RECENT NEWS

பாகிஸ்தானின் ஸ்வாட் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா சென்ற 9 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு

இளைஞருக்கு ஆதரவாக போலீஸுடன் மல்லுக்கு நின்ற பெண்களால் பரபரப்பு..!அதகளமான சம்பவத்தின் பின்னணி

May 22, 2025 01:29 AM

415

இளைஞருக்கு ஆதரவாக போலீஸுடன் மல்லுக்கு நின்ற பெண்களால் பரபரப்பு..!அதகளமான சம்பவத்தின் பின்னணி

இளைஞருக்கு ஆதரவாக போலீஸுடன் மல்லுக்கு நின்ற பெண்களால் பரபரப்பு..!அதகளமான சம்பவத்தின் பின்னணி

தூத்துக்குடி அமுதாநகர் பகுதியில் கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில், 4 கொலை வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் போலீசாருடன் கடும் சண்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

போலீசாரின் கண்களுக்கு கொலைகாரனாக தெரிந்தாலும், தாய்க்கு பிள்ளையாகவும், தங்கைகளுக்கு அண்ணனாகவும் தான் தெரிகிறார் அந்த இளைஞர் ... அதனால் தான் நாம் யாருடன் சண்டை செய்கிறோம் என்பதையும் மறந்து... வெறி கொண்டு போலீசாரை அடித்து தாக்கி தள்ளி விட்ட ரகளை சம்பத்தின் பரபரப்பு காட்சிகள் தான் இவை..!

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவர் மீது நான்கு கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால் சரித்திர பதிவேடு குற்றவாளியாக தென்பாகம் காவல் நிலையத்தில் இவரது பெயர் உள்ளது.

சம்பவத்தன்று அமுதா நகர் பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சென்ற கண்ணன் உள்ளிட்ட சிலர் அங்கு சில நபர்களுடன் சாப்பிடும் போது தகராறில் ஈடுபட்டதாகவும் இதில் இசக்கிராம் என்பவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது . புகரின் பேரில் தென்பாகம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் கண்ணனை கைது செய்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் அங்கே வந்த கண்ணனின் தாய் மற்றும் சகோதரிகள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

பெண் போலீசார் சமாதனப்படுத்த முயன்ற போது அவர்களை ஆபாசமாக பேசி அடிக்க பாய்ந்தனர். தடுத்த போலீசாரை கீழே தள்ளி விட்டனர்

கண்ணனை மருத்துவ பரிசோதனைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்ல முயன்ற போது, போலீஸ் வாகனத்தை அடித்தும், அதற்கு முன்பாக படுத்தும் பெண்கள் அட்ராசிட்டி செய்தனர்

அவர்களை விலக்கி விட்டு போலீஸ் வாகனம் புறப்பட்டுச்சென்றதால் அங்கு நின்ற பெண் போலீசாரை தாக்க, பதிலுக்கு போலீசாரும் தாக்கினர்

சண்டைக்கு அஞ்சாமல் ஆபாசமாக வசைபாடிய பெண்களால் காவல் நிலைய வளாகமே பெரும் பரபரப்புக்குள்ளானது

இவ்வளவு சம்பவத்தையும் செய்து விட்டு , போலீசார் பொய்வழக்கு போட்டு விட்டதாக அந்த பெண்கள் குற்றஞ்சாட்டினர்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஏன் திமிங்கலம்.. நீதிபதி பொண்ணு போலீசிடம் ரூம் போட சொல்லுது ? அல்வா பெண் போலீஸ் சிக்கினார்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies