உலகம்
ஸ்பெயினின் மிகப்பெரிய மின்வெட்டு.. இந்தியாவிற்கு ஓர் எச்சரிக்கை மணி!!!
May 05, 2025 10:02 AM
1
ஸ்பெயினின் மிகப்பெரிய மின்வெட்டு.. இந்தியாவிற்கு ஓர் எச்சரிக்கை மணி!!!
இருளில் மூழ்கிய ஸ்பெயின்.. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் தாய்வீட்டில் நடந்த குழப்பம். ஸ்பெயின் சம்பவம் இந்தியாவுக்கு சொல்லும் பாடம் என்ன ? பார்க்கலாம்.
ஸ்பெயின் நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டு அந்த நாட்டையே இருளில் மூழ்கடித்தது.
மின்சாரத்தை கடத்த உதவும் கிரிடுகளில் ஏற்பட்ட மேலாண்மை சிக்கல் காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டிருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகிலேயே புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகம் பயன்படுத்தும் நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட இந்த சிக்கல் பல நாடுகளின் மின்சார கடத்தும் முறையை கேள்விக்குள்ளாகி உள்ளது.
குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசகத்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் இந்தியாவில் இது முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.
மின்தடை என்பது இந்தியாவுக்கு புதிதல்ல 2012 ஜூலை மாதத்தில் மின்சாரம் கடத்தும் கிரிடுகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 40 கோடி இந்தியர்கள் மின்சாரமின்றி பல நாட்கள் தவித்தனர்.
அதன்பிறகு, நாடு முழுவதும் கிரிடுகளின் தரம் குறித்து பெரிய அளவில் அரசு மற்றும் தனியார் மின் அமைப்புகள் அதிக கவனம் செலுத்தத் தொடங்கின
புதுப்பிக்க இயலாத முறையில் தயாராகும் மின்சாரத்தை கடத்த பயன்படும் கிரிடுகளையே புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலம் வரும் மின்சாரத்தை கடத்தவும் பயன்படுத்தும் வழக்கம் இந்தியாவில் உள்ளது.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமான மின்சாரத்திற்கு பிரத்யேக கிரிடுகள் அமைப்பதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் புதுப்பித்தக்க ஆற்றல் மூலம் 300 கிகாவாட் மின்சார உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட 34 கிகாவாட்டில் 85 % புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் கொணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் renew மற்றும் டாடா கேபிடல் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றன. ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் 100 பில்லயன் டாலர் அளவு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
இதுபோன்ற, முதலீடுகள் வரவேற்கத்தக்கது, இருப்பினும் சூரிய எரிசக்திக்கான தகடுகள் தயாரிப்பில் கூடுதல் கவனம், புதுப்பிக்கத்த ஆற்றல் மூலம் வரும் மின்சாரத்தை கடத்த தரமான கிரிடுகள் அமைப்பது, அதை நிர்வகிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பது போன்றவை மட்டுமே ஸ்பெயினில் ஏற்பட்ட மின் தடை போன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறாமல் இருக்க உதவும்.
சமீபத்திய ஆய்வின்படி எரிசக்தி துறையில் 400 மில்லியன் டாலர் வரை முதலீடுகள் வர வாய்ப்புள்ளது. இப்படி வளர்ந்து வரும் ஒரு துறையில் அரசும் தனியார் நிறுவனங்களும் முறையான திட்டமிடலுடன் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu