முகப்பு
வீட்டில் மாணவனுடன் ஆசிரியை உல்லாசம்.. ஹவுஸ் அரஸ்ட் செய்த கணவர்
May 14, 2025 11:02 AM
1540
வீட்டில் மாணவனுடன் ஆசிரியை உல்லாசம்.. ஹவுஸ் அரஸ்ட் செய்த கணவர்
மாணவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த ஆசிரியை, அவரது கணவரே கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா, ராமராவ் பேட்டையில் வசித்துவருபவர் லட்சுமன். இவருக்கும் நாகலட்சுமி என்ற மனைவியும், 7 வயதில் மகளும் இருக்கிறார்.
இறால் பண்ணை வைத்து தனது குடும்பத்தை நடத்துவரும் லட்சுமனன், தினந்தோறும் இரவில் தனது இரால் பண்ணைக்கு காவலுக்கு சென்று அதிகாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். லட்சுமன் மனைவி நாகலட்சுமி தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், கல்லூரியில் படிக்கும் மணிகண்டா என்ற மாணவனுடன் நாகலட்சுமி நெருங்கி பழகி இருக்கிறார்.
பின்னர் இருவருக்குள்ளும் திருமணம் தாண்டிய உறவாக மாறியிருக்கிறது. இதனால் மணிகண்டாவும், நாகலட்சுமியும் அடிக்கடி ரகசியமாக வெளியில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து லட்சுமணனுக்கு அவ்வப்போது சந்தேகம் ஏற்பட்டும், மனைவிடம் கேட்காமல் இருந்துவந்திருக்கிறார்.
இதையெடுத்து வழக்கம் போல் நேற்று இரவு லட்சுமன் இறால் பண்ணைக்கு சென்றவுடன் நாகலட்சுமி, மணிகண்டாவை வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து மாணவர் மணிக்கண்டாவும் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது நாகலட்சுமி தனது 7 வயது மகளை வீட்டில், வைத்து கொண்டே இருவரும் வீட்டில் ஒன்றாகத் தங்கினர்.
இந்த நிலையில், திடீரென இறால் பண்ணைக்கு சென்ற லட்சுமணன், மனைவி மீது சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீடு திரும்பியிருக்கிறார்.
அப்போது வீட்டின் கதவை தட்டாமல், ஜன்னலுக்கு வெளியே லட்சுமணன் எட்டி பார்த்தபோது, அவர்கள் இருவரும் தனியாக இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்தார்.
இதையெடுத்து லட்சுமணன் வீட்டின் அனைத்து கதவுகளையும் வெளியே இருந்தவாறு பூட்டிவிட்டு, போலீசாருக்கும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து சம்ப இடத்திற்கு வந்த போலீசாரும், சுற்றியிருந்த மக்களும், வீட்டில் இருந்த நாகலட்சுமி மற்றும் அவரது காதலன் மணிகண்டாவை கையும் களவுமாக பிடித்தனர்.
அப்போது ஆத்திரத்தில் மணிகண்டாவை, தாக்க முயன்ற லக்ஷ்மனை போலீசார் தடுத்தி நிறுத்தி, மணிகண்டாவை கைது செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மாணவருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த ஆசிரியை, அவரது கணவரே கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu