அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை
Jul 18, 2025
BIG STORIES
CM பாதுகாப்புக்கு தாமதமாக வந்த பெண் எஸ்.ஐ.. காத்திருந்த ட்விஸ்ட்.. சர்ப்ரைஸ் கமிஷனர்!
Jun 28, 2025 06:40 AM
249
சென்னை, பாண்டிபஜாரில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மீரா. இவர் சம்பவத்தன்று முதல்வர் செல்லும் சாலையில் பந்தோபஸ்து பணிக்காக கிளம்பினார். ஆனால், முதல்வர் பாதுகாப்பு பணிக்கு காலதாமதமாகவே செல்ல நேர்ந்தது... ஆனாலும் அவருக்கு பாராட்டுகளும் வெகுமதிகளும் கிடைத்துள்ளது. அப்படி என்ன செய்தார்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
கடந்த திங்கட்கிழமை நான்கு மணி அளவில் எஸ்.ஐ.மீரா காவல் நிலையத்தில் பணியில் இருக்கும்போது, இளம் பெண் ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதிக்க முயல்வதாக பதட்டமான தகவல் வந்துள்ளது.
எஸ்.ஐ. மீராவோ, இன்னும் கொஞ்சநேரத்தில் முதல்வர் பாதுகாப்பு பணிக்காக செல்ல வேண்டிய சூழ்நிலை. ஆனால், இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றவேண்டும் என்கிற நோக்கத்தில், தனது உயரதிகாரிகளிடம் கூறிவிட்டு, தற்கொலை முயற்சி தகவல் கொடுத்த நபரோடு விரைந்து சென்றுள்ளார்.
அங்கு சென்று பார்த்தபோது, 4 வது மாடியில் இருந்த இளம்பெண்ணின் உடல், 80 சதவீதம் ஜன்னலுக்கு வெளியே இருக்கும் காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக நான்காவது மாடிக்குச் சென்று பதட்டமாக இருந்த அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் இடம் பேசி உள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய பெண், படுக்கை அறையை பூட்டிக்கொண்டு, கதவைத் திறக்குமாறு கூறும் பெற்றோர்களிடம், தன்னை விட்டு விடுமாறும் இல்லையென்றால் மாடியில் இருந்து குதித்து விடுவதாகவும் மிரட்டிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய பெண்ணின் கையில் செல்போன் இருப்பதை, எஸ்.ஐ. மீரா பார்த்துள்ளார். பெற்றோரிடம் பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி அவரிடம் பேச முயற்சித்துள்ளார்.
முதலில் இரண்டு முயற்சி தோல்வி அடைந்தாலும் சம்பந்தப்பட்ட பெண்ணோ, எஸ்.ஐயை திட்டினாலும் தொடர்ந்து அந்த இளம்பெண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, தான் யாரையும் நம்ப போவதில்லை எனவும் ஏற்கனவே தன் கை மணிக்கட்டை வெட்டிக் கொண்டதாகவும் அதனால் உயிரிழக்கப் போவதாகவும் செல்போனில் எஸ்.ஐ. மீராவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த இளம்பெண் மீண்டும் எஸ்.ஐ. மீராவை செல்போனில் சரமாரியாக திட்டி பேசியுள்ளார். இருப்பினும் அந்த பெண்ணோடு பேசி நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர் கூறுவதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தொடர்ந்து ஆறுதலாக பேசியுள்ளார்.
எஸ்.ஐ. மீரா ஒரு சகோதரி போன்ற பாசத்துடன் பேசியதால், தற்கொலை எண்ணத்தில் இருந்த பெண், நம்பிக்கை ஏற்பட்டு, எஸ்.ஐ.யை மட்டும் அறைக்கு உள்ளே வர அனுமதித்துள்ளார்.
இதனை அடுத்து, எஸ்.ஐ. மீரா பேசிக்கொண்டிருக்கும்போதே, ஜன்னலில் அமர்ந்திருந்த பெண்ணை தீயணைப்புத்துறை வீரர்கள், உடனடியாக பிடித்து உள்ளே இழுத்து காப்பாற்றினர்.
ஒருவேளை அதிரடியாக கதவை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டாலும் அந்தப் பெண், ஜன்னலில் இருந்து கீழே குதிக்கும் சூழலுக்கு ஆளாகியிருப்பார். அதனால்தான், பேச்சு கொடுத்து காப்பாற்றினோம் என்றார் எஸ்.ஐ. மீரா.
அதன் பின்பு, சுமார் 5:30 மணி அளவில், உதவி ஆய்வாளர் மீரா முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் இணைந்து, தொடர்ந்து பணியை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
வாழ்வா சாவா என்று போராட்டத்தில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட, 27 வயது இளம்பெண்ணை காப்பாற்றிய எஸ்.ஐ. மீராவிற்கு பாராட்டுகள் குவிந்தன.
இதனைத் தொடர்ந்து, நேரில் அழைத்த மாநகர காமிஷனர் அருண், எஸ்.ஐ. மீராவை பாராட்டி வெகுமதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சக போலீஸாரும் எஸ்.ஐ. மீராவை பாராட்டி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu