BIG STORIES
மகளின் சாதி கடந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு ரயில் முன் பாய்ந்த தம்பதி..!
Jul 07, 2025 03:30 AM
2613
மகளின் சாதி கடந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு ரயில் முன் பாய்ந்த தம்பதி..!
நாமக்கல் அருகே மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் இருவர் இரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் போலீசார் மற்றும் இரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு உடல்களையும் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிந்தவர்கள் சுப்பிரமணியன் 55 வயதான, 51 வயதான பிரமிளா என்பதும் இருவரும் கணவன்,மனைவி என தெரியவந்தது. சுப்பிரமணியன் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்ததும், பிரமிளா நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியதம் தெரியவந்தது.
தம்பதியினர் இருவரும் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள கலைவாணி நகரில் வசித்து வந்ததாகவும் அவர்களுக்கு சம்யுக்தா என்ற மகளும், ஆதித்தியா என்ற மகனும் உள்ளனர்.
தம்பதிகள் இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக இந்த விபரீத முடிவு மேற்கொண்டதாக இரயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர்.
அப்படி என்ன குடும்பப் பிரச்சனை ? என்று அவரது உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் மகளின் காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
சுப்ரமணியனின் மகள் சம்யுக்தா, அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் நிலையில், அங்கு பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது.
அந்த இளைஞர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் அவருடனான காதலுக்கு சுப்ரமணியம் அவரது மனைவி பரிமளாவும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
சம்யுக்தா தனது காதலில் உறுதியாக இருந்ததால் தம்பதியர் இருவரும் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தாங்கள் உயிரோடு இருக்கும் வரை இந்த காதலுக்கு சம்மதிக்க போவதில்லை என்று சுப்பிரமணியன் கூறி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தொன்று காலையில் மகளுடன் சுப்பிரமணியன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது அப்போது உண்டான வாக்குவாதம் பற்றி சுப்ரமணியன் மனைவி பிரமிளாவும் கோபமாக வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்றுள்ளனர்
இந்த நிலையில் தான் சுப்பிரமணியனும் பரிமளாவும் தங்களது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu