RECENT NEWS

முன்னால் சென்ற லாரியை R15 பைக்கில் முந்த முயன்றபோது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி இருவர் பலி.!

தமிழ்நாடு

வில்லங்க 'டயட்' விபரீதமாக மாறியதா? குடும்பமே நம்பியிருந்த சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?

Jul 25, 2025 01:19 AM

401

வில்லங்க 'டயட்' விபரீதமாக மாறியதா? குடும்பமே நம்பியிருந்த சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?

வில்லங்க 'டயட்' விபரீதமாக மாறியதா? குடும்பமே நம்பியிருந்த சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். கூலி தொழிலாளியான இவருக்கு 17-வயதில் சக்தீஷ்வர் என்ற மூத்த மகனும், ஒரு மகளும் இருந்தனர். 12-ஆம் வகுப்பு முடித்த சக்தீஷ்வர், பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கவுன்சிலிங்கிற்காக காத்திருந்துள்ளார்.

உடல் எடை அதிகமாக இருந்ததால், எங்கு தான் கல்லூரியில் சேர்ந்த பின்பு சக மாணவர்கள் உருவ கேலி செய்வார்களோ என நினைத்து பயந்த சக்தீஷ்வர் உடல் எடையை குறைக்க முயன்றுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக வீட்டில் இருந்த சக்தீஷ்வர், ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சக்தீஷ்வர் தனது அம்மாவின் மொபைலில் இருந்து யூடியூப்பில் சில டயட் வீடியோக்களை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

அதன் படி, கடந்த மூன்று மாதங்களாக சக்தீஷ்வர் உணவருந்தாமல் பழசாற்றுகளை மட்டுமே உட்கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர், திடீரென மயங்கி விழுந்துள்ளார் . இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சக்தீஷ்வரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் ஏற்கனவே சக்தீஷ்வர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய குளச்சல் அரசு மருத்துவமனை மருத்துவர், சிறுவன் உடல் பருமன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஆனால் சக்தீஷ்வரின் குடும்பத்தினர், சிறுவன் தொடர்ந்து ஜூஸ் மட்டுமே அருந்தி வந்ததால் சளி காரணமாக மூச்சு திணறி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

வறுமையான குடும்பம் என்பதால் சக்தீஷ்வர் வேலைக்கு சென்றால் குடும்ப சூழ்நிலை மாறிவிடும் என குடும்பமே சக்தீஷ்வர் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்ததாகவும், ஆனால் தற்போது அவர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக சக்தீஷ்வரின் மாமா தெரிவித்துள்ளார்.

சக்தீஷ்வர் சளியின் காரணமாக மூச்சு திணறி உயிரிழந்தாரா? இல்லை உடல் பருமனால் மாரடைப்பால் உயிரிழந்தாரா? இல்லை வேறு எதுவும் காரணமா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் தெரியவரும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் உடல் பருமனை குறைக்க சிலர் யூடியூப் வீடியோக்களை பார்த்துவிட்டு விபரீத செயலில் ஈடுபட வேண்டாம், மருத்துவரின் ஆலோசனையோடு உடல் பயிற்சி மற்றும் டயட் கண்ட்ரோல் மேற்கொண்டால் உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

உயிரிழந்த சக்தீஷ்வரின் இரண்டு கண்களையும் அவர்களது குடும்பத்தினர், மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“வேலையத்தவன் மூளையில் சாத்தான் குடியிருக்கும்..”வார்த்தையால் வெளுத்த டிஜிபி..!
மாணவர்களுக்கு சொன்ன  புத்திமதி
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies