முகப்பு
"அந்த ஆம்பள போலீஸ் தான் சாவுக்கு காரணம்" கரு கலைந்த சோகம் பெண் போலீஸின் இறுதி கடிதம்
Jul 04, 2025 09:02 AM
95
"அந்த ஆம்பள போலீஸ் தான் சாவுக்கு காரணம்" மனதை உருக்கிய பெண் காவலரின் இறுதி கடிதம்..!
தனது இறப்பிற்கு காரணம் அந்த ஆண் காவலர் தான் என பெண் காவலர் ஒருவர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான சோனியா. இவர் சென்னை ஆவடி ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கீழ்கவரப்பட்டு பகுதியை சேர்ந்த கார் டிரைவரான முகிலன் என்பவரை சோனியா காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார்.
கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோனியா கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மகள் கணவர் முகிலனின் பாதுகாப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் சோனியா ஆவடியில் இருந்து தனது சொந்த ஊரான கொங்கராயனுருக்கு திரும்பியுள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது கணவர் முகிலனுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு மகளை பார்க்க வேண்டும் என கூறி மூன்று பேரும் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர்.
மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சோனியா, கணவர் முகிலனுக்கு போன் செய்து தான் பூச்சி மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகவும், மகளை நன்றாக பார்த்துக் கொள் எனவும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முகிலன் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கிருந்தவர்கள் சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சோனியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது இறப்பதற்கு முன்பு சோனியா தனது கணவர் முகிலனுக்கு செல்போன் மூலம் கடிதம் ஒன்று எழுதி அனுப்பியது தெரியவந்துள்ளது.
கணவரை பிரிந்த சோனியா ஆவடியில் பணிபுரிந்து வந்த போது, 13 ஆம் படைப்பிரிவில் ஆண் காவலராக வேலைபார்த்து வந்த ராஜீ என்பவரோடு நான்கு மாதத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், கணவரை விவாகரத்து செய்த பின் தான் உன்னை திருமணம் செய்து கொள்வதாக சோனியாவிடம் காவலர் ராஜீ ஆசை வார்த்தை கூறியதாக சொல்லப்படுகிறது.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், சோனியா கர்ப்பமாகியுள்ளார். இது குறித்து ராஜீவிடம் கூறியதற்கு கருவை கலைத்தால் தான் திருமணம் செய்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. கருவை கலைக்க மறுத்த சோனியா, ராஜீ மீது உயரதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் ராஜீ புகாரை வாபஸ் பெறுமாறு கூறியதால் சோனியா புகாரை திரும்ப பெற்றதும் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் கர்ப்பிணியாக இருந்த பெண் காவலர் சோனியாவிற்கு கர்ப்பிணி என்று கூட பாராமல் பணியில் அதிக சுமை கொடுக்கப்பட்டதாகவும், அதனால் தனது கரு கலைந்து விட்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உடல் நிலை சரியில்லாததால் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பியதாகவும், கணவரை பிரிந்த பெண் என்கிற காரணத்தால் தன்னை தவறான பெண்ணாக பார்ப்பதாகவும் காவலர் சோனியா உருக்கமாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
உடலை மட்டுமே அனுபவித்து தன்னை ஏமாற்றிய ஆண் காவலர் ராஜீ தான் எனது சாவிற்கு காரணம் என்றும், தான் இறந்த பின் தனது கணவர்,குழந்தை, குடும்பத்தார் என யாரையும் தொல்லை செய்ய வேண்டாம் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஆண் காவலர் ராஜீவை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த பெண் காவலர் சோனியா உடலுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பாலிமர் செய்திகளுக்காக கடலூர் செய்தியாளர் லெஸ்ஸி ராஜா
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu