தமிழ்நாடு
உருவ கேலியால் மனம் உடைந்து பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு
Apr 10, 2025 07:38 AM
356
உருவ கேலியால் மனம் உடைந்து பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு
சென்னை சேத்துப்பட்டு மகரிஷி விதியா மந்திர் பள்ளியில் +2 படித்து வந்த மாணவர், குண்டாக இருப்பதாக சக மாணவர்கள் கேலி செய்ததாக கூறி வீட்டின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.அப்பள்ளியில் மாணவர் கிஷோரை சில மாணவர்கள் கருப்பாக இருப்பதாகவும், குண்டாக இருப்பதாகவும் கேலி செய்ததுடன், தொடர்ந்து அவரை ரேகிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தாய் நித்யாவுடன் நேற்று பள்ளி முதல்வர் சுந்தரியிடம் புகார் கடிதத்தை கிஷோர் கொடுத்தபோது வியாழக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக கூறி அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் 4-வது மாடிக்கு சென்ற கிஷோர் தனது தந்தைக்கு போன் போடும்படி கூறிவிட்டு தாயின் கண் முன்னே கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவர்கள் கிண்டல் செய்தது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிஷோரின் பெற்றோர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதையடுத்து, வீட்டில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட இடத்திலும், குடியிருப்புவாசிகள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல், பள்ளி நிர்வாகத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu