RECENT NEWS

2 என்ஜின்களிலும் பறவைகள் மோதியது விபத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம்

இந்தியா

5 கி.மீ பயணத்திற்கு 1 மணி நேரம்..! ராணுவம் இல்லை! செல்போன் இயங்காது! பயங்கரவாதிகள் பகல்காமை தேர்வு செய்தது ஏன்?

Apr 24, 2025 02:28 AM

3308

5 கி.மீ பயணத்திற்கு 1 மணி நேரம்..! ராணுவம் இல்லை! செல்போன் இயங்காது!  பயங்கரவாதிகள் பகல்காமை தேர்வு செய்தது ஏன்?

ராணுவம் இல்லை! செல்போன் இயங்காது! பயங்கரவாதிகள் பகல்காமை தேர்வு செய்தது ஏன்?

காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதன் முதலாக பார்க்க ஆர்வத்துடன் இருக்கும் பகல்காமின் பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடை காலங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 2000 சுற்றுலா பயணிகள் வரை வரக்கூடிய மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படக்கூடிய பைசரன் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்கு இருக்கமாட்டார்கள் என்பதால் தான் தீவிரவாதிகள் அங்கு சென்று வெறியாட்டம் ஆடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பகல்காம். காஷ்மீரில் தேனிலவு, விடுமுறையை ரிலாக்சாக கழிக்க விரும்புபவர்களின் முதல் தேர்வாக பகல்காம் உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து பகல்காம் செல்லும் வழியில் வரிசையாக ஆப்பிள் தோட்டங்களை பார்க்க முடியும்.
 
பகல்காம் முழுவதும் பைன் மரக்காடுகளை கொண்டது. இந்த பைன் மரங்கள் தான் கிரிக்கெட் பேட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால் பகல்காமிற்குள் நுழைந்ததுமே கிரிக்கெட் பேட் தயாரிக்கும் ஆலைகளை அதிகம் காண முடியும்.
 
பகல்காம் நகருக்குள் நுழைந்ததும் வரிசையாக குதிரைகள் தான் நம்மை வரவேற்கும். ஏனென்றால் பகல்காமில் இருந்து மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கிற்கு குதிரை மூலம் மட்டுமே செல்ல முடியும். வாகனங்களை நிறுத்தும் இடத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் வரை மலையேறிச் சென்றால் தான் பைசரன் பள்ளத்தாக்கை அடைய முடியும். செங்குத்தாகவும், ஒழுங்கற்ற சாலையுடனும், சேறும் சகதியுமாக பாதை இருக்கும் என்பதால் குதிரைகள் மூலம் மட்டுமே அங்கு செல்ல இயலும்.
 
2019ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தது முதல் தீவிரவாத சம்பவங்கள் குறைக்கப்பட்டதால் பகல்காமுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. துவக்கத்தில் மலை ஏறும் பகுதியிலும் பைசரன் பள்ளத்தாக்கிலும் ராணுவம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் காஷ்மீரில் அமைதி முழுவதுமாக திரும்பிய பிறகு பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் ராணுவம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.
 
ராணுவ வீரர்கள் இருக்கமாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டு தான் 22ம் தேதி பிற்பகலில் பைசரன் பள்ளத்தாக்கு பைன் மரக்காடுகளுக்குள் இருந்து தீவிரவாதிகள் வெளியே வந்துள்ளனர். அவர்களை தடுக்க அங்கு யாரும் இல்லாத சூழலில் சுற்றுலா பயணிகளை வரிசையாக நிற்க வைத்து ஆண்கள், பெண்கள் என பிரித்து அவர்களின் மதத்தை தெரிந்து கொண்டு இஸ்லாமியர்கள் அல்லாதோரை நெற்றியில் சுட்டு தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
 
பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் செல்போன் கோபுரங்களும் கிடையாது. இதனால் தான் சுற்றுலாப்பயணிகள் உடனடியாக தங்களுக்கு உதவி கேட்டு யாரையும் அங்கிருந்து செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு வெறியாட்டம் ஆடிய தீவிரவாதிகள் 26 பேரை கொலை செய்துவிட்டு மீண்டும் பைன் மரக்காடுகளுக்குள் சென்று தப்பியுள்ளனர். தீவிரவாதிகளுக்கு உள்ளூர் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்த காரணத்தினால் தான் 26 பேரை மட்டும் கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பியதாக சொல்லப்படுகிறது. உள்ளூர் மக்கள் எதிர்ப்பு இல்லை என்றால் நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டு இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

2019ம் ஆண்டிற்கு பிறகு தான் காஷ்மீரில் சாலைகள், பாலங்கள், ரயில்கள் என அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு அம்மாநில மக்களின் வாழ்வாதாரம் உயரத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம் காஷ்மீரில் கடந்த 6 ஆண்டுகளாக அதிகரித்து வந்த சுற்றுலா வருமானம் தான். இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு காஷ்மீர் மக்களின் ஆதரவு குறைய ஆரம்பித்தது. எனவே தான் காஷ்மீரின் சுற்றுலா வருவாயை முற்றிலுமாக தடுக்கும் நோக்கில் ஈவு இரக்கம் இல்லாமல் பகல்காமில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். தாக்குதல் நடந்த மறு நாளே பகல்காம் மட்டும் அல்லாமல் சோனாமார்க், குல்மார்க், ஸ்ரீநகரில் இருந்த சுற்றுலா பயணிகள் ஒட்டு மொத்தமாக ஊர் திரும்பத் தொடங்கிவிட்டனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''என்னை நடைபிணமாக்கி அன்புமணி நடைபயணம்'' ''குலசாமி எனக்கூறி நெஞ்சில் குத்துகின்றனர்...'' அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies