முகப்பு
"கடவுளே என்னை எரிச்சுடு...😢'' சரணடைந்து கதறும் கெனீஷா... கமென்ட்களின் Q&A-வில் கடுப்பாகி கதறிய கெனீஷா
May 24, 2025 03:22 PM
25278
சீதையாக நெருப்பில் இறங்குகிறரா கெனிஷா? கடவுளே.. என கதறி, சரணடைகிறார்..
நடிகர் ரவி மோகனை அவரது மனைவி ஆர்த்தியிடம் இருந்து அபகரித்ததாக குற்றம் சாட்டப்படும் கெனிஷா யார்? பின்னணி என்ன? அவர் சில கமென்ட்களுக்கு பதிலளித்தபோது அழுதது ஏன்?... எங்கு? சரணடைந்திருக்கிறார்.. தன்னை விமர்சிப்பவர்களுக்கு என்ன பதிலளிக்கிறார்?.. இந்த செய்தியில் பார்க்கலாம்...
யார் இந்த கெனிஷா?
பெங்களூருவில் சோஃபா செய்து விற்று வந்த கார்பென்டரான தமிழ் தந்தைக்கும், ஆஃப்ரிக்கப் தாய்க்கும் காதல் திருமண உறவின் விளைவாக கென்யாவில் பிறந்தவர் கெனிஷா ஃபிரான்சிஸ்... லண்டனில் பிசினஸ் படித்தபோதே, இசையில் ஆர்வம் அதிகரிக்க.. அங்கு இசையும் பயின்று சர்வதேச அளவில் பாடகியானவர்..
தாய் இறந்த துக்கத்தில் தந்தை மனநலம் பாதித்ததால் அவரைப் பார்த்துக் கொள்ள சைக்காலஜி படித்ததாகவும், தான் ஒரு ஹீலர் என்றும் கூறி வருகிறார்...
பாடல்களை மிகவும் ரொமேன்டிசைஸ் செய்து பாடுவது... படுக்கையில் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக பாவனைகளை செய்து நடனமாடி ரீல்ஸ் போடுவது போன்றவற்றால் சோசியல் மீடியாக்களிலும் பிரபலமாகியவர் கெனிஷா...
டெஃப் ஃபிராக்ஸ் ((Deaf frogs)) என்ற நிறுவனம் மூலம் நடிகர் ஜீவாவின் ஏற்பாட்டில் கெனிஷா பாடி, அரைகுறை ஆடையோடு நடனமாடிய ஆல்பம் பாடலை... நடிகர் ஜெயம் ரவி சத்யம் திரையரங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார்...
அப்போது இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.. இந்த நிலையில்தான்.... ரவி மோகன்... ஆர்த்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கூறி பகிரங்கமாக பிரிவதாக விவாகரத்தை அறிவித்தார்...
கெனிஷா... ரவியை... ‘ஜெயம்...’ ‘ஜெயம்...’ என செல்லமாக அழைப்பதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்த நிலையில்... தன்னை ஜெயம் ரவி என (வேறு) யாரும் அழைக்க வேண்டாம் என.. ஜெயம் ரவி.... இல்லை இல்லை... ரவி மோகன்... அறிக்கையும் வெளியிட்டிருந்தார்..
குடும்பத்தை பிரித்து விட்டார் ... குழந்தைகளை தவிக்க விட்டார்... என பல காரணங்களை கூறி ஆன்லைனில் கெனிஷாவுக்கு எதிரான சாபங்கள் டன் கணக்கில் குவிந்து வருகின்றன. .. இந்த நிலையில் இன்ஸ்டா ஸ்டோரியில் அத்தகைய கமென்ட்களைப் பதிவிட்டு கதறியிருக்கிறார் கெனிஷா ஃபிரான்சிஸ். .
"என் உண்மையும் என் வலியும் உங்களுக்கு தெரியாது என்பது எனக்கு புரிகிறது. . விரைவில் உண்மை உங்கள் முன் கட்டவிழ்த்து விடப்படும் நாள் வரும். .
நான் தான் தவறு என்றால், சட்டத்தாலும், உங்களைப் போன்ற ஒவ்வொரு கோபக்காரராலும் தண்டிக்கப்படுவதை நான் மகிழ்ச்சியாக ஏற்கிறேன்...
ஆனால் அந்த நாள் வரும் வரை இந்த வெறுப்பில்லாத காற்றை சுவாசிக்க என்னை அனுமதிக்க முடியுமா ? என கெஞ்சி இருக்கிறார் கெனிஷா. .
((மற்றொருவர் கெனிஷாவுக்கு அனுப்பிய DM மெசேஜில், "விலை மகளே. . ரவியிடம் எவ்வளவு பணம் வாங்கினாய்? ஓர் இரவுக்கு எவ்வளவு பணம் வாங்குவாய்?" என கேட்டதாக ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்திருக்கிறார் கெனிஷா))
தொடர்ந்து பதிலளித்த கெனிஷா, " எந்த கமெண்ட்யும் நான் ஆஃப் செய்யவோ... ஓடி ஒளியவோ மாட்டேன் ... யாரிடமும் மறைக்க எதுவும் இல்லை ...
உங்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கிறது தான். . ஆனால் தயவு செய்து என் முகத்துக்கு நேரே வந்து அதைக் கேளுங்கள். . என் பக்கம் என்ன கதை என்பதை உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் கூறுகிறேன். .
நான்தான் தவறு என உங்களுக்கு அவ்வளவு கான்ஃபிடன்டாக இருந்தால் . . என்னை தயவுசெய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் சொல்லுங்கள் .. I beg u” எனக் கூறியிருக்கிறார்.
((மீடியாக்களும் வெறுப்பை பரப்ப வேண்டாம் .. நிறுத்துங்கள்.)) நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவள். . என் பக்கம் இருக்கும் உண்மையை மட்டும் பார்க்க மாட்டேன் என பார்வையற்றவராவது ஏன்?என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார் கெனிஷா. .
உங்களில் யாராவது ஒருவராவது இந்த சாபங்கள், உருவக்கேலி, வீண்பழி, எதிர்ப்பு, கொலை மிரட்டல்கள் இவை அனைத்தையும் நான் எப்படி எதிர்கொள்வேன் என்று நினைத்துப் பார்த்தீர்களா?
தற்போது இருந்து நீங்கள் தரும் ஒவ்வொரு கமெண்ட், வெறுப்பு, நெகட்டிவிட்டி அனைத்தையும் சிவபெருமானுக்கும் இயேசுவுக்கும் சாய்பாபாவுக்கும் கார்டியன் ஏஞ்சல்களுக்கும் காளியம்மனுக்கும் மேரி மாதாவுக்கும் செயின்ட் ஆண்டனிக்கும் கரோலி பாபாவுக்கும் கணேஷாவுக்கும் அனுமானுக்கும் முருகனுக்கும் துர்க்கை அம்மனுக்கும் மகாலட்சுமிக்கும் எனது மூதாதையர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். .
கடவுளே என் அழுகையை கேளுங்கள் .. கொஞ்சமாவது உதவி செய்யுங்கள். .” என பாரபட்சமின்றி அத்தனை கடவுள்களையும் உதவிக்கு அழைத்து அழுதிருக்கிறார் கெனிஷா. .
பைபிள் வசனங்களை சுட்டிக்காட்டிய மற்றொரு பயனர்,
" தேவன் இணைத்ததை பிரிக்க நினைப்பது பாவம்.. பைபிளை பொறுத்தவரை இது பிறர் மனை கவர்தல் என்ற அடல்ட்ரிதான். . ரவிக்கும் ஆர்த்திக்கும் இதுவரை திருமணம் சட்டப்படி முடிவடையவில்லை. . ஆனால் அதற்குள் நீங்கள் அவர்கள் வாழ்க்கையில் நுழைந்து இணைவதற்கும்.. மன்னிப்பை வழங்குவதற்குமான வாய்ப்பை ”அழித்து விட்டீர்கள். . இந்தப் பாவத்தை இயேசு கிறிஸ்து ஏற்க மாட்டார் என பதிலடி கொடுத்ததற்கு அந்த கமெண்டையும் இறைவனுக்கு சமர்ப்பிப்பதாக கூறியிருக்கிறார் கெனிஷா. .
" நல்ல குடும்பமா? உனது தாய் தந்தை உயிரோடு இருந்திருந்தால் மற்றவர் வாழ்க்கையை கெடுத்து பணத்துக்காகவும் புகழுக்காகவும் விலைமகளைப் போல வாழ அனுமதித்திருப்பார்களா. . உன் கணவரை கொன்றது போல் நீயும் செத்து விடு. . ரவியை அவனது அழகான குடும்பத்தோடு வாழவிடு"
" பப்ளிக் சிம்பதிக்காக பாதிக்கப்பட்டவளை போல நடிக்காதே. . இந்த சாபங்கள் எல்லாம் ரவியை உன்னோடு சந்தோஷமாக வாழ விடாது. . நீயும் ரவியும் விரைவில் பிரிந்து விடுவீர்கள். .
உன் மதிப்பு மிகவும் சீப் ஆனது தான் என உணரும் ரவி ஆர்த்தியிடம் திரும்பச் செல்வார் ... ஆனால் அப்போது ஆர்த்தி அவனுக்கு ஆதரவாக நிற்க மாட்டார் ..
மெய் அழகை வெட்ட வெளிச்சமாக காண்பித்து வரும் உன் பின்னால் எதற்காக ரவி வருகிறார் என தெரியவில்லை. . நீ ஒரு பார் டான்ஸர் கேர்ள். . " என்றெல்லாம் வசைபாடிய கமென்ட்டையும் கடவுளுக்கு ஒப்புவித்ததாக பதிவிட்டு இருக்கிறார் கெனிஷா
மற்றொருவர், " அந்த இரண்டு குழந்தைகளின் கர்மாவை யார் சுமப்பார்?
“எப்படி இவ்வளவும் பண்ணிட்டு கொஞ்சம் கூட பயம், குற்ற உணர்ச்சி இல்லாமல் நல்லவ மாதிரி போஸ்ட் போடுறீங்க .. நல்ல ஜோடி என்று நினைத்தவங்கள பிரிச்சு 2 குழந்தைகள் லைஃப் அ ஸ்பாயில் பண்ணி இருக்க.. நீ ஜெயம்ரவியை கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருந்திடுவியா .. கர்மாகிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. . என மற்றொரு பயனரும் தனது ஆற்றாமையைப் பதிவிட்டு இருக்கிறார் . . அதற்கு கெனிஷா அழும் எமோஜியை போட்டு அதையும் கடவுளுக்கு ஒப்புவிப்பதாக கூறியிருக்கிறார்.
ஆர்த்தியின் நிலைமை சீக்கிரமா உனக்கும் வரும்போது வலியும், வேதனையும் புரியும் .. ((அவ சந்தோஷமா தான் சுத்துவான்.. அவன் ஆம்பள பத்து பொண்ணுங்கள்ட்ட போவான். உனக்கு எங்க போகுது புத்தி ... )) அவளை விட்டுட்டு உன்கிட்ட வந்தவன், சீக்கிரமா உன்னை விட்டுட்டு இன்னொருத்தி கிட்ட போயிடுவான் .. அந்த குழந்தைங்க அப்பாட்ட பேச முடியாம.. டச் பண்ண விடாம.. அவங்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த பாசமும் இல்லாம பண்ணிட்டல்ல .. சத்தியமா நீ நல்லாவே இருக்க மாட்ட ” என மண்ணள்ளி வீசாத குறையாக சாபத்தை அள்ளிவிடுத்திருக்கிறார் மற்றொரு பயனர் .. அந்த கமென்டையும் பதிவிட்ட கெனிஷா, அதையும் கடவுளுக்கே டைவர்ட் செய்துவிட்டார்.
சிவபெருமானின் படத்தைப் போட்டு "கடவுளே, இந்தப் பாதையை நீங்கள் தான் தேர்ந்தெடுத்தீர்கள். . இவர்கள் அனைவரையும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். . தான் என்ன செய்தோம் என தெரிந்து கொண்டே இவ்வளவு வலியை ஏற்படுத்தும் நபரையும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். . ஏதாவது ஒரு வகையில் உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் கடவுளே. .
ஒருவேளை நான் தான் தவறு என்றால் என்னை தீயிட்டு எரித்து என்னை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் நான் சரண் அடைகிறேன். . ஓம் நமச்சிவாய. . ” என பதிவிட்டு இருக்கிறார் கெனிஷா. . ‘
அனைத்தையும் சொல்லும் நீ, உன் கடந்த கால வாழ்க்கை.. விவாகரத்து குழந்தைகளைப் பற்றி மறைக்கப் போகிறாயா? எனக் கேட்டவர்களிடம்.. இதையெல்லாம் கேட்க நீங்கள் யார்? உங்களிடம் அனுமதி கேட்டோ, உங்கள் பணத்திலோ நான் பிறந்து வளர்ந்தேனா? ஜட்ஜா? லாயரா? உங்களுக்கெல்லாம் நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? எனக் கேட்டிருக்கிறார்.
ரவியின் குழந்தைகள் உங்களை மீடியாவில் ஜோடியாகப் பார்த்தால் எப்படி வருத்தப்பட்டிருப்பார்கள்? பள்ளியில் எவ்வளவு கேலிக்கு ஆளாவார்கள்? என நினைத்தீர்களா? என்ற கேள்விக்கு.. அதற்கு முன் அந்தக் குடும்பம் என்னென்னவற்றை எதிர்கொண்டது என உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டார் கெனிஷா..
தர்மத்தின் படி வாழும் எந்தப் பெண்ணும் திருமணமானவனுடன் உறவில் இருக்க மாட்டார் எனக் கூறிய ஒருவரிடம்.. ‘நீ எதுக்கு என் வாழ்க்கைகுள்ள வர்ற? உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? போகும் போது முன்னாடி கதவ மூடிட்டு போ... என காட்டமாக பதிலளித்திருக்கிறார் கெனிஷா...
“விவாகரத்து முடியும் வரை வெயிட் பண்ண முடியாதா? குழந்தைகள் பாதிக்கின்றனரே என்றெல்லாம் அடுத்தடுத்து கமென்ட் வர... குழந்தைகள் கவலைப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? குழந்தைகளைப் பற்றி ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை பேசினாலும்.. உன்னைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்திவிடுவேன்.. வேணும்னா ட்ரை பண்ணிப் பாரேன்...” எனவும் சவால் விட்டிருக்கிறார் கெனிஷா..
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu