முகப்பு
30 நிமிடத்தில் பழிக்கு பழி.. கொலையாளியின் தாயை வெட்டிக் கொன்ற கும்பல்..! இரட்டைக் கொலை பின்னணி..
Jun 02, 2025 04:23 PM
119
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுக்கிராமம் சென்பகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் மாதவன் . 21 வயதான இவர் சட்ட விரோதாமாக ரேஷன் அரிசி வாங்கி விற்கும் தொழில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகின்றது. செய்து வந்தார். இதனால் எப்போதும் கை நிறை பணத்துடன் சுற்றும் இவர், கடந்த ஜனவரி மாதம் வள்ளுவர் நகர் சலவை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தினமும் கூடி மது அருந்தி வந்துள்ளார்,
இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ரத்தினம், ஆனந்தன் மற்றும் அவரது மகன் பிரகதீஸ்வரன் ஆகியோர் கண்டித்துள்ளனர். இரு தரப்புக்கும் தகராறும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ரத்தினம் அளித்த புகாரில் கிழக்கு காவல் நிலையத்தில் சதீஷ் மாதவன் மீது வழக்கு பதிந்து விசாரித்த போலீசார் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
அண்மையில் வள்ளுவர் நகர் பகுதியில் பிரகதீஷ்வரன் தரப்பினர் வைத்த திருமணத்திற்காண டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டது. சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது சதீஷ் மாதவன் உள்ளிட்ட சிலர் அந்த பேனரை கிழித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவ்வழியாக பைக்கில் வந்த சதீஷ் மாதவனை, பிரகதீஸ்வரன் தரப்பினர் எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மாதவன் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிச்சென்றதாக கூறப்படுகின்றது.
இது குறித்து ஆனந்தன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சதீஷ் மாதவன் மீது புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகாருக்கும் ஏப்ரல் 29ஆம் தேதி சி.எஸ்.ஆர் ரசீது மட்டும் கொடுத்த போலீசார் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது .
இதன் காரணமாக இரு தரப்புக்கும் முன் விரோதம் நீருபூத்த நெருப்பாக இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சதீஷ் மாதவன் தனது நண்பர்கள் 5 பேருடன் மது அருந்தி விட்டு வெளியே வந்துள்ளார். அந்த கடை வாசலில் பிரகதீஸ்வரனை பார்த்ததும், ஆத்திரம் கொண்ட சதீஷ் மாதவனும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரகதீஸ்வரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.
இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரகதீஸ்வரன் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்க்கிடையே பழிக்கு பழியாக சதீஷ்மாதவனின் தாய் வெட்டிக் கொல்லப்பட்டதாக கிடைத்த தகவலால் போலீசார் அதிர்ந்து போயினர்.
பிரகதீஷ்வரன் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த 30 நிமிடங்களில் அவரது ஆதரவு கோஷ்டியினர் , புதுக்கிராமம் சென்பகா நகரில் உள்ள சதீஷ் மாதவனின் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகின்றது. அங்கிருந்த சதீஷ் மாதவனின் தாய் கஸ்தூரியை வீட்டு வாசலில் இழுத்து போட்டு சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பி உள்ளனர், சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த கஸ்தூரியின் உறவினர் சென்பகராஜ் என்பவரின் கையையும் அக்கும்பல் வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர். கஸ்தூரியின் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், காயம் அடைந்த செண்பக ராஜை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
முன் விரோதம் தொடர்பான புகாரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஒரு கொலையும், அந்த கொலைக்கு பழிக்கு பழியாக 30 நிமிடத்தில் மற்றொரு கொலையும் நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. சம்பவ இடங்களை பார்வையிட்ட தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் , கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
அங்கு மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏதுவும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்திலேயே அரிசி கடத்தலை தடுத்திருந்தாலோ அல்லது புகார்கள் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலோ இந்த இரட்டை கொலை சம்பவம் நடத்த்கிருக்காது என்று கூறப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu