RECENT NEWS

பெண்கள் உலகக்கோப்பை ரக்பி தொடர்.. ஸ்பெயினை வீழ்த்தியது நடப்பு சாம்பியனான நியூசிலாந்து

BIG STORIES

“9 மாசமா 3 வீட்டில் குடி வச்சி குடும்பம் நடத்திட்டு ஓடுறான்..” காதலன் முகத்தில் கும்மாங்குத்து..! என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ?

Jul 08, 2025 01:21 AM

467

“9 மாசமா 3 வீட்டில் குடி வச்சி குடும்பம் நடத்திட்டு ஓடுறான்..” காதலன் முகத்தில் கும்மாங்குத்து..! என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ?

கோவையில் காதலிக்கு தாலி கட்டாமல் குடித்தனம் நடத்திய இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்ள மறுத்து ஓடும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய நிலையில் விரட்டிப்பிடித்த காதலி , கையால் காதலன் முகத்தில் ஓங்கி குத்து விட்டு போலீசில் ஒப்படைத்தார்.

“ கையாலே உன்னை தொட்டால் போதும்..” என்று உருக உருக காதலித்து விட்டு , திருமணம் செய்து கொள்ளாமல் ஓட்டம் பிடித்த காதலனை இழுத்து வந்து போலீஸ் முன்பு “நச்” என்று முகத்தில் காதலி குத்து விட்ட காட்சிகள் தான் இவை..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நின்றது, இளைஞர் ஒருவர் அதில் இருந்து இரங்கி ஓட , சுடிதார் அணிந்த இளம் பெண் , அவரை பிடித்து தாக்கியதாக கூறப்படுகின்றது. இருந்தாலும் அந்த இளைஞர் “சில்வண்டு சிக்கும் சிறுத்த சிக்காதுல..” என்று தப்பி ஓடிவிட்டார். அவர்களை பின் தொடர்ந்து இளைஞரின் நண்பரும் சென்றார் பிடிக்க இயலவில்லை. அந்த இளம் பெண் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டார்.

அங்கு வந்த காவலர் , சாலையில் என்ன தகராறு என்று கேட்க , தன்னோட லவ்வர் திருமணம் செய்து கொள்ள மறுத்து காரில் இருந்து இறங்கி ஓடிவிட்டான் என்றார்

அருகில் நின்ற நண்பரிடம் விசாரித்த போலீசார் அந்த இளைஞரை செல்போனில் பேசி வரவழைக்க கூறினர். அந்த பெண்ணுக்கு பயந்து அருகில் எங்கேயோ பம்மி இருந்த அந்த இளைஞர் நைசாக எட்டிப்பார்க்க அவரை பிடித்து அந்த பெண் போலீசில் ஒப்படைத்தார்

“காதல்ன்னா ஓகே.. கல்யாணம் என்றால் அம்மா அப்பாகிட்ட கேட்கனும் என்று சொல்ல”, அப்போது ஆவேசமான அந்த பெண், “ 9 மாசம் 3 வீடு மாறி மாறி குடிவச்சி குடும்பம் நடத்தும் போது இனிச்சிதா..? என்று கேட்டு முகத்தில் ஓங்கு ஒரு குத்து விட்டார்

இதையடுத்து அந்த பெண்ணை கட்டுப்படுத்திய போலீசார் இருவரையும் ஆட்டோவில் ஏற்றி துணைக்கு நண்பருடன் பந்தய சாலை காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் திருப்பூர் அவினாசி பாளையத்தை சேர்ந்த அந்த இளைஞர், சென்னையில் வேலைப்பார்ப்பதாக பெற்றோரை ஏமாற்றி விட்டு கோவை வடவள்ளியை சேர்ந்த தன்னை திருமண ஆசை காண்பித்து காதலித்து வாடகை வீட்டில் வைத்து தாலி கட்டாமல் குடித்தனம் நடத்தி வந்ததாக அந்த பெண் தெரிவித்தார்.

அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள நச்சரித்ததால் திருமணம் செய்து கொள்வதாக கூறி நண்பருடன் காரில் அழைத்து வந்து விட்டு இடையில் இறங்கி ஓட முயன்றதால் காதலி, கன்னம் பழுக்க பளார் அறைவிட்டதாகவும், இதனால் அடி தாங்க இயலாமல் காதலன் ஓட்டம் பிடித்ததாகவும் அவரது நண்பர் தெரிவித்தார்.

இருவரது பெற்றோரையும் காவல் நிலையம் வரவழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பன்றியை வேட்டையாடுவது போல இளைஞரை விரட்டி சென்று வெட்டிக் கொன்ற போதை கும்பல்..!  கருவேலங்காட்டிற்குள் நடந்தது என்ன ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies