முகப்பு
முதியோர் இல்லத்தின் 3140 சதுர அடி நிலத்தை அபகரித்த விசிக பிரமுகர் ..! ஒரே இரவில் விசிக அலுவலகமானது
Jul 06, 2025 01:45 AM
2098
முதியோர் இல்ல நிலத்தை ஆக்கிரமித்து விசிக ஆபீஸ்..! ரூ 1 1/2 கோடி நிலத்தை அபகரிக்க ஓல்டு டெக்னிக்..!
சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் குஞ்சம்மாள் தாமஸ் வயது 65. இவர் சுமார் 20 ஆண்டுகளாக அதே பகுதியில் வாடகை கட்டிடத்தில் முதியோர் இல்லம் நடத்தி நடத்தி வருகின்றார். சொந்த இடத்தில் முதியோர் இல்லம் கட்டுவதற்காக நந்தம்பாக்கம் துளசிங்கபுரம் மெயின் ரோடு அருகே 3,140 சதுரடி நிலத்தை வங்கி கடன் மூலம் 2014ம் ஆண்டு வாங்கியதாக கூறப்படுகின்றது.
இடம் வாங்கியதற்கான கடனை முழுமையாக அடைத்தபின்னர், தற்போது மீண்டும் வங்கி கடன் பெற்று முதியோர் இல்லம் கட்டுவதற்கான முயற்சியில் மூதாட்டி குஞ்சம்மாள் தாமாஸ் இறங்கிய போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முதியோர் இல்லம் கட்டுவதற்காக இடத்தை சர்வேயர் வைத்து கடந்த வாரம் அளந்து அதற்கான பணியில் ஈடுபட்டபோது, அந்த பகுதியை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் இந்த இடத்தை அபகரிக்க முயன்று அளவீடு செய்ய தடுத்ததாக கூறப்படுகின்றது. அந்த இடத்திற்கு உரிய பத்திரம், பட்டா, வரி உள்ளிட்ட அனைத்து ஆவாணங்களையும் காண்பித்ததால் போலீசார் உதவியுடன் அந்த இடதை அளவீடு செய்தனர்.
இந்த நிலையில் அந்த இடத்தில் சிறிய டிபன் செண்டராக செயல்பட்டு வந்த சிறிய கட்டிடத்தை இடத்திற்கு சம்பந்தமே இல்லாத விசிக பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து இரவோடு இரவாக அந்த கட்டிடத்தை விசிக கட்சி அலுவலகமாக மாற்றியதாக கூறப்படுகின்றது. மேலும் தாங்கள் இந்த இடத்தை, பியூலா என்பவரிடம் இருந்து வாடகைக்கு பெற்றிருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த குஞ்சம்மாள் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் எவரும் வரவில்லை.
இதையடுத்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கள் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் , அதனை மீட்டுத்தரக்கோரியும் , முதியோர் இல்லம் நடத்தும் குஞ்சம்மாள், “திடீர் விசிக ஆபீஸ்” முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மாற்றுத்திறனாளி மகனும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
குஞ்சம்மாள் நிலம் தொடர்பாக தன்னிடம் உள்ள அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் மீண்டும் காண்பித்தார். விசிகவினர் நிலம் தொடர்பான எந்த ஒரு ஆவணத்தையும் போலீசாரிடம் காண்பிக்கவில்லை. இதனால் போலீசாரும் விசிகவினர் எந்த ஆவணமும் இல்லாமல் ஆக்கிரமித்து இருப்பதாக ஒப்புக் கொண்டனர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.
அனைத்து ஆவணங்களும் முறையாக தன்னிடம் இருந்தபோதும், காவல்துறை அதிகாரிகள் எதிர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், இது தொடர்பாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் தலையீட்டு தன்னுடையை சொத்தினை மீட்டு தரவேண்டும் என குஞ்சம்மாள் கோரிக்கை விடுத்தார்
இதற்கிடையே காவல் நிலையத்தில் குஞ்சம்மாள் தரப்பினர் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், ஆவணத்தை எடுத்து வருவதாக கூறிய விசிக பிரமுகர் கடைசிவரை, காவல் நிலையத்துக்கு வரவில்லை போலீசாரும் அவரை அழைத்து வருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குஞ்சம்மாள் வேதனை தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu