முகப்பு
சுக பிரசவத்தில் ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தை மறுநாளே உயிரிழப்பு.. மருத்துவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை இறந்ததாகப் பெற்றோர் புகார்
Jun 10, 2025 06:51 AM
105
சுக பிரசவத்தில் ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தை மறுநாளே உயிரிழப்பு..
திருச்சி புத்தூர் ஜேனட் மருத்துவமனையில் சுக பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவர்களின் அஜாக்கிரதையால் மறுநாளே இறந்ததாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்ததால், பிரேத பரிசோதனை செய்வதற்காக தாசில்தார் முன்னிலையில் குழந்தையின் உடல் சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
கடந்த மாதம் 20-ம் தேதி, ராதிகா என்பவற்கு 2 கிலோ 650 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தைக்கு செவிலியர்களின் அறிவுறுத்தலின் பேரில் தாய் பால் பவுடரை தண்ணீரில் கரைத்து சங்கில் ஊற்றி கொடுத்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, மேல்சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு மறுநாளே உயிரிழந்தது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஜேனட் மருத்துவமனை மீது சந்தேகத்துக்கு இடமான மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆரோக்கியமாக பிறந்த குழந்தை எப்படி இறந்தது என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகுதான் தெரியவரும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu