BIG STORIES
திருச்செந்தூர் முருகனுக்கு குடமுழுக்கு.. விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்.. விண்ணை எட்டிய அரோகரா முழக்கம்.. வானத்தில் வட்டமிட்ட கருடன்
Jul 07, 2025 10:25 AM
140
திருச்செந்தூர் முருகனுக்கு குடமுழுக்கு.. விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்.. விண்ணை எட்டிய அரோகரா முழக்கம்.. வானத்தில் வட்டமிட்ட கருடன்
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்ட போது அரோகரா முழக்கம் விண்ணை பிளந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் குடமுழுக்கு விழாவிற்காக ராஜகோபுரத்தின் அருகே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலை பூஜை கடந்த 1ஆம் தேதி தொடங்கியது.
தினந்தோறும் நடைபெற்ற யாகசாலை பூஜையை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். கோவில் வளாகம் முழுவதும் வாழை மரத்தோரணங்களாலும் வண்ண வண்ண பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கடந்த 7 நாட்களாக நடைபெற்ற 12 கால யாக சாலை பூஜைகள் இன்று அதிகாலையில் நிறைவடைந்த பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்கள் மேள தாளாங்கள் முழங்க விமான தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
மூலவர் சுப்பிரமணிய சுவாமி, உற்சவர் சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள் ஆகிய தெய்வங்களின் விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
வானத்தில் கருடன் வட்டமிட 157 அடி உயர ராஜகோபுரத்தில் உள்ள ஒன்பது கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்த போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழா என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
தலையா? கடல் அலையா என கடற்கரை முழுவதும் கோபுர தரிசனத்தைக் காண கூடியிருந்த பக்தர்கள் மீது ட்ரோன்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது குடமுழுக்கு நடைபெற்ற கும்பத்திற்கு மேலே கருடன் பறந்ததால் பக்தர்கள் பரவசமாகினர்.
குடமுழுக்கு விழாவை காண வந்த பக்தர்களுக்கு சுடச்சுட உணவு தயாரிக்கப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu