RECENT NEWS

மதுபோதையில் தாறுமாறாக  லாரியை ஓட்டி மோதிய விபத்தில் ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்..!

முகப்பு

வழிதவறினாரா சின்னதுரை.. விரட்டி விரட்டி தாக்கிய சம்பவத்தின் பின்னணி..? செல்போன் செயலி பழக்கம் கேடானது

Apr 17, 2025 05:40 AM

505

வழிதவறினாரா சின்னதுரை.. விரட்டி விரட்டி தாக்கிய சம்பவத்தின் பின்னணி..? செல்போன் செயலி பழக்கம் கேடானது

வழிதவறினாரா சின்னதுரை.. விரட்டி விரட்டி தாக்கிய சம்பவத்தின் பின்னணி..? செல்போன் செயலி பழக்கம் கேடானது

நாங்குநேரியில் சாதிய தாக்குதலுக்கு உள்ளாகி தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் பிரபலமான மாணவன் சின்னதுரையை, மர்ம கும்பல் ஒன்று செல்போன் செயலி மூலம் தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்கி விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சேர்ந்த மாணவன் சின்னதுரை. கடந்த 2023 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் சாதிய பாகுபாட்டில் சக மாணவர்களால் வீடு புகுந்து அரிவாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளானார். அந்த தாக்குதலில் இருந்து மீண்டு வந்து +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக தமிழக முதல்வரும் , நடிகர் விஜய் உள்ளிட்டோரும் மாணவனை பாராட்டி இருந்தனர்

இந்த நிலையில் புதன்கிழமை மாலை நெல்லை காவல்துறைக்கு ஒரு அவசர அழைப்பு வந்துள்ளது. அதில் நாங்குநேரி மாணவன் சின்னதுரை தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயம்பட்ட மாணவன் சின்னதுரையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விசாரணையில் மாணவன் செல்போன் செயலி மூலம் பழக்கமான நண்பர் அழைத்ததால் சம்பந்தப்பட்ட தனிமையான இடத்திற்கு பைக்கில் சென்றதாக கூறியுள்ளார். அங்கு நடந்த விவகாரத்தில் ஐந்து பேரால் தாக்கப்பட்டுள்ளார். செல்போனும் பறிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மாணவனை மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தனது மகனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது தாயார் தெரிவித்தார்

செல்போன் செயலி மூலமாக பழகிய நண்பர் ஒருவர் அழைத்ததால், அந்த இடத்திற்கு சென்றதாக காயம் பட்ட மாணவன் சின்னதுரை காவல்துறையிடம் கூறியுள்ளார். மாணவன் தெரிவிக்கும் அந்த குறிப்பிட்ட பகுதி திருநங்கைகள் ஓரினச்சேர்க்கையாளர்கள் உலவும் பகுதி என்பதால் காவல்துறையினர் அங்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். Instagram மூலம் பழகி அழைத்ததாக மாணவர் தெரிவித்ததாகவும், தாக்கிய நபர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்தார்.

அன்று சாதிய பாகுபாட்டில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கல்வி மட்டுமே தீர்வு என வெற்றி கண்ட மாணவன், இன்று தவறான செயலி மூலம் கூடா நட்பை தேடிச்சென்று தாக்குதலுக்குள்ளாகி மீண்டும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது மாணவனுக்காக குரல் கொடுத்த அனைவரின் உள்ளத்தையும் வேதனையடைய செய்துள்ளது என்பதே கசப்பான உண்மை.!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“கனவிலும் யாரோ தூக்கிக்கிட்டு போற மாதிரியே இருக்கு”-அலறி துடிக்கும் சிறுமி.. ! அதிரவைத்த தாயின் புதிய வாக்குமூலம்!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies