RECENT NEWS

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

BIG STORIES

"உசுரே நீ தானே..! நீ தானே" வீட்டில் பாலியல் தொழிலாளி பிணமாக கிடந்த 'திகில்'.. வடக்கு நண்பர் சிக்கியது எப்படி?

Jul 24, 2025 04:17 PM

300

"உசுரே நீ தானே..! நீ தானே" வீட்டில் பாலியல் தொழிலாளி பிணமாக கிடந்த 'திகில்'.. வடக்கு நண்பர் சிக்கியது எப்படி?

"உசுரே நீ தானே..! நீ தானே" வீட்டில் பாலியல் தொழிலாளி பிணமாக கிடந்த 'திகில்'.. வடக்கு நண்பர் சிக்கியது எப்படி?

சென்னையில் பாலியல் தொழில் செய்து வந்த பெண், வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் உத்திரபிரதேசத்தில் தலைமறைவான வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த 38 வயது பெண் சரஸ்வதி. இவர் 16 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கணேசமூர்த்தி தனது இரண்டு மகன்களோடு கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்துள்ளார். சரஸ்வதி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சென்னை கொளத்தூர் தனம்மாள் நகர் முதல் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார்.

ஒவ்வொரு வாரமும் சரஸ்வதி கும்மிடிப்பூண்டிக்கு சென்று தனது கணவரையும், மகன்களையும் பார்த்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

 அண்மையில் கணேசமூர்த்தி சரஸ்வதிக்கு போன் செய்தபோது, போன் சுவிட்ச் ஆப்பில் இருந்துள்ளது. போனில் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆகியிருக்கும் என நினைத்த கணேசமூர்த்தி, நீண்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் மனைவிக்கு போன் செய்துள்ளார்.

அப்போதும் போன் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் சந்தேகமடைந்த கணேசமூர்த்தி, தான் அங்கு சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என தனது நண்பர்களான துரைராஜ், தேவசகாயம் ஆகியோரிடம் தெரிவித்துவிட்டு கொளத்தூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இதற்கிடையே சரஸ்வதி வசிக்கும் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் முனுசாமி என்பவர் சரஸ்வதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே அங்கு வந்த போலீசார் கதவு பூட்டிய நிலையில் இருந்த சரஸ்வதியின் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு சரஸ்வதி, உடல் அழுகிய நிலையில் குடல் வெளியே வந்தவாறு இறந்து கிடப்பதை கண்டறிந்தனர்.

உடனே சடலத்தை மீட்ட போலீசார், சரஸ்வதியின் உடலை உடற்கூறாய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சரஸ்வதியின் கணவருக்கு போலீசார் தகவல் தெரிவித்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு விசாரணையை தொடங்கினர்.

சரஸ்வதியின் வீட்டில் மது பாட்டில்களும், சிகரெட் பாக்கெட்டுகளும் கிடந்ததை போலீசார் கண்டறிந்தனர். அதுமட்டுமில்லாமல் உயிரிழந்த சரஸ்வதி, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததும், பின்னர் அவர் சில நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் சரஸ்வதியின் பைக், மோதிரம், செல்போன் ஆகியவை காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. ஒரு வேளை பணத்திற்கு ஆசைப்பட்டு யாரேனும் சரஸ்வதியை கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியபோது இரவில் சரஸ்வதியின் வீட்டில் இருந்து ஒரு வட மாநில இளைஞர் செல்வது தெரியவந்துள்ளது.

அந்த இளைஞரின் புகைப்படத்தை போலீசார் அக்கம் பக்கத்தில் காண்பித்து இவர் யார்? என கேட்டபோது, சரஸ்வதியும், அந்த இளைஞரும் ஒன்றாக சேர்ந்து வீடு எடுத்து தங்கி வந்தது தெரியவந்துள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கான்பூரைச் சேர்ந்த மோசின் அன்சாரி என்பதும், வீட்டிற்கு 12வது மகனான அந்த இளைஞர் , அண்ணாநகரில் அயர்ன் செய்யும் கடையில் மாதம் 25 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

அன்சாரிக்கு சரஸ்வதியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அன்சாரி தனது வருமானத்தை வீட்டிற்கு அனுப்பாமல் முழுவதுமாக சரஸ்வதிக்கே செலவு செய்து வந்துள்ளார்.

சரஸ்வதி தனக்கு கணவன், குழந்தைகள் இருப்பதை மறைத்து திருமணம் ஆகவில்லை என அன்சாரியை நம்ப வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளைஞர், சரஸ்வதியை திருமணம் செய்யும் முடிவில் இருந்துள்ளார்.

சரஸ்வதி தனது கணவர் கணேசமூர்த்தியோடு இருக்கும் புகைப்படத்தை பார்த்த அன்சாரி, இது யார் என கேட்டதற்கு, தனது அண்ணன் என சரஸ்வதி சமாளித்துள்ளார்.

சரஸ்வதி உயிரிழப்பதற்கு முன்பு ஒரு வாரம் முன்பு, சரஸ்வதி போனில் ஆண்களோடு பேசுவதை பார்த்து ஆத்திரமடைந்த அன்சாரி வாக்குவாதம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து இருவரும் கோவளம் பீச்சிற்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு சமாதானம் ஆனதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, மாலை 7 மணியில் இருந்தே வீட்டில் சரஸ்வதியும், அன்சாரியும் மது அருந்த ஆரம்பித்துள்ளனர். இருவரும் தலா நான்கு குவாட்டர் அளவிலான மதுவை அருந்தியதாக சொல்லப்படுகிறது.

அப்போது சரஸ்வதிக்கு போன் ஒன்று வந்ததாகவும், இந்த இரவில் யார் உனக்கு போன் செய்கிறார்கள்? என அன்சாரி சண்டையிட்டுள்ளார்.

அப்போது ஆத்திரத்தில் அன்சாரி காலால் சரஸ்வதியின் வயிற்றில் ஓங்கி எட்டி உதைத்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே உடல் நிலையில் சரியில்லாமல் இருந்த சரஸ்வதி, உடனே மயங்கி விழுந்துள்ளார்.

சரஸ்வதியை எழுப்ப முயற்சித்தும், அவர் எழாததால் அன்சாரி பதறியுள்ளார். பின்பு தான் சரஸ்வதி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

உடனே சரஸ்வதியின் நகை, போன், மற்றும் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அன்சாரி அண்ணாநகருக்கு சென்று அங்கு வாகனத்தை விட்டுவிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருக்கும் சிசிடிவியில் அன்சாரி கையில் ஒரு பையோடு நடந்து செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் உத்திரபிரதேசத்திற்கு அன்சாரி தப்பி சென்றது தெரியவந்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் வைத்து போலீசார் அன்சாரியை கைது செய்த நிலையில், அங்குள்ள நீதிமன்றத்தில் டிரான்ஸிட் வாரண்ட் பெற்று சென்னை அழைத்து வருகின்றனர்.

மேலும் சரஸ்வதி ஒரு பாலியல் தொழிலாளி என்பது கூட தனக்கு தெரியாது, தான் சரஸ்வதியை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் அன்சாரி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான அன்சாரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''6 பாகிஸ்தான் போர் விமானங்களை வீழ்த்தினோம்''.. இந்திய விமானப் படை தளபதி அறிவிப்பு..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies