RECENT NEWS

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

Apr 27, 2025

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

Apr 27, 2025

BIG STORIES

சேப்பாக்கம் ஸ்டேடியம் காடாக மாறிவிடுமா..?!சி.எஸ்.கே டாட் பால் 61 ..! இனி விசில் போட ஆள் இல்லை

Apr 13, 2025 12:53 AM

449

சேப்பாக்கம் ஸ்டேடியம் காடாக மாறிவிடுமா..?!சி.எஸ்.கே டாட் பால் 61 ..!
 இனி விசில் போட ஆள் இல்லை

சேப்பாக்கம் ஸ்டேடியம் காடாக மாறிவிடுமா..?!சி.எஸ்.கே டாட் பால் 61 ..! இனி விசில் போட ஆள் இல்லை


ஐ.பி.எல்லில் தொடர்ந்து 5 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு டாட் பாலுக்கு 500 மரம் நடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 6 வது போட்டியில் 61 டாட்பாலுக்கு 30,500 மரங்கள் நடவேண்டிய சூழலுக்கு சி.எஸ்.கே நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மீது ரசிகர்களுக்கு அளவு கடந்த ஈர்ப்பு ஏற்பட காரணமே போட்டியில் பேட்ஸ்மேனை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு பாலும் பவுண்டரி லைனுக்கு மேல் பறக்கும் வகையில் ரன் மெஷின் போல வீரர்கள் விளையாடுவார்கள் . போட்டியும் பார்ப்பதற்கு கடைசி வரை விறு விறுப்பாக இருக்கும்..!

இந்த ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகளும் ஒன்னுக்கொன்னு சளைச்சது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகின்றன. இந்த அணிகளை மற்ற அணிகள் ஈசியாக வீழ்த்தி பாயிண்ட் டேபிளில் மேலே சென்று விடுகின்றனர்.

சி.எஸ்.கேவின் முதல் போட்டியில் , எப்படா.. தல இறங்குவாரு.. என்று முதல் போட்டியில் காத்திருந்த ரசிகர்களை உசுப்பேற்ற டோனி களமிறங்கும்போது, “நீ பொட்டு வச்ச தங்க குடம்..” பாடலை ஒலிக்கவிட்டு மைதானத்தை சிதறவிட்டது நினைவிருக்கலாம்.. அதன் பின்னர் காத்திருந்து காத்திருந்து... பாடலை ஒலிக்கவிட்டு சிக்ஸுக்கும் ஃபோருக்கும் ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் மேட்ச் வின்னிங் பினிஷர் என்ற பெருமைக்குரிய டோனி , தன் பங்கிற்கு ஒரு சிக்ஸ், 2 ஃபோர் என்று அடித்து விட்டு பெவிலியனுக்கு நடையை கட்டிவிடுகின்றார். இதனால் தானாகவே போட்டி பினிஷ் ஆகி விடுகின்றது.

ஆரம்பத்தில் 5 கப்பு தங்களிடம் இருப்பதாக இறுமாப்புடன் சமூக வலைதளங்களில் வாய்சவடால் விட்ட சி.எஸ்.கே ரசிகர்கள் , தங்கள் அணியின் ஆட்டத்தை காண சகிக்காமலும், மற்ற அணி ரசிகர்களின் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாமலும், ஆன் லைனில் இருந்தாலும் முக நூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கமே செல்லாமல் அமைதி காத்து வருகின்றனர்.

ஆட்டத்தில் முதல் பந்தை கூட சாமிக்கு விடாத காட்டடி கந்தசாமியாக பார்க்கப்பட்ட டோனியும் அவரது சகாக்களும் களமிறங்கிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோற்று மொத்தமாக இந்த ஐபிஎல் போட்டியையே சாமிக்கு விட்டுவிட்டு ..டயர்டாகி கிடப்பதாக விமர்சனத்துள்ளாக்கி இருக்கின்றனர்

கடந்த காலத்தில் ஆர்.சி.பின்னா அடிப்போம் என்ற ரீதியில் ஈ சாலா கப் நமதே என்று கலாய்த்தும், பொம்பள கப்பு என்று இழிவுபடுத்தியும் வாய் சரவம் செய்த சி.எஸ்.கே ரசிகர்கள், நடப்பு ஐபிஎல்லில் அடுத்தடுத்து விழுந்த மரண அடிகளால் சேப்பாக்கத்துக்கு செல்வதா ? வேண்டாமா ? என்று வீட்டிலேயே பதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஐபிஎல்லில் ஒரு டாட்பாலுக்கு 500 மரங்கள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தா நைட் ரைடருக்கு எதிரான ஆட்டத்தில் சி.எஸ்.கே 61 டாட்பால்கள் , அதாவது 61 பால்களை அடிக்காமல் கோட்டை விட்டதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் 30500 மரங்களை நட வேண்டிய சூழலுக்கு சி.எஸ்.கே நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது, இதனை கலாய்க்கும் விதமாக சேப்பாக்கம் மைதானமே காடாக காட்சியளிக்கும் AI வீடியோவை மற்ற அணிகளின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படி சிஎஸ்கே மேட்ச் ஒவ்வொன்றிலும் வாங்கும் அடிகளால் பொழப்பு சிரிப்பாய் சிரித்து கிடக்க, கோவையில் டோனி கேப்டன்ஸி... நிச்சயமாக சி.எஸ்.கே ஜெயிக்கும்.. என்று சூதாட்டம் நடத்தியதாக 7 இளைஞர்களை கொத்தாக தூக்கி உள்ளனர் காட்டூர் போலீசார். அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும், 2 கார்கள், 2 பைக்குகள் ,12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல மீதமுள்ள எட்டு போட்டிகளில் 7 போட்டிகளில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அடுத்து வரும் 8 போட்டிகளிலாவது உருப்படியாக ஆடுவார்களா ? அல்லது வழக்கம் போல வாங்கிக் கட்டிக் கொள்வார்களா ? என்பதே சென்னை அணி ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies