணி என்பதும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக ராணுவவீரரின் மனைவி கோமதியை பிடித்து விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

திருமணம் முடிந்த சில தினங்களிலேயே ஜோதிமணியை விட்டு அவரது மனைவி புறப்பட்டுச்சென்று விட்டார். இதனால் ஜோதி மணிக்கும் , ராணுவத்தில் உள்ள அவரது சகோதரரின் மனைவியான கோமதிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அண்மையில் இந்த பழக்கத்துக்கு குறுக்கே அவரது உரவுக்கார இளைஞர் ஸ்டாலின் என்பவர் வந்துள்ளார். பக்கத்து ஊரில் சலூன் கடை நடத்தி வரும் ஸ்டாலின் மீது ஈர்ப்பானதால் ஜோதிமணியை தவிர்த்து வந்தார் கோமதி. இதனை கண்டித்து அடிக்கடி ஜோதிமணி , கோமதியிடம் தகராறு செய்துள்ளார். இந்த ரகசிய காதல் குறித்து ராணுவத்தில் உள்ள சகோதரரிடம் சொல்லப்போவதாக ஜோதிமணி மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து அவரை கொலை செய்ய கோமதியும், ஸ்டாலினும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி சம்பவத்தன்று ஜோதிமணி விரும்பிச்சாப்பிடும் உளுந்தங்களியில் தூக்க மாத்திரை போட்டு கிண்டி வைத்த கோமதி, பழைய காதலுடன் வீட்டிற்கு அழைத்து அவரை சாப்பிட வைத்துள்ளார், மேலும் தூக்க மாத்திரை கலந்த காபியும் கொடுத்துள்ளார். இரண்டையும் சாப்பிட்ட ஜோதிமணி சில நிமிடங்களில் மயங்கி சரிந்துள்ளார். அப்போது அவரை கோமதியும், ஸ்டாலினும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தை பார்த்த கோமதியின் தாய் நீலா, தந்தை நடராஜன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

கொலை செய்த பின்னர் சடலத்தை தூக்கிச்சென்று கிணற்றில் வீசுவதற்கு உடந்தையாக இருந்த ஸ்டாலினின் நண்பர்கள் ஆரோக்கிய சாமி, குட்டி ஆகியோர் உதவியதாக கோமதி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து கோமதி, ஸ்டாலின் உள்ளிட்ட ஆறு நபர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஸ்விக்கி - சோமேட்டோவுக்கு டஃப் கொடுக்கும்  “ZAAROZ”.. தமிழனின் உணவு டெலிவரி ஆப்..! ஓட்டல் விலையில் வீட்டுக்கு வரும் உணவு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies