முகப்பு
17 வயதில் காதல் திருமணம் 27 வயதிலேயே வெட்டி சாய்க்கப்பட்ட வி.சி.க பெண்ணின் க்ளைமாக்ஸ் யார் அந்த ஆண் நண்பர்?
Jul 06, 2025 08:01 AM
897
யார் அந்த ஆண் நண்பர்? 17 வயதில் காதல் திருமணம்... 27 வயதிலேயே முடிந்த வி.சி.க பெண்ணின் க்ளைமாக்ஸ்..
17 வயதில் காதல் திருமணம்...கட்டப்பஞ்சாயத்து ரவுடியுடன் தொடர்பு... கணவனால் 27 வயதிலேயே வெட்டி சாய்க்கப்பட்ட வி.சி.க பெண்ணின் க்ளைமாக்ஸ்... அடுத்தடுத்து கைதான கணவனின் தம்பிகள்... படு கொலைக்கு காரணமான அந்த ஆண் நண்பர் யார்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த கிரைம் செய்தி தொகுப்பு....
சென்னை ஆவடியை அடுத்த, திருநின்றவூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர், விசிக திருநின்றவூர் நகரச் செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கோமதி 26 வது வார்டு விசிக கவுன்சிலராகவும், திருநின்றவூர் நகராட்சி வரி விதிப்பு சேர்மானாக இருந்து வந்தார்.
ஸ்டீபன் ராஜும், கோமதியும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுமார் 17 வயது இருக்கும் போதே கோமதி ஸ்டீபன்ராஜ் திருமணம் செய்துகொண்டார் என கூறப்படுகிறது. இத்தம்பதியருக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளன.
ஸ்டீபன் ராஜ் உள்ள பகுதிக்கு பெண்கள் வார்டு ஒதுக்கப்பட்டதால், தனக்கு பதிலாக தனது மனைவியை கவுன்சிலராக்கி அழகு பார்த்துள்ளார்.
அதாவது, அரசியலில் வளர ஆரம்பித்த ஸ்டீபன் ராஜ்க்கு கூட்டணி கட்சிகள் சார்பில் விசிகவிற்காக அந்த தொகுதியில் ஒரு வார்டில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அது பெண்கள் வார்டு என்பதால் குடும்பத் தலைவியாக இருந்த தனது மனைவியை கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடவைத்து, அதில் வெற்றிபெறவும் உதவியுள்ளார். மேலும் திருநின்றவூர் நகராட்சி வரி விதிப்பு சேர்மானாக ஆனார் கோமதி. ஆனால், பெயருக்கு தான் மனைவி கவுன்சிலர் என இருந்தாலும், ஸ்டீபன் தான் மொத்த பொறுப்புகளையும் எடுத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஸ்டீபன் ராஜின் நண்பர் ஜோசப் தேவக்குமார், பழக்கம் ஆகியுள்ளார். இவர்மீது, ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளன. கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது, ஸ்டீபன்ராஜ் வீட்டிற்கு வரும்போது கோமதிக்கும், ஜோசப்பிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது, அது நாளடைவில் எல்லை மீறிய பழக்கமாக மாறியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் இருவரும் தனிமையில் பேசுவதை யாரோ புகைப்படம் எடுத்து கணவர் ஸ்டீபன்ராஜ் அனுப்பி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனைவி கோமதிக்கும், ஸ்டீபன் ராஜுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
“நீ மக்கள் மதிக்கக்கூடிய பதவியில் இருக்கிறாய், நமது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். பின்னால் பலர் பேசுவதை காது கொடுத்து கேட்கமுடியவில்லை. காதல் மனைவியான நீயும் அவனும் எனக்கு துரோகம் செய்துவிட்டீர்கள். சிறிது நாட்கள் ஒழுங்காக அம்மாவீட்டில் இரு” என எச்சரித்து கோமதியின் தாய் வீட்டில் ஸ்டீபன் ராஜ் கொண்டு விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால், அதை கேட்காமல், ஜோசப் தேவக்குமாரை தேடி திருநின்றவூர் ரைஸ்மில் அருகே சென்று கோமதி, பேசிகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஸ்டீபன் ராஜ் தனது தம்பி அஜீத் மற்றும் நண்பர் ஜான் ஆகியோரோடு அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் தன்னோடு வாழமாட்டேன் எனவும், அந்த ஆண் நண்பரோடு செல்வதாக கூறியதாகவும், இதற்கு மேல் மனைவி தன்னோடு இருக்க மாட்டாள் என்பதால் மானம் போய்விடும் என்பதால் மறைத்து வைத்து இருந்த கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தலை, முகம் கழுத்து மிகக்கொடூரமாக வெட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தாக்குதலில் கோமதியின் கை துண்டாகி கீழே விழுந்துள்ளது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், ஜோசப் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிகொலை செய்யப்பட்டது தொடர்பாக, ஸ்டீபன் மற்றும் அவரது தம்பி அஜீத், உறவினர் ஜான் ஆகிய மூவரையும் கைது செய்தனர், போலீஸார்.
இரண்டு பேருமே அரசியலில் இருப்பவர்கள். மனம் ஒத்துப் போகாத நிலையில் பிரிந்து போவதுதான் சரியானது. இந்த பக்குவம் இல்லாமல், அரசியல் கற்று என்ன பயன்? கோமதிக்கு 17 வயதில் திருமணம் என்றால், சட்டத்தின் பார்வையில் குழந்தையாக இருக்கும்போதே, அதாவது சரியான முடிவை எடுக்கத்தெரியாத, பக்குவமற்ற வயதிலேயே கோமதியை திருமணம் செய்துள்ளார், ஸ்டீபன் ராஜ். இதுவே, சட்டப்படி ஒரு கட்டாய திருமணம் தான். இவர், காதல் திருமணம் என்கிற பெயரில் கோமதியை திருமணம் செய்யும்போது பெற்றோரும் அப்படித்தானே கோமதிக்கு அறிவுறை சொல்லியிருப்பார்கள்? அப்படியிருக்க, மனைவி கோமதியை கொலை செய்ய கணவனுக்கு எந்த நியாயமும் இல்லை. நியாயப்படுத்தவேக் கூடாது என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu