முகப்பு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல்.. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..
Jun 05, 2025 09:36 AM
35
சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கவில்லைக்கூறி பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றிரவு 9 மணிக்கு மேல், திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு மிக குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பயணிகள், இரவு 11 மணியளவில் புறப்பட்ட ஒருசில பேருந்துகளை முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கும் பேருந்துகளை இயக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த மறியலில் பங்கேற்றதால், நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடந்த காவல்துறையினரிடம், பேருந்துகளை உடனடியாக இயக்கக் கோரி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு மேல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று முகூர்த்த நாள் என்பதால் பேருந்து நிலையத்திற்கு அதிகளவில் பயணிகள் வந்த நிலையில், போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu