முகப்பு
தந்தையாக 6 மணி நேரம் பரோல் கேட்ட கேங்ஸ்டர்..! இந்தியாவின் மிகப்பெரிய கேங்ஸ்டர் தம்பதியின் காதல் கதை!
Jun 19, 2025 01:04 PM
874
இந்தியாவின் மிகப்பெரிய கேங்ஸ்டர் தம்பதியின் காதல் கதை!இந்தியாவின் மிகப்பெரிய கேங்ஸ்டர் தம்பதியின் காதல் கதை!
`பரோலில் திருமணம்.., குழந்தை பெற்றுகொள்ள முடியாத நிலை.. தந்தையாக 6 மணி நேர பரோல் கேட்ட பிரபல கேங்ஸ்டர்.. இந்தியாவையே மிரளவைத்த கேங்ஸ்டர் தம்பதியின் காதல் கதையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
டெல்லியின் மிகப்பெரிய லேடி டான்னாக வலம் வருபவர் அனுராதா செளதரி.
இவர் மீது கொலை, கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் என ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட அனுராதா, தற்போது ஜாமீன் பெற்று வெளியே வந்துவந்துள்ளார்.
இவர் இந்தியாவின் மிகப்பெரிய நிழலுலக தாதாக்களின் ஒருவரான, சந்தீப் என்ற காலா ஜாதேடி என்பவரை காதலித்து வந்தார்.
தாதா சந்தீப் இப்போது பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இருப்பினும் தாதா சந்தீப்பை திருமணம் செய்ய அனுராதா முடிவு செய்தார்.
இவர்களின் திருமணம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதற்காக நீதிமன்றம் சந்தீப்பிற்கு ஒருநாள் பரோல் வழங்கியது.
இந்தியாவின் மிகப்பெரிய நிழலுலக தாதாவின் திருமணம் என்பதால், இந்த திருமணத்திற்கு டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் போலீஸார் பாதுகாப்பு கொடுத்திருந்தனர். இதனால் இத்திருமணம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இருப்பினும் திருமணம் நடைபெற்ற அடுத்த நாளே தாதா சந்தீப் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் இருவரும் சேர்ந்து திருமண வாழ்க்கையை வாழ முடியாததால், அனுராதாவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார் அனுராதா.
எனவே இந்த சிகிச்சைக்காக தனக்கு 6 மணி நேரம் மட்டும் பரோல் வழங்கவேண்டும் என்று கோரி தாதா சந்தீப் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் பாதுகாப்பு மற்றும் நடைமுறை சார்ந்த சிக்கலை கருத்தில் கொண்டு அவருக்கு மீண்டும் பரோல் வழங்க நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இருப்பினும் சிறையில் இருந்தபடி விந்து கொடுக்க அனுமதி அளித்தது.
இதையடுத்து தாதா சந்தீப், தனது மனைவி குழந்தை பெற்றுக்கொள்ள சிறையில் இருந்து விந்து அனுப்பி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அனுராதா குருகிராமில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள சிகிச்சை எடுத்து வருகிறார்.
பெண் தாதாவான அனுராதா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.
இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி.ஏ.படித்தபோது தீபக் என்பவரை காதலித்துவந்தார். அதைத்தொடர்ந்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி தீபக்கை திருமணமும் செய்து கொண்டார்.
பின்னர் இருவரும் சேர்ந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் அனுராதா பெயரில் போலி கணக்கு திறந்து அவரது பணத்தை சிலர் மோசடி செய்தனர்.
இதுகுறித்து அப்போது அனுராதா, ஹரியானா போலீஸில் புகார் செய்தபோது போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த மோசடியால் அனுராதாவுக்கு கடன் தொல்லை ஏற்பட்டது. இதனால் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியாமல் இருந்தபோது, அனுராதா மோசடி மற்றும் கிரிமினல் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார்.
அப்போதுதான் அனுராதாவிற்கு ஆனந்த்பால் சிங் என்ற கேங்க்ஸ்டரின் அறிமுகம் கிடைத்தது. அவனுடன் சேர்ந்து கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஆனந்த்பால் போலீசாரால் என்கவுன்ட்டரில் கொலைப்பட்டார்.
இதையடுத்து பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த சந்தீப்புடன் அனுராதா சேர்ந்தார்.
அதன் மூலம் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின், அது காதலாக மாறியது. இதற்கிடையே டெல்லியில் மிகவும் தேடப்படும் கிரிமினல்கள் பட்டியலில் இவர்கள் இருவரும் இடம் பெற்றிருந்தனர்.
சந்தீப் சவுத்ரி, ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆப்பரேட்டராக இருந்த நிலையில், கடந்த 2009ல் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்குச் சென்றார்.
அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த இவர், டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்தார். பிறகு லாரன்ஸ் பிஷ்னோய் என்பவருடன் இணைந்த இவர், நிழல் உலக தாதாக்களை மிஞ்சும் வகையில் ஒரு கூலிப்படையை உருவாகினார்.
பணத்துக்காக முக்கிய நபர்களை கடத்துவது, கொலை செய்வது என பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து செயல்பட்டுவந்தார்.
அதைத்தொடர்ந்து, 2 முறை சிறையிலும் இருந்த இவர், அங்கிருந்தபடி தனது கும்பலை வழி நடத்தினார். கைது நடவடிக்கைக்கு பயந்து பலமுறை தாய்லாந்து, நேபாளம் மற்றும் துபாயில் தலைமறைவாக வாழ்ந்துவந்தார்.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தீப் மற்றும் அவருடன் அனுராதா கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் தாதா சந்தீப்பிற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அனுராதா மட்டும் ஜாமீனில் வெளியே வந்தார்.
அனுராதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் `ரிவால்வார் ராணி' என்ற படம் வெளியானது குறிப்படத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu