அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து பயம் - இ.பி.எஸ்
Jul 23, 2025
BIG STORIES
ஏன் திமிங்கலம்.. நீதிபதி பொண்ணு போலீசிடம் ரூம் போட சொல்லுது ? அல்வா பெண் போலீஸ் சிக்கினார்..!
Jun 28, 2025 01:09 AM
385
சென்னையில் தன்னை நீதிபதியின் மகள் எனக்கூறி காவல் நிலையத்துக்கு போன் செய்து ஓட்டலில் ரூம் போட சொன்னதோடு, உணவு வாங்கிவரச் சொன்ன பெண் காவலரை போலீசார் கைது செய்தனர்
சென்னையில் நீதிபதியின் மகள் என ஏமாற்றி போலீசாரை எடுபிடி வேலை பார்க்க வைத்த புகாரில் கையும் களவுமாக சிக்கிய ரேகா இவர் தான்..!
ரேகா அப்படி என்ன செய்தார் என்பதை விரிவாக பார்க்கலாம்...
சென்னை செம்பியம் காவல் நிலையத்திற்கு கடந்த 25ந்தேதி செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், தான் நீதிபதி சிவகுருநாதன் மகள் பேசுவதாக கூறி தனக்கு ஓட்டலில் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளார். அதற்கு போலீஸார் அதெல்லாம் எங்களால் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண் பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் 1000 ரூபாய் செலுத்தி அறை எடுத்து தங்கியுள்ளார்.
மறுநாள் 26ந்தேதி இரவு அதே பெண் மீண்டும் செம்பியம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தனக்கு உணவு வாங்கி வருமாறு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் உணவு வாங்கி வரவில்லை என்றால் உங்கள் அனைவரையும் நீதிமன்றத்திற்கு வரவழைத்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இதனால் என்ன செய்வது என்று திகைத்து நின்ற செம்பியம் காவல் நிலைய எழுத்தர் உடனே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷோபனா தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட விடுதிக்கு சென்று நீதிபதி மகள் என கூறி போலீஸாரை மிரட்டிய பெண்ணிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அந்த பெண் கூறியது போல அவர் நீதிபதி மகளும் அல்ல சிவகுரு நாதன் என்ற பெயரில் நீதிபதியும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த டுபாக்கூர் பெண்மணியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவர், சென்னை அகரம் சிதம்பரம் தெருவை சேர்ந்த ரேகா, என்பதும் எக்ஸ்பிளனேடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
காவலர் ரேகா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ந்தேதி முதல் பணிக்கு வராமல் இருந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி கடந்த 5ந்தேதி செம்பியம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தன்னை நீதிபதி சிவகுருநாதன் மகள் என்றும் அருகில் உள்ள ஷாலிமர் என்ற ஓட்டலில் 1500 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு அந்த பணத்தை செலுத்துமாறு மிரட்டியதும் , அப்போது காவல் நிலைய எழுத்தர் அந்த பணத்தை செலுத்தியதும் தெரியவந்துள்ளது.
நாம் என்ன சொன்னாலும் செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு மீண்டும் ரூம் போட சொல்லி மிரட்டல் வித்தையை காண்பித்ததால் கையும் களவுமாக மாட்டி இருக்கிறார் ரேகா என்கின்றனர் போலீசார்.
காவலர் ரேகா முதலில் தான் டிசி ஐய்யா ஆபீசில் இருந்து சப் இன்ஸ்பெக்டர் பேசுவதாக கூறி, ஓட்டல் ஒன்றுக்கு தொடர்புகொண்டுள்ளார்.
“அய்யா சொன்னாங்க , நீதிபதியோட மகள் வர்ராங்களாம் அவங்களுக்கு நல்ல அறை ஒன்றை ஒதுக்கி கொடுங்கள்” என்று கூறி இருக்கிறார்.
ஓட்டல் நிர்வாகம் கஸ்டமரை நேராக பார்க்காமல் அறை கொடுக்க முடியாது என்று கறாராக கூறியதால் , காவல் நிலையத்துக்கு போன் செய்து ரூம் போட சொன்னதாக போலீசார் தெரிவித்தனர்.
பெண் காவலர் ரேகா கடந்த 6 மாதகாலமாக விட்டோடியாக இருப்பதாகவும் அவர் எந்த தைரியத்தில் இப்படி போலீசாருக்கு அவப்பெயர் பெற்று தரும் இந்த செயலை செய்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ரேகாவை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu