RECENT NEWS

'டாடா' வுக்கு டப் கொடுத்த சபாரி கார் உரிமையாளர்.. கேள்வி ஒவ்வொன்றும் சுளீர்..! சர்வீஸ் மையத்தில் நடந்தது என்ன?

BIG STORIES

“3 பட்டம் படிக்க வச்சேனே..” காதலில் விழுந்த ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை..! காதலுக்கு மரியாதையால் விபரீதம்..

Jun 28, 2025 01:14 AM

526

“3 பட்டம் படிக்க வச்சேனே..” காதலில் விழுந்த ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை..! காதலுக்கு மரியாதையால் விபரீதம்..

“3 பட்டம் படிக்க வச்சேனே..” காதலில் விழுந்த ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை..!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியையின் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு ஊரே கதறி அழும் வகையிலான கொடூரத்தை செய்துவிட்டு தந்தை காவல் நிலையம் சென்று விட.. காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி எடுத்துச்சென்ற சோக காட்சிகள் தான் இவை..!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள T.மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்களும் அபிதா என்ற மகளும் இருந்தனர்.

27 வயதான அபிதா எம்.எஸ்.சி பிஎட் படித்துவிட்டு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அர்ஜூனன் தனது மகளுக்கு பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறி அபிதா மறுத்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் தந்தை மகளுக்கிடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறி அடம்பிடித்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த அர்ஜூனன் அருகில் கிடந்த கட்டை ஒன்றை எடுத்து அபிதாவை தாக்கியதாகவும், தனது சொல்பேச்சு கேட்காமல் உயிரோடு இருக்க வேண்டாம் என்றும் கூறி கத்தியால் கழுத்தை அறுத்து போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றதாகவும் கூறப்படுகின்றது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அபிதாவின் தாய் , தனது மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு கதறி அழுதுள்ளார்.

தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதற்கிடையே மகளை கொலை செய்து விட்டு சென்ற அர்ஜூனன் மூக்கு முட்ட மது குடித்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிதாவின் சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். “நன்றாக படிக்க வைத்த பெண் இப்படி கொலை செய்யப்பட்டு விட்டாளே” என்று அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்

போதை தெளிந்த பிறகு அர்ஜூனனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகின.

ஆசிரியை அபிதா, கடந்த 5 வருடங்களாக மாற்று சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். பி.இ முடித்து சுயதொழில் செய்து வரும் அந்த இளைஞர், இரு வீட்டார் சம்மதத்துடன் தான் நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், எக்காரணத்தை கொண்டு நமது திருமணத்தால் யாருக்கும் எந்த வித மனக்கசப்பும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

அபிதாவுக்கு 27 வயது ஆன நிலையில் தங்கள் சாதியில் நல்ல வசதியான வரன்களை எல்லாம் மகள் தட்டிக்கழித்ததால் அர்ஜூனனுக்கு கோபம் உண்டானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை பல கோடி சொத்து உள்ள குடும்பத்தில் இருந்து வந்த வரனை அபிதா நிராகரித்ததால் அர்ஜூனன் மேலும் ஆத்திரம் அடைந்து மகளுடன் சண்டையிட்டுள்ளார். மேலும் அந்த குடும்பத்தில் தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்றும் கறாராக கூறி இருக்கிறார்.

இதனால் பயந்து போன அபிதா வியாழக்கிழமை இரவு ஒரு பையில் தனது துணிகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுச்செல்ல முடிவு செய்துள்ளார்.

காதலனின் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறிய அவர் காட்டுமன்னார் கோவில் பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார் . இரவு நேரத்தில் அபிதா அங்கு தனியாக நிற்பதை அறிந்து விரைந்து வந்த காதலன் , அவருக்கு புத்திமதி சொல்லி வீட்டுக்கு செல்லுமாறு கூறி உள்ளார்.

அபிதாவோ பிடிவாதமாக செல்ல மறுத்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து அபிதாவின் தந்தை அர்ஜூனனை செல்போனில் அழைத்து, “பாப்பா தெரியாமல் வீட்டை விட்டு வந்துட்டா, வந்து கூட்டிட்டு போங்க அங்கிள்னு” கூறி உள்ளார்.

இதையடுத்து பதறி போய் சென்ற அர்ஜூனன் தனது மகளை பத்திரமாக வீட்டு அழைத்து வந்துள்ளார், “மகள் வீட்டை விட்டு போனது ஊருக்கு தெரிஞ்சா அசிங்கமாயிருமே..” என்று மிகுந்த கவலையோடு அர்ஜூனன் இருந்துள்ளார்.

மகள் மீது கொண்ட அதீத பாசம், படி தாண்டிய மகளை அடிக்கவோ, திட்டவோ விடாமல் தடுத்த நிலையில், காலையில் மீண்டும் கல்யாண பேச்சை ஆரம்பித்த போது அபிதாவின் பிடிவாதமான பேச்சால் கடும் ஆத்திரமடைந்த அர்ஜூனன், கட்டையால் அடித்தும் கத்தியால் கழுத்தை அறுத்தும் கொன்றதாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மகளை கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட அர்ஜூனனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

'டாடா' வுக்கு டப் கொடுத்த சபாரி கார் உரிமையாளர்.. கேள்வி ஒவ்வொன்றும் சுளீர்..! சர்வீஸ் மையத்தில் நடந்தது என்ன?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies