RECENT NEWS

இந்திய வரைபடத்திற்குள் மாநில ரீதியான பரத நாட்டியம்

BIG STORIES

"கணவர்- மாமனாரிடம் மன்னிப்பு கேளுங்க".. பதவியை தப்பா பயன்படுத்தாதீங்க…பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்..

Jul 24, 2025 02:10 PM

164

கணவர் மற்றும் மாமனாரை பொய்யான வழக்குகளில் சிறையில் அடைத்த பெண் காவல்துறை அதிகாரிக்கு, உச்ச நீதிமன்றம் கொட்டு வைத்திருக்கிறது.

ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் கடந்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் கணவன்- மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, தம்பதி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பொய் புகாரில், அவருடைய கணவரும், மாமனாரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனால் பெண் அதிகாரியின் கணவர் 109 நாட்களும், அவரது தந்தை 103 நாட்களும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரியின் கணவர் தனக்கு நீதி வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு குறித்த வழக்கு நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதிகள், நீண்ட காலமாக நடந்து வந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீர்ப்பளித்தனர்.

அந்த வழக்கில் அரசியலமைப்பு சட்டத்தின் 142 பிரிவின் கீழ் இருவருக்கும் விவாகரத்து வழங்கினர்.

அதைத்தொடர்ந்து "பெண் அதிகாரியால் அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனுபவித்த துன்பத்தை எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாது" என கூறிய நீதிபதிகள், இதற்காக பெண் ஐபிஎஸ் அதிகாரி அவரது கணவர் மற்றும் மாமனாரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர்.

மேலும் இது தொடர்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரி, கணவருக்கோ அல்லது கணவரின் குடும்பத்திற்கோ எதிராக தனது அதிகாரத்தை ஏதும் பயன்படுத்த கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஐபிஎஸ் அதிகாரி ஜீவனாம்சம் வேண்டாம் என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கானது முடித்துவைக்கப்பட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் 5,000 ரூபாய் சம்பளம்!.. Call Boy Job ரெடியா? கரும்பு தின்னக்  கூலி... தினம் தினம் ஜாலி... மாறிய Climax
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies