முகப்பு
“என் நண்பனை வீட்டுக்கு பின்னாலதான் சார் புதைச்சேன்”- 25 நாட்களுக்குப்பிறகு தோண்டப்படும் சடலம்!
Apr 25, 2025 02:48 PM
494
"உன்னை ரொம்ப நம்பினேனடா" நண்பன் நம்புராஜன் கொலை... 25 நாட்களுக்கு பிறகு தோண்டப்படும் சடலம்!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நம்புராஜன் என்பவரும் முருங்கைவாடி பகுதியைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியனும் 'Glass' mate நண்பர்கள். கடந்த மார்ச் 30 ஆம் தேதி மதியம், வெங்கடசுப்பிரமணியனின் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்ற நம்புராஜனை காணவில்லை. இதனால், அவரது சகோதரி ராணி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், துறைமுகம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் “என் நண்பன் நம்புராஜனை வீட்டுக்கு பின்னாலதான் சார், புதைச்சு வெச்சிருக்கேன்” என வெங்கடசுப்பிரமணியன் எந்தவித சலனமும் இல்லாமல் சொல்ல, போலீஸாரே அதிர்ச்சி அடைந்தனர்.
ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நம்புராஜன். மீன்பிடித்தல் உள்ளிட்ட கூலி வேலை செய்து வந்தார். நம்புராஜனும் வெங்கடசுப்பிரமணியனும் 'Glass' mate நண்பர்களாக, அடிக்கடி குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காகவே, வெங்கட் வீட்டிற்கு நம்புராஜன் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இந்தநிலையில், வெங்கட் வீட்டில் இல்லாதபோது, வெங்கட்டின் மனநலம் பாதித்த தங்கையிடம் நம்புராஜன் தவறாக நடக்க முயன்றுள்ளார். அந்தநேரம், வீட்டிற்கு வந்த வெங்கட் இதனைப் பார்த்ததும், அதிர்ச்சி அடைந்து கோபத்தின் உச்சிக்கே போன வெங்கட், நம்புராஜனை தாக்க ஆரம்பிக்க, இருவருக்குள்ளும் மோதல் வெடித்துள்ளது. அப்போது, நம்புராஜனை வெங்கட் சுவற்றில் பிடித்துத் தள்ளியதில் நம்புராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அங்கேயே உயிரிழந்துள்ளார்.
இதனால், பதட்டமான வெங்கட், நம்புராஜனின் உடலை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டின் பின்புறமே புதைத்துவிட்டு, எதுவும் நடக்காததுபோல் கேஷுவலாக நடமாடியிருக்கிறார். மேலும், நண்பனை காணவில்லை எனக்கூறி இவரும் சேர்ந்து தேடுவதுபோல், நடித்துவந்துள்ளார்.
இந்தநிலையில், போலீஸின் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், கடைசியாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார், வெங்கட் என்கிற வெங்கடசுப்பிரமணியன். மேலும், வெங்கட்டை கைது செய்தததோடு, நம்புராஜின் பிணத்தைத் தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்
ஏற்கனவே, ராமேஸ்வரம் சம்பை கிராமத்தில் குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், நண்பர்களான முத்துக்குமாரும் சஞ்சையும் சேர்ந்து விஜயகுமாரை அடித்து படுகொலை செய்து காட்டுப்பகுதிக்குள் வீசிவிட்டு, எதுவும் தெரியாததும் போல் கிராமத்தில் நடமாடிக்கொண்டிருந்தார்கள். ஓராண்டுக்குப்பிறகு, இருவரும் நண்பனை கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. அதேபோல், நண்பனை கொன்றுவிட்டு ஒரு மாதத்தில் போலீஸில் சிக்கியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu