RECENT NEWS

பட்டியலின மாணவரிடம் பாகுபாடு காட்டுவதாகப் புகார்.. அரசு நடுநிலைப் பள்ளியில் 4 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

முகப்பு

“இதே வேலையா தான் மாப்பிள்ளை இருந்திருக்கான்..” ரிதன்யாவுக்கு கொடுமைகள்..! மாமியார் சிறையில் அடைப்பு

Jul 05, 2025 02:24 AM

10118

ரிதன்யாவின் மாமியார் சிறையில் அடைப்பு மாப்பிள்ளை செய்த விபரீத கொடுமைகள்

திருப்பூர் மாவட்டத்தை மட்டுமல்ல தமிழகத்தையே கலங்கவைத்துள்ள புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் நாளுக்கு நாள் வெளியாகின்ற புது புது தகவல்கள் பெண் வீட்டாரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருக்கின்றது...

அழகுக்கு அழகு சேர்க்க ஒப்பனை செய்து.. வளை குலுங்க தங்கத்தில் வளையலிட்டு.. புன்சிரிப்புடன் திருமண வாழ்க்கைக்குள் புகுந்தவர் ரிதன்யா..!

மாப்பிள்ளைக்கு வரதட்சனையாக கொடுக்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வால்வோ காரில் திருமணம் முடிந்து சிரித்தபடியே மாமியார் வீட்டுக்கு சென்ற ரிதன்யா கனவிலும் நினைத்திருக்கமாட்டார் தனக்கு இப்படி ஒரு முடிவு நேரும் என்று...

78 நாட்களிலேயே வரதட்சனை கொடுமை மற்றும் கணவனின் பாலியல் கொடுமைகளால் உயிரை மாய்த்துக் கொள்வதாக ஆடியோ வெளியிட்டு, விபரீத முடிவால் உயிரிழந்து காருக்குள் சடலமானார் ரிதன்யா..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த புதுப்பெண்ணான ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த இருவருடன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட மாமியார் சித்ராதேவிக்கு உடல் நலக்குறை எனக் காரணம் காடி பைண்டிங் ஆர்டர் முறையில் போலீசார் விடுவித்தனர்.

சிகிச்சை ஏதும் மேற்கொள்ளாமல் சித்ராதேவி தலைமறைவானார். அவர்கள் காங்கிரஸ் குடும்பம் என்பதால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி போலீசாரிடம் பொய்யான தகவலை கூறி தப்பியதாக குற்றஞ்சாட்டிய பெண் வீட்டார் அவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

போலீசாருக்கு எதிராக பல மட்டத்திலும் ரிதன்யாவின் பெற்றோர் அடுக்கடுகான புகார்களை தெரிவித்து வந்ததை தொடர்ந்து ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியை சேவூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது சித்ரா தேவி ,தெம்பாக நடந்து வந்தார்

சித்ராதேவியை செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்து காண்டான போலீசார், உடனடியாக கதவை பூட்டும்படி கூறியதோடு தொடர்ந்து விஷூவல் எடுக்க அனுமதிக்கவில்லை

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சித்ராதேவி நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே திருப்பூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்து விட்டு வெளியே வந்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை , தனது மகளின் உயிரிழப்பிற்கு காரணமான அந்த 3 பேருக்கும் தூக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆதங்கம் தெரிவித்தார்

இதற்கிடையே தனது மகளுக்கு என்ன மாதிரியான கொடுமைகள் மாப்பிள்ளை வீட்டில் நிகழ்த்தப்பட்டது என்பதை ரிதன்யாவின் தாய் விவரித்தார், மாப்பிள்ளை கவின்குமார் குடும்பத்தினருக்கு வாடகை பணமே மாதம் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவதால் அவர் வேலைக்கு செல்லாமல் முழு நேரமும் படுக்கை அறையிலேயே இருந்துள்ளார். செல்போனில் கண்ட கண்ட வீடியோக்களையும் பார்த்து விட்டு உடல் ரீதியாக பல விதமான கொடுமைகள் செய்ததாக ரிதன்யா தன்னிடம் தெரிவித்ததாக அவரது தாய் கூறினார்

தனது மகளுக்கு செலவுக்கு 100 ரூபாய் பணம் வேண்டுமானாலும் மாமனாரிடம் சென்று தான் காத்திருந்து பெற வேண்டி இருந்ததாகவும், கூடுதலாக 200 சவரன் நகையும், மாப்பிள்ளை கேட்டப்படி அவருக்கு ஒரு தொழிலும் வைத்து கொடுக்க வில்லை என்பதால் தனது மகளை சோபாவில் உட்கார அனுமதிக்காமல் குற்றவாளி போல நிற்க வைத்தே கொடுமை படுத்தியதால் தங்கள் மகள் மன அழுத்தம் ஏற்பட்டு விபரீத முடிவை மேற்கொண்டதாக தெரிவித்தார்

நகையையும், பணத்தையும் அள்ளிக்கொடுத்து திருமணம் செய்து வைத்தாலும், போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று பேராசை பிடித்து அலையும் சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கு மிகச்சரியான சாட்சியாக மாறி இருக்கின்றனர் பணக்கார வீட்டு மாப்பிள்ளை கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்திராதேவி.

இருப்பதை வைத்து இச்றப்புற வாழாமல் , இருப்பது போதாது என்று வீட்டிற்கு வாழ வந்த மருமகளை ஏதோ கடன்காரி போல மாமியார் சித்ரவதை செய்ய... மனைவியும் ஒரு உயிர் தானே என்று நினைக்காமல் 24 மணி நேரமும் படுக்கை அறையில் அதே வேலையாக இருந்தால் அந்த பெண்ணின் உடல் நிலை என்னவாகும் ? பெரிய குடும்பம், கை நிறைய பணம் என்றாலும் 10 ரூபாய் வேணுமுன்னாலும் மாமனாரிடம் தான் கைகட்டி நிற்கனுமாம்.. இப்படி ஒரு அசாதாரண வாழ்க்கை வாழ்ந்ததால் குடும்பத்தோடு கம்பி எண்ணி வருகின்றது ஈஸ்வர மூர்த்தி குடும்பம் என்கின்றனர் பெண் வீட்டார். தங்கள் வீட்டு பெண் உயிரிழப்பிற்கு சட்டம் சரியான தண்டனை வழங்க வேண்டும் என்று கண்ணீரோடு காத்திருக்கின்றனர்.

ஆசையில் செய்தாலும், பேராசையில் செய்தாலும்.. குற்றம் கேடு தரும்..!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மெக்டொனால்டு பர்கரில் நெழிந்த புழுக்களால் அதிர்ச்சி.. அபராதம் இல்லை.. ஆய்வு மட்டுமே..! அதிகாரிகள் பாரபட்சமான நடவடிக்கை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies