கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
முகப்பு
சிபில் ஸ்கோரில் தொட்டு கெட்ட இந்தியன் வங்கி ரூ 3 லட்சம் அபராதம்..! ஆப்படித்த ஆட்டோ ஓட்டுனர்
May 01, 2025 02:30 AM
8145
சிபில் ஸ்கோரில் தொட்டு கெட்ட இந்தியன் வங்கி ரூ 3 லட்சம் அபராதம்..! ஆப்படித்த ஆட்டோ ஓட்டுனர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆட்டோ ஓட்டுனர் வாங்காத கடனுக்கு, அவரது சிபில் ஸ்கோரில் கைவைத்த இந்தியன் வங்கிக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரது மகன் நாராயணன் ஆட்டோ டிரைவரான இவர் மன்னார்குடியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் 2001 முதல் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் கடந்த 2024 ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி அன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் புதிய ஆட்டோ வாங்க 3 லட்சம் ரூபாய் கடன் கேட்டு அணுகியபோது சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிபில் ஸ்கோர் குறைந்ததற்கு என்ன காரணம் என்று அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர் சேமிப்பு கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கி கிளையில் 2002 ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி மன்னார்குடி மேலவாசல் பகுதியைச் சேர்ந்த இன்பராஜ் என்பவர் வாங்கிய ரூ.19 ஆயிரம் கடனுக்கு நாராயணன் ஜாமீன்தாரராக கையெழுத்து போட்டதாகவும், கடனை பெற்ற இன்பராஜ் செலுத்தாததால் தற்போது அதன் நிலுவை தொகை ரூ.42 ஆயிரம் என்றும் அதனை கட்ட வேண்டிய பொறுப்பு நாராயணனுக்கு உண்டு என்பதால் அவரது சிபில் ஸ்கோர் குறைந்துள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்
தான் இன்பராஜுக்கு ஜாமீன் கையெழுத்து போடவில்லை என்று தெரிவித்த நாராயணன் , இதுகுறித்து அவர் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி அன்று திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கினை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் மோகன்தாஸ் மற்றும் உறுப்பினர் பாலு ஆகியோர் விசாரணை விசாரித்தனர்.
மன்னார்குடி மேலவாசல் இன்பராஜ் என்பவர் வாங்கிய ரூ.19 ஆயிரம் கடன் தொடர்பான வங்கியின் அனுமதி கடிதத்தை நீதிமன்றம் ஆராய்ந்து பார்த்தபோது அதில் ஜமீன்தாரராக கையொப்பமிட்டது சீனிவாசன் என்பதும், அந்த சீனிவாசனின் விபரங்களுக்கு பதிலாக, இந்த சீனிவாசன் மகன் நாராயணனின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை சிவில் நிறுவனத்திற்கு இந்தியன் வங்கி பகிர்ந்துள்ள விபரம் தெரிய வந்தது.
இதையடுத்து நாராயணனுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கடனில் ஜாமீன் போட்டதாக சிபில் நிறுவனத்திற்கு தவறான தகவலை தெரிவித்ததோடு, நீதிமன்றத்திலும் அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்று பொய்யான தகவலை கூறியதற்காக இந்தியன் வங்கி நாராயணனுக்கு 30 நாட்களுக்குள் நஷ்ட ஈடாக 3 லட்சம் ரூபாய் பணமும், வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu