RECENT NEWS

இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை எட்ட வேகமாக வளர்ந்து வருகிறது - பிரதமர் மோடி

முகப்பு

ரவி - ஆர்த்தி வாழ்வில் இருள் கொண்டு வந்த “வாழ்வின் ஒளி” எதுப்பா..? கெனிசாவுக்கு செக் வைத்த அறிக்கை

May 21, 2025 01:44 AM

200

ரவி - ஆர்த்தி வாழ்வில் இருள் கொண்டு வந்த “வாழ்வின் ஒளி” எதுப்பா..? கெனிசாவுக்கு செக் வைத்த அறிக்கை

ரவி - ஆர்த்தி வாழ்வில் இருள் கொண்டு வந்த “வாழ்வின் ஒளி” எதுப்பா..?

தங்கள் திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு பணமோ, அதிகாரமோ காரணம் அல்ல என்றும் தங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம் என ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி காட்டமாக அறிக்கை வெளியிட்டு உள்ளார்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நிலையில், இரு தரப்பினரும் தங்கள் தரப்பு விளக்கத்தை மாறி மாறி வெளியிட்டு அறிக்கை யுத்தம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ரவி மோகன் வெளியிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு மாமியார் பதில் அளித்த நிலையில் தன் பங்கிற்கு ஆர்த்தி மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள இந்த காலத்தில், என்னை சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகள் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படி செய்து விட்டது. எனவே ஒருமுறை கடைசியாக அனைவருக்கும் உண்மையை சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன் என அதில் கூறிப்பிட்டிருக்கிறார்.

தங்களுக்கு திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணம் அல்ல. தங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம் என கூறிப்பிட்டுள்ளார்.. மேலும் உங்கள் "வாழ்வின் ஒளி" என அறியப்படும் அந்த நபர், எங்கள் வாழ்வின் இருளை கொண்டு வந்தார் என்பதே உண்மை என தெரிவித்துள்ளார்.

சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே, அந்த நபர் என் வாழ்க்கையில் வந்துவிட்டார் எனவும், தான் இதை ஒரு வெற்று குற்றசாட்டாக சொல்லவில்லை. போதுமான ஆதாரங்களுடன் தன்னிடம் இருப்பதாக கூறியிருக்கிறார்.

“ரவி மோகன் தனது சொத்துகளை, கெளரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறவில்லை..நன்றாக முன் கூட்டியே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு, விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்துகொண்டு மற்றும் தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள Range Rover காரில் தான் வீட்டை விட்டுச் சென்றார் என கூறிப்பிட்டிருக்கிறார்.

உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி "தொலைத்த பெற்றோர்கள்"என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு, எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய நபரின் வீட்டு கதவை ஏன் தட்டினார்? என கேள்வி எழுப்பி உள்ளார். அவருக்கு உரிமையுள்ள அனைத்தையும் நன்றாக அனுபவித்துவிட்டு, தனது குட்டு வெளிப்பட்டு தன் மீது குற்றம் சுமத்தப்படும் என்ற நிலையில்தான் வீட்டை விட்டு வெளியேறினார். என கூறியிருக்கிறார்.

“எங்கள் பிள்ளைகளை கருவிகளாக்கி என் தாய்மையை அனுதாபத்திற்கு உரியதாக்கி ஆதாயம் தேட நினைப்பவள் நான் அல்ல. எங்கள் பிள்ளைகள் இன்று படும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது! அவர்களது தொலைபேசிகள் எப்போதும் உபயோகத்தில் இருந்தும் அவர்களின் அப்பா அழைக்காத காரணம் அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

தான் பலவீனமானவள் இல்லை என்றும் தன் மீது நம்பிக்கை கொண்டுள்ள அன்புக்குரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்பேன் என்று கூறியுள்ள ஆர்த்தி ஒரு போதும் தாழ்ந்து போக மாட்டேன். இதற்கு மேல் தான் பேச எதுவுமில்லை. ஏனென்றால் நான் இன்னும் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். தனக்கு நீதி கிடைக்கக் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மிரட்டல் அலப்பறை.. அரசு பேருந்து ஓட்டுநர்  வசமாக சிக்கியது எப்படி..? சிசிடிவி காட்சிகள் வெளியானது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies