முகப்பு
“நம்ப பள்ளிக்கு ஒருஅடையாளம் வேணும்...” முன்னாள் மாணவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?..
May 21, 2025 12:34 PM
369
கல்லூரி, மேற்படிப்பு, வேலை என எங்கு வேண்டுமானாலும மேலே மேலே பறந்துகொண்டே இருக்கலாம். ஆனால், மாணவர்களை பெற்றெடுத்த தாய் போன்றதுதான், பள்ளிக்கூடம். அதனால், உங்களைப் பெற்றெடுத்த பள்ளிக்கூடத்துக்கு ஏதாவது செய்யவேண்டும். அதாவது, உங்கள் பள்ளி எதிர்பார்த்து, காத்துக்கொண்டிருக்கிறதோ இல்லையோ, பள்ளியின் நிலை அறிந்து, அவற்றை பிள்ளைகளான முன்னாள் மாணவர்கள் நிறைவேற்றவேண்டும்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில், முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு செய்த செயல், நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் குவித்துவருகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. 1995-96 ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிக்கு என்ன செய்யவேண்டும் என கேட்டிருக்கிறார்கள். நம்முடைய அரசுப்பள்ளிக்கு ஓர் அடையாளம் வேண்டும். சேர்ந்து படிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவேண்டும் என ஆலோசித்திருக்கிறார்கள். அதற்குப்பிறகு, உருவானதுதான் அந்த ஐடியா.
அதாவது, முன்னாள் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து நிதி திரட்டி, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்பு நுழைவு வாயிலைக் கட்டி முடித்திருக்கிறார்கள். இதன் திறப்பு விழா, முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு விழா, தங்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு கெளரவிப்பு விழா என முப்பெரும் விழாவை பள்ளி வளாகத்தில் வெகு சிறப்பாக முன்னெடுத்துள்ளார்கள்.
முன்னதாக முன்னாள் மாணவ மாணவிகள் கட்டி முடிக்கப்பட்ட நுழைவு வாயிலை பள்ளியின் ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகன் திருவள்ளுவர் உருவ படத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் தங்கவேல் கல்வெட்டுகளை திறந்து வைத்தார்.
தொடர்ந்து முன்னாள் மாணவ மாணவிகள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டும், ஃபோட்டோக்களும் எடுத்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். 28 ஆண்டுகளைக் கடந்து முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, ஒருவருக்கு ஒருவரை குடும்பத்துடன் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலகத்தின் நேர்முக உதவியாளர் பிரபு, பள்ளி தலைமை ஆசிரியர் வரதராஜன், முன்னாள் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu