RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

இந்தியா

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்.. கலைஞர் கைவினை திட்டம்.. பயன்பெற செய்ய வேண்டியது..! இரு திட்டங்களின் நோக்கம் என்ன..?

Apr 20, 2025 01:30 AM

1002

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்.. கலைஞர் கைவினை திட்டம்.. பயன்பெற செய்ய வேண்டியது..! இரு திட்டங்களின் நோக்கம் என்ன..?

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்.. கலைஞர் கைவினை திட்டம்.. பயன்பெற செய்ய வேண்டியது..!

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டமும், தமிழக அரசின் கலைஞர் கைவினைஞர்கள் திட்டமும் ஒரே மாதிரியான திட்டமா ? இந்த திட்டத்தில் சேர்ந்து தொழில் கடன் பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

இந்தியாவில் பாரம்பரியமான தொழில் செய்துவரும் 18 வகையான கலைஞர்களையும் மற்றும் கைவினைஞர்களையும் ஊக்குவிப்பதற்காக விஸ்வகர்மா திட்டத்தை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். குடும்ப தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 வகையான கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 11ந்தேதி அறிவித்தார். இந்த திட்டத்தை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி செய்பவர், படகுகள் வடிவமைப்பவர்கள், கொத்தனார், கூடை, பாய், துடைப்பம் மற்றும் கயிறு திரிப்பவர்கள், கைநெசவுத் நெசவாளர்கள், பாரம்பரியமாக பொம்மை செய்பவர், நாவிதர், பூ மாலைகள் தொடுப்பவர்கள், சலவையாளர்கள், தையல்காரர்கள் மற்றும் மீன்பிடி வலை பின்னுபவர்கள் பயன் அடைவர்.

தமிழக அரசின் கலைஞர் கைவினைஞர் திட்டத்தில் மேற்கண்ட 18 வகையான தொழில் செய்வோருடன் , பூட்டு தயாரித்தல், இசைக்கருவி தயாரித்தல், மூங்கில் சணல் பனை ஓலை பொருட்கள் தயாரிப்போர், கண்ணாடி வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல் வர்ணம் பூசுதல், பாசிமணி வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் ஆகிய தொழில் செய்வோருக்கும் கடன் உதவி கிடைக்கும். இதில் மொத்தம் 25 வகையான தொழில் செய்வோர் பயனடைவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் பயன் பெற 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும், குறைந்த பட்சம் சம்பந்தப்பட்ட தொழிலை சொந்தமாக செய்பவராகவோ இருக்க வேண்டும், அவர்களுக்கு 5 முதல் 7 நாட்கள் பயிற்சி வழக்கப்படும், 15 நாட்களுக்கு மேல் பயிற்சியில் பங்கேற்றால் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும், கருவிகள் வாங்குவதற்கு ஊக்கதொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், 5 சதவீத வட்டியுடன் முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாயும் 2 வது தவணையாக 2 லட்சம் ரூபாயும் கடன் உதவி வழங்கப்படுகின்றது. கடனுக்கு ஜாமீன் மற்றும் பழைய கடன் விவரம் தேவையில்லை மத்திய மானில அரசுகளின் திட்டங்களில் கடன் பெற்றவர்கள். பழைய கடனை திருப்பி செலுத்தி இருந்தால் போதும். உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்தி விற்க விளம்பரம் உதவி செய்யப்படும் என்று விஸ்வகர்மா திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் pmvishwakarma.gov.in ஆகும் , இங்கு கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் பதிவு செய்து நிதி உதவி, திறன் பயிற்சி மற்றும் நவீன கருவிகள் உள்ளிட்ட திட்ட சலுகைகளை அணுகலாம்.  

கலைஞர் கைவினை திட்டத்தில் கைவினைஞர்களுக்கு 5% வட்டியுடன் ரூபாய் 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். குடும்ப தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 வகையான கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த கடன் உதவியை பெற இயலும் எனக் கூறப்பட்டுள்ளது.


புதிய தொழிலை தொடங்கவும், செய்யும் தொழிலை நவீன வடிவில் மேம்படுத்தவும் கடன் உதவிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் விண்ணப்பிக்கலாம். என்று தெரிவித்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies