முகப்பு
இன்ஸ்டா காதலால் நின்ற தாயின் மூச்சு.. காதலனுடன் சேர்த்து தாயை தீர்த்துக்கட்டிய மகள்!
Jun 25, 2025 04:00 PM
178
காதலனுடன் சேர்த்து தாயையே தீர்த்துக்கட்டிய மகள் காதலுக்கு தடையாக இருந்ததால் ஆத்திரம்!
காதலுக்கு தடையாக இருந்த தாயை, தனது காதலன் மற்றும் அவரது தம்பியுடன் சேர்ந்து மகள் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜீடிமெட்லாவில் உள்ள என்.எல்.பி நகரைச் சேர்ந்தவர் அஞ்சலி. கணவர் பிரிந்த நிலையில் தெலுங்கானா கலாச்சார பிரிவில் நாட்டுப்புற பாடகியான இவர், தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். இதில் மூத்த மகள் 10 வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுமி 8 மாதங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராமில் நல்கொண்டாவைச் சேர்ந்த பகில்லா சிவா என்ற 19 வயது இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியுள்ளது.
அதைத்தொடர்ந்து டி.ஜே-வாக இருந்த சிவாவும், சிறுமியும் அவ்வப்போது போன் மூலம் காதலை வளர்த்துவந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் குறித்து தாய் அஞ்சலிக்கு தெரியவந்தது. இதனால் மகளிடம் ”இந்த வயதில் இது சரியானது அல்ல. நீ நன்றாகப் படிக்க வேண்டும்” என கண்டித்ததாக கூறப்படுகிறது.. ஆனால் சிவாவுடனான காதலை கைவிட மறுத்த சிறுமி, தனது காதலனுடன் செல்ல முடிவு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் சிறுமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு, தனது வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு, காதலன் சிவா உடன் சென்றிருக்கிறார். பின்னர் இதனையறிந்த அஞ்சலி, உடனடியாக காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து பல இடங்களில் தேடிய போலீசார், சிறுமியை அவரது காதலனுடன் கண்டுப்பிடித்தனர்.
பின்னர் காவல்நிலையம் அழைந்துவந்த போலீசார், சிறுமி மைனர் என்பதால், இந்த திருமணம் சட்டப்படி செல்லாது. எனவே பிரிந்து செல்லும்படி, இரண்டு பேரையும் எச்சரித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நல்ல பிள்ளை போல் வீட்டில் தங்கியிருந்த அந்த சிறுமி, தனது காதலனுடன் சேர்ந்து பயங்கர திட்டம் ஒன்றை தீட்டி இருந்தார். அந்த திட்டத்தின் படி, சிறுமியின் காதலன் சிவா, மற்றும் அவனுடைய சகோதரன் ஆகியோர் நலகொண்டாவில் இருந்து சிறுமியின் வீடு இருக்கும் ஜி டி மிட்டலாவுக்கு வந்து சேர்ந்தனர்.
சம்பவத்தன்று, சிறுமியின் காதலன் சிவா மற்றும் அவரது சகோதரன் ஆகிய இரண்டு பேரும் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அஞ்சலி வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தபோது, பின் பக்கதிலிருந்து அவரது முகத்தை பெட்ஷீட்டால் மூடி, அவரை தாக்கினர். இதனால் அஞ்சலி நிலைகுலைந்து கீழே விழுந்தார். அதைத்தொடர்ந்து தனது சகோதரியை மற்றொரு அறையில் வைத்து பூட்டிய சிறுமி, வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து, தனது தாயின் தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்திருக்கிறார். TO
அஞ்சலி வீட்டில் இருந்து, அலறும் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், ஓடி சென்று பார்ப்பதற்குள், அந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பிச்சென்ற மூவரையும், மடக்கி பிடித்த போலீசார் அவர்களை கைது செய்து, மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட அஞ்சலி தெலுங்கானாவில் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை சாக்கலி அயிலமாவின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திர போராட்ட கால முதல் புகழ்பெற்ற விளங்கிய ஒரு குடும்பத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu