முகப்பு
ரூ 23 கோடி வைரம் ? டோல்கேட்டில் சண்டை..! கொள்ளையன்ஸ் லாக்..! போலீசில் சிக்கியது எப்படி ?
May 05, 2025 04:41 PM
1892
ரூ 23 கோடி வைரம் ? டோல்கேட்டில் சண்டை..! கொள்ளையன்ஸ் லாக்..!
சென்னை ஓட்டலில் வைரவியாபாரியை தாக்கி கட்டிபோட்டுவிட்டு 23 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக தெரிவிக்கபடும் புராதன வைரத்துடன் தப்பிய கொள்ளையர்கள் தூத்துக்குடியில் உள்ள டோல்கேட்டில் சுங்க கட்டணம் செலுத்த மறுத்து சண்டையிட்டதால் போலீசாரிடம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான பழமையான வைரம் ஒன்றை விற்று தருவதற்காக பல இடைத்தரகர்களை அணுகியுள்ளார்.
அந்த வகையில் சனிக்கிழமை இடைத்தரகர்கள் ஆரோக்கியராஜ், ராகுல், சுபகன் ஆகியோர் மூலமாக சிலரை அண்ணா நகரில் உள்ள வீட்டிற்கு வைரத்தை பார்ப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார். 17 கேரட் மதிப்புள்ள அந்த வைரத்தை காண்பித்ததால் அதன் மதிப்பு 23 கோடி ரூபாய் என்று பேரம் பேசி இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து வடபழனியில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஓட்டலுக்கு வைரத்தை எடுத்து வருமாறு சந்திரசேகரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை நம்பி வடபழனி கிரீன் பார்க் நட்சத்திர ஓட்டலில் உள்ள 636 எண் கொண்ட அறையில் வைரத்தை விற்பதற்காக சந்திரசேகர் சென்றுள்ளார்.
குறிப்பாக சந்திரசேகர் மற்றும் அவரது வளர்ப்பு மகள் ஜானகி, நண்பர் சுப்பிரமணி, ஓட்டுநர் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
சந்திரசேகர், அவரது நண்பர் சுப்பிரமணி மட்டும் வைரத்துடன் ஓட்டல் அறைக்கு சென்றதாகவும் வளர்ப்பு மகள் ஓட்டுநருடன் ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை பன்னிரண்டரை மணி முதல் 3 அரை மணி வரை தொடர்ந்து சந்திரசேகர் தனது மகள் ஜானகியிடம் செல்போனில் பேசி வந்த நிலையில் தான் நண்பர் சுப்பிரமணியை அட்வான்ஸ் தொகை கொடுப்பதற்காக கும்பலை சேர்ந்தவர்கள் வெளியில் அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நீண்ட நேரம் ஆகியும் தந்தை வராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த ஜானகி, செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.
சந்திரசேகர் போன் எடுக்காத காரணத்தினால், பதற்றம் அடைந்து 636 என்ற அறைக்கு சென்று ஹோட்டல் ஊழியர்கள் உதவியோடு சென்று பார்த்த போது, வைரத்தை கொள்ளையைத்து விட்டு அந்த கும்பல், சந்திரசேகரை இருக்கை ஒன்றில் கட்டிபோட்டு சென்றது தெரியவந்தது.
உடனடியாக நட்சத்திர ஓட்டல் நிர்வாகத்தின் மூலம் வடபழனி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
தியாகராய நகர் காவல் துணை ஆணையர் குத்தாலிங்கம் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.
வைரத்தை பறிகொடுத்ததால் சந்திரசேகருக்கு அச்சத்தின் காரணமாக லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சந்திரசேகரின் நண்பர் சுப்பிரமணி , கொள்ளையர்கள் தன்னை சிறிது தூரத்தில் காரில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக கூறி ஓட்டலுக்கு வந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணி அவரது மகள் ஜானகி , ஓட்டுநர் மற்றும் இடைத்தரகர்களான ராகுல் மற்றும் ஆரோக்கிய ராஜ் சுபஹான் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்
வைரங்களை வாங்க வந்தவர்கள் சிவகாசியை சேர்ந்த லண்டன் ராஜன் , விஜய் மற்றும் அருணாச்சலம் என தெரிவித்ததால் அவர்களை பிடிக்க சிவகாசிக்கு ஒரு தனிப்படை விரைந்தது .
இந்த நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூர் போலீசாருக்கு, புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் இல்லாத காரில் வந்த நான்கு பேர் சுங்க கட்டணம் செலுத்த மறுத்து தகராறு செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.
விரைந்து சென்ர போலீசார் அந்தகாரில் இருந்த 4 பேரையும் காவல் நிலையைம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் சென்னையில் வைரங்களை திருடிக் கொண்டு தம்பி வந்த ஜான் லாயட், விஜய், ரத்தீஷ் குமார், அருண் பாண்டியராஜ் என்பது தெரியவந்தது.
அந்த 4 பேரையும் கைது செய்த தூத்துக்குடி மாவட்ட போலீசார் , உடனடியாக சென்னை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விமானம் மூலம் தூத்துக்குடிக்கு விரைந்த சென்னை தனிப்படை போலீசார் , கொள்ளையடிக்கப்பட்ட ஒரே கல்லான புராதான வைரத்தையும் , தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட தார் கார் மற்றும் ஒரு கத்தியையும், பறிமுதல் செய்தனர்.
அவர்களை சென்னை அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ள போலீசார் , இந்த புராதான வைரம் 23 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டாலும் வைரத்தின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இந்த வைரக்கடத்தல் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu