RECENT NEWS

'உடன் பிறப்பே வா' குறித்து அவதூறு பரப்புகிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முகப்பு

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே இரட்டைக் கொலை.. நகை- பணத்துக்காக கொலை நடந்ததா என போலீசார் விசாரணை

May 02, 2025 05:10 AM

481

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே இரட்டைக் கொலை.. நகை- பணத்துக்காக கொலை நடந்ததா என போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே இரட்டைக் கொலை.. நகை- பணத்துக்காக கொலை நடந்ததா என போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான விவசாயத் தம்பதி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகிரி விலாங்காட்டு வலசைச் சேர்ந்த ராமசாமி கவுண்டர் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்தார்.

இரண்டு நாட்களாக அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத அவரின் மகன், அக்கம்பக்கத்தினரை அழைத்துப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி பாக்கியம் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

படுகொலை நடந்த இடத்தில் எஸ்பி சுஜாதா நேரில் விசாரணை மேற்கொண்டார். கொலைக்கு காரணம் என்ன என தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்லடம் பகுதியில் நடைபெற்ற மூவர் கொலை சம்பவம் போல தோட்டத்து வீட்டில் இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

61 வயதில் 2-வது திருமணம்.. உலகின் 3-வது பணக்காரர் அமேசன் நிறுவனரின் அடங்காத ஆசை!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies