RECENT NEWS

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி..! போட்டியை துவக்கி வைத்த கொங்கு ஈஸ்வரன்..

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி..! போட்டியை துவக்கி வைத்த கொங்கு ஈஸ்வரன்..

Apr 27, 2025

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி..! போட்டியை துவக்கி வைத்த கொங்கு ஈஸ்வரன்..

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி..! போட்டியை துவக்கி வைத்த கொங்கு ஈஸ்வரன்..

Apr 27, 2025

முகப்பு

“மாப்பிள்ளை வீட்டில்தான் வரதட்சணை கொடுத்தார்கள்...” நிஜத்திலும் ஜெயித்த ரியல் நாயகி ரம்யா பாண்டியன்.. ஆச்சர்ய தகவல்கள்!

Apr 14, 2025 05:17 AM

1596

“மாப்பிள்ளை வீட்டில்தான் வரதட்சணை கொடுத்தார்கள்...” நிஜத்திலும் ஜெயித்த ரியல் நாயகி ரம்யா பாண்டியன்.. ஆச்சர்ய தகவல்கள்!

உலகத்திலேயே வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் சித்திரவதைக்கு ஆளாவது, தற்கொலை செய்துகொள்வது, கொலை செய்யப்படுவது என வரதட்சணை மரணங்கள் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ‘ஜோக்கர்’ படம் மூலம் தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியனின்திருமணம்...அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட வரதட்சணை குறித்து வெளியான தகவல் சமூக வலைதலங்களில் பரவி, ஆச்சர்யத்தையும் மெய்ச்சிலிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

லஞ்ச, ஊழல், சமூக அவலங்கள் என தோலுரித்துக் காட்டியதோடு, இன்றைய கிராமங்களில் இன்னும்கூட திறந்தவெளி கழிப்பிழடங்களில், தினந்தோறும் கிராமப்புறப் பெண்கள் படும் மரண அவஸ்தையை மையப்படுத்தி, இதயத்தை உடைத்த படம்தான் ‘ஜோக்கர்’. அதில், திருமணம் செய்துகொண்டு வாழப்போகும் கணவரின் வீட்டை முன்கூட்டியே சென்று பார்ப்பதோடு, கழிப்பறை இல்லையா? என கேள்வி எழுப்பி, கழிப்பறை கட்டினால் திருமணம் செய்துகொள்வதாக நிபந்தனை விதித்து, திருமணம் செய்துகொள்ளப்போகும் இளம்பெண்களை யோசிக்கவைத்த; விழிப்புணர்வை ஏற்படுத்திய கதாப்பாத்திரத்தில் நடித்தவர்தான், ரம்யா பாண்டியன்.

இதனைத் தொடர்ந்து ‘ஆண் தேவதை’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றவர். குக் வித் கோமாளி, பிக் பாஸ் என சின்னத்திறையிலும் ‘ரன்னர் அப்’ ஆக பாராட்டு பெற்றவர். அடிக்கடி, ஃபோட்டோ ஷூட்களால் எடுப்பான புகைப்படங்களை வெளியிட்டு, இளைஞர்களை கிறங்கடிப்பவர்.

இந்தநிலையில், இவர் திருமணம் குறித்து பல்வேறு ஆச்சயத்தகவல்களை அவரது தாயார் சாந்தி, பகிர்ந்துகொண்டவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. இதன்மூலம், படத்தில் பெண்களின் உரிமைக்காக நடித்ததைப்போலவே, நிஜத்திலும் இப்படி பெண்களின் உரிமையை நிலைநாட்டி ஜெயித்துவிட்டாரே என இணைய தளவாசிகள், மெய்ச்சிலிர்த்து பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ரம்யா பாண்டியனின் சொந்த திருநெல்வேலி. அப்பா, துரை பாண்டியன் இயக்குநர். அம்மா, சாந்தி. அப்பா துரை பாண்டியன், சினிமாத்துறையில் இருந்ததால், திருநெல்வேலியிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளது, ரம்யா பாண்டியனின் குடும்பம்.

ஆனால், அப்பா துரைபாண்டியன் இயக்கிய ‘ஊழியன்’, ‘மாஸ்டர் ப்ளான்’ உள்ளிட்ட படங்கள் சக்சஸ் ஆகாததால், நஷ்டமாகியுள்ளது. இதனால், மீண்டும் திருநெல்வேலிக்கே சென்று ஹோட்டல் பிசினஸ் செய்துள்ளார்கள் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டும் தாய் சாந்தி, ரம்யா பாண்டியன் குறித்த இளமைப்பருவ தகவல்களையும் கூறியுள்ளார்.

ரம்யா பத்தாவது படிக்கும்போது ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துள்ளார். இதனால், பிரபல பள்ளியில் மெரிட்லேயே சீட் கிடைத்துள்ளது. அங்கு, ப்ளஸ்டூவில் பள்ளியிலேயே மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அப்படியொரு படிப்பாளிதான், ரம்யா. ஒருநாள் கூட பள்ளிக்கு லீவு போடாமல் சென்றுவிடுவாராம். அதனாலேயே, ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவியாக இருந்துள்ளார். அவரது, டிசிப்ளினுக்காகவே பள்ளியில் மூன்று மெடல்களை வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பெரிய பொருளாதார வசதி இல்லை என்றாலும் இப்படி, மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த ரம்யா பாண்டியனின் குடும்பத்தில் திடீரென சோகம் சூழ்ந்துள்ளது. அதாவது, வயலுக்கு சென்ற ரம்யாவின் அப்பா துரை பாண்டியன் விஷப்பூச்சி கடித்து, உயிரிழந்துள்ளார். அதற்குப்பிறகு, இன்னும் அதிகமான பொறுப்புகளோடு இருந்துள்ளார், ரம்யா.

இந்தநிலையில்தான், சினிமா வாய்ப்புகள் வந்து நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து யோகா கற்றுக்கொள்ள ரிஷிகேஷுக்கு சென்றபோது, வாழும் கலை அமைப்பின் யோகா மாஸ்டர் லவல் தவானை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதுவும், மாஸ்டர் லவல் தவான், ரம்யாவின் தாயாரிடம் ஒப்புதல் கேட்டதை மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது, கார்த்திகை தீபம் அன்று வீட்டிற்கு வந்த லவன் தவான், திடீரென தங்க மோதிரத்தை எடுத்து ரம்யாவின் தாயார் முன் தரையில் முட்டி போட்டு ‘அம்மா... நீங்க என்னோட மாமியாரா வருவீங்களாம்மா?’ என கேட்டு புரப்போஸ் செய்துள்ளார்.

அப்பா, இல்லாத பெண் என்பதால் ரம்யாவை ரொம்பவே கேர் எடுத்துக்கொண்டுள்ளார், லவன் தவான். தங்களின் மீது மிகவும் மரியாதையும் அக்கறையும் கொண்டவர். இப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைந்ததற்கு ரம்யா மட்டுமல்ல, தாங்கள் ரொம்பவே கொடுத்து வைத்திருக்கவேண்டும் பெருமையோடு கூறியுள்ளார், ரம்யாவின் தாயார் சாந்தி.

தொடர்ந்து அவர் கூறியதுதான் ஆச்சர்யம் மிகுந்தவர், “மாப்பிள்ளை குடும்பத்திற்கு பஞ்சாப்பில் 8 மெடிக்கல் டெஸ்ட் லேப்கள் உள்ளது. 65 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். ரம்யா திருமணமாகி மருமகளாக முதல் தடவை வீட்டுக்கு வரப்போகிறாள் என்றதும், மணமகனின் வீட்டார் தங்களது பெட்ரூமையே மிகவும் பெரிதாக மாற்றியுள்ளார்கள். மாமனார் ரம்யா மீது பாசமாக இருப்பார். அவரே, ரம்யா தங்கப் போகிற வீட்டிற்கு லைட்டிங், டெக்கரேஷன்எல்லாம் அழகா பண்ணியிருக்கார்” எனக் கூறிய ரம்யா பாண்டியனின் தாயார் சாந்தி அதற்குப்பிறகு கூறியதுதான் மிக முக்கியமானது. அதாவது, “மணமகன் வீட்டார் எங்களிடமிருந்து ஒரு ரூபாய்க்கூட வரதட்சணை கேட்கவில்லை. பஞ்சாப் முறைப்படி பெண் வீட்டில் வரதட்சணை கேட்கக்கூடாதாம். மாப்பிள்ளைதான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்ளவேண்டுமாம்.

அப்படி, மாப்பிள்ளை வீட்டில் வரதட்சணை வாங்கினால் கெளரவக் குறைச்சலாக பார்ப்பார்களாம். திருமணத்திற்கு முன்பு, மாப்பிள்ளையின் அப்பா, லட்சத்துல ஒரு பெரிய தொகையை கொடுத்து, நகைகளை வாங்கிக்கக்கொள்ளச் சொன்னார். அதனால், எங்களுக்கு திருமணம் செலவு என்று எதுவும் இல்லை. திருமணம் முடிந்தபிறகு ஒரு வாரம் பஞ்சாப்பில் உள்ள மாப்பிள்ளை வீட்டில்தான் இருந்தாள். அப்போது, அடுப்பு பற்ற வைத்து, ரம்யா முதல் முதலில் கேசரி செய்து கொடுத்திருக்கிறாள். அதற்கு, அவளது மாமியார், பாக்ஸில் வைத்து, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.

பஞ்சாப்பில் எல்லாவற்றிற்குமே மாப்பிள்ளை வீட்டில், பெண்ணிற்கு இதுபோல் பணம், கிஃப்ட் கொடுப்பார்களாம். ஹனிமூனுக்கு தாய்லாந்து போனார்கள். அப்போதும் மாமியார் ஃபோன்செய்து ‘1 லட்ச ரூபாய் பணம் போட்டிருக்கேன். ஏதாவது, பர்ச்சேஸ் பண்ணிக்கோம்மா’ எனச் சொல்லியிருக்கிறார். பணத்தை மட்டுமல்ல, குணத்தையும் காட்டுகிற குடும்பம்” என பெருமிதத்தோடு பகிர்ந்துகொண்டுள்ளார், ரம்யாவின் தாயார் சாந்தி.

சாதாரணமாக நடக்கும் திருமணங்களிலேயே கார், தங்கநகைகள், பணம் என வரதட்சணை வாங்கிக்கொண்டு திருமணம் செய்வதும் திருமணத்துக்குப்பிறகும் வரதட்சணைக் கேட்டு பெண்களை சித்திரவதை செய்துகொண்டிருக்கும் சூழலில், ரம்யா பாண்டியன் மணமகன் வீட்டாரிடம் வரதட்சணை பெற்று திருமணம் செய்துகொண்டது, இணையத்தில் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.


SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies