RECENT NEWS

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

BIG STORIES

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை ...2 வாரங்கள் கழித்து சிக்கிய இளைஞன்.. கொடூரனைப் பிடிக்க உதவிய AI

Jul 26, 2025 08:20 AM

228

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை ...2 வாரங்கள் கழித்து சிக்கிய இளைஞன்.. கொடூரனைப் பிடிக்க உதவிய AI

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை ...2 வாரங்கள் கழித்து சிக்கிய இளைஞன்..

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை 14 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு, சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். 14 நாட்களாக போலீசாரைத் திணறடித்த நபர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிக்கியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுமியின் வாயைப் பொத்திக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினான். சிறுமியைத் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியான பிறகே விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

சிசிடிவி காட்சிகள் தெளிவில்லாமல் இருந்ததாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி அதிர்ச்சியில் இருந்ததாலும் குற்றவாளி குறித்து போலீசாரால் உடனடியாகத் தகவல் சேகரிக்க முடியவில்லை. சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கண்டனங்கள், சமூக ஆர்வலர்களின் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனையடுத்து, 4 தனிப்படைகளாக இருந்ததை 20 தனிப்படைகளாக உயர்த்தி, தனது நேரடி மேற்பார்வையில் விசாரணையை முடுக்கி விட்டார் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்.

தெளிவற்று இருந்த சிசிடிவி காட்சிகளில் இருந்து செயற்கை நுண்ணறிவு மூலம் குற்றவாளியின் தெளிவான புகைப்படம் உருவாக்கப்பட்டது. குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை வெளியிட்டு, தகவல் கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தது திருவள்ளூர் மாவட்டக் காவல்துறை

சிறுமி வழக்கில் தேடப்படும் நபரின் உருவ அமைப்பு சூலூர்பேட்டையில் தபா ஒன்றில் பணியாற்றும் நபருடன் ஒத்துப் போவதாக பொதுமக்களில் ஒருவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், தாபா உணவகங்களைக் கண்காணித்தனர். அவற்றில் ஒரு தாபாவில் பணியாற்றிய அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் மீது சந்தேகப் பார்வை விழுந்தது. அந்த நபர் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் சுற்றித் திரிவது தெரியவந்து, போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கைதான நபரை கவரப்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை மேற்கொண்ட நிலையில், குற்றவாளியை தங்களிடம் காண்பிக்குமாறு கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.

கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான அந்த இளைஞர், தாபாவிற்கு கூட செல்லாமல் தொடர்ந்து விடுமுறை எடுத்து வந்ததாகவும் வாரம் தோறும் சனிக்கிழமை விடுமுறை எடுத்து தமிழக எல்லைப் பகுதி கிராமங்களுக்குச் சுற்றுலா போல செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின் அந்த நபரை போலீசார் நீதிமன்றம் அழைத்துச் சென்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''6 பாகிஸ்தான் போர் விமானங்களை வீழ்த்தினோம்''.. இந்திய விமானப் படை தளபதி அறிவிப்பு..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies