முகப்பு
பீர் ஊற்றி கொல்லப்பட்ட சிறுவன் அரக்கன் விரட்டிய காட்சிகள் காதலியும் வசமாக சிக்கினார்..
Jul 05, 2025 02:21 AM
303
"கோடீஸ்வரன் புள்ளையா?" போலீஸ் அலட்சியம்? சிறுவன் இறப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே, மாவனட்டி மலை கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்ற கூலித்தொழிலாளியின் மகன் ரோகித் அஞ்செட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த 2 ஆம் தேதியன்று உடல் நிலை சரியில்லை என வீட்டில் கூறிவிட்டு ரோகித் பள்ளிக்கு செல்லாதமல் , அன்று மாலை தனது நண்பர்களோடு விளையாடுவதற்காக அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்றுள்ளார்.
இரவு ஆகியும் ரோகித் வீடு திரும்பாததால் வெளியூரில் வேலை பார்த்து வந்த ரோகித்தின் தந்தை பதறியடித்து கொண்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது ரோகித்தின் பள்ளி நண்பன் ஒருவன், ரோகித் அதே பகுதியை சேர்ந்த மாதேவன் என்ற 21 வயது இளைஞரோடு காரில் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கர்நாடக பதிவெண் கொண்ட சான்ட்ரோ கார், நின்றுகொண்டிருப்பதை அப்பகுதியினர் கண்டறிந்தனர். அங்கு சென்று பார்த்த ரோகித்தின் உறவினர்களுக்கு கார் டிக்கியில் அவனது செருப்பு மட்டுமே கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ரோகித்தின் உறவினர்கள் மாதேவன் வீட்டிற்கு சென்று ரோகித் பற்றி கேட்டதற்கு தனக்கு தெரியாது என கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து ரோகித்தின் உறவினர்கள், மாதேவனையும், அவரது நண்பரையும் பிடித்து இவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக நடந்ததை அனைத்தையும் கூறி, தனது மகனை காப்பாற்றுமாறு அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம், மற்றும் தலைமை காவலர் சின்னத்துரை ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். அதற்கு "ஆமா, கோடீஸ்வரன் பிள்ளையை கடத்தீட்டாங்க... பல கோடி கேட்டு மிரட்ட போறாங்க... போடா எங்காவது சுத்திட்டு வருவான்" என போலீசார் அலட்சியமாக கூறியதாக சிவராஜ் தெரிவித்துள்ளார்.
பின்னர் ரோகித் எங்கனு மட்டும் சொல்லிரு என ரோகித்தின் உறவினர்கள் மாதேவனிடம் கெஞ்சி கேட்டதற்கு, அவன் குந்துகோட்டை கொண்டை ஊசி வளைவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தொட்டி பின்புறம் செத்து கிடக்கிறான், எடுத்துக்கோங்க என மாதேவன் கூறியுள்ளான்.
பதறியடித்து சென்ற ரோகித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த இடத்தில் தன் மகன் வாயில் நுரை தள்ளி புதருக்குள் சடலமாக கிடப்பதை பார்த்து கண்ணீர் விட்டனர். அப்போதும் உடலை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
பெற்றோர் புகார் அளித்தபோதே விசாரணையை தொடங்கியிருந்தால் சிறுவனை காப்பாற்றி இருக்கலாம் என உறவினர்களும், ஊர்மக்களும் சேர்ந்து, போலீசாருக்கு எதிராக அஞ்செட்டி பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கொலை செய்த மாதேவன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. விளையாட்டு மைதானத்திற்கு அருகே உள்ள அறையில் தங்கி இருந்த மாதேவனும், அதே பகுதியில் கல்லூரி படித்து வரும் ஒரு பெண்ணும் கடந்த 1 ஆம் தேதியன்று மைதானத்திற்கு அருகே தனிமையில் இருந்துள்ளனர்.
இதனை சிறுவன் ரோகித் பார்த்ததால் எங்கே வெளியே சொல்லிவிடுவானோ என்ற அச்சத்தில் அன்று இரவே, சிறுவனை தனியாக அழைத்து சென்று உணவு வாங்கிக்கொடுத்து இரவு முழுவதும் பீரை வாயில் ஊற்றி விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் காலையில் வீடு திரும்பிய ரோகித்திற்கு உடல் நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது. இரவு முழுவதும் எங்கே சென்றாய் என பெற்றோர் கேட்டதற்கு ரோகித் மழுப்பியதாக கூறப்படுகிறது.
பின்னர் மறுநாள் மாலையும் மாதேவன், அவரது காதலியான கல்லூரி மாணவி,
மற்றும் நண்பரானாக உனிசனஹள்ளியை சேர்ந்த மற்றொரு மாதேவன்என மூன்று பேரும் சிறுவன் ரோகித்தை இரவில் காரில் அழைத்து சென்றுள்ளனர். இதற்காக மாதேவன் சிறுவன் ரோகித்தை பின் தொடர்ந்து சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.
பின்பு காரில் வாங்கி வைத்திருந்த 2 பீர்களை சிறுவன் வாயில் ஊற்றி மயக்கமடைய வைத்து, பின்னர் மூக்கை பொத்தி கொலை செய்துள்ளனர். இரவு 8 மணி அளவில் சிறுவன் உயிரிழந்த நிலையில் உடலை குந்துகோட்டை கொண்டை ஊசி வளைவில் பகுதியில் உள்ள 50 அடி ஆழ பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு மூவரும் வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் கைதான மாவனட்டி பகுதியை சேர்ந்த மாதேவனின் காதலியான கல்லூரி மாணவியும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.=
சிறுவனின் கொலை விவகாரத்தில் அலட்சியம் காட்டிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யாவிட்டால், தங்களது மகனது உடலை வாங்கமாட்டோம் எனவும், உடலை அவர்களே வறுத்து சாப்பிட்டுக்கொள்ளட்டும் என சிறுவனின் தந்தை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது தலைமை காவலர் சின்னத்துரையை ஆயுதப் படைக்கு பணிமாற்றம் செய்ய மாவட்ட எஸ்.பி தங்கதுரை உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சிறுவன் ரோகித்தின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பின்பு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu