முகப்பு
ஈரானில் இருந்து 2 சிறப்பு விமானங்கள் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட 290 இந்தியர்கள்
Jun 21, 2025 05:08 AM
34
ஈரானில் இருந்து 2 சிறப்பு விமானங்கள் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட 290 இந்தியர்கள்
ஈரானில் இருந்து வந்த இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் 290 மாணவர்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தை செய்த ஆன்மீக யாத்திரீகர்கள் நேற்று நள்ளிரவில் டெல்லி விமானநிலையம் வந்தடைந்தனர்.
கையில் தேசியக் கொடியை பிடித்தபடி, இந்துஸ்தான் ஜிந்தாபாத் பாரத் மாதா கீ ஜே கோஷத்துடன் வந்த அவர்கள் உணர்ச்சி பொங்க இந்திய மண்ணைத் தொட்டு வணங்கி தங்களை பத்திரமாக மீட்ட மத்தியஅரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை தூதரக உதவியுடன் வெளியுறவு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இந்தியர்கள் வெளியேற வசதியாக ஈரான் அரசு தமது வான்பரப்பின் மீது தடையைத் தளர்த்தியது. சுமார் 1000 மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு விமானங்கள் மூலமாக டெல்லிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu