RECENT NEWS

உலகின் மிகச் சிறந்த பி-2 விமான வடிவமைப்புக்கு உதவிய இந்தியர்! 32 ஆண்டுகள் சிறையில் இருக்கும் பின்னணி

தமிழ்நாடு

“தம்பிய விட்டுட்டு போங்க இல்ல விஷம் குடிச்சிருவோம்..” மிரட்டல் சகோதரிகள் விபரீதம்..! “பட்டதாரி பெண் பலியான சோகம்

Apr 10, 2025 01:36 AM

801

“தம்பிய விட்டுட்டு போங்க இல்ல விஷம் குடிச்சிருவோம்..”
 மிரட்டல் சகோதரிகள் விபரீதம்..! “பட்டதாரி பெண் பலியான சோகம்

“தம்பிய விட்டுட்டு போங்க இல்ல விஷம் குடிச்சிருவோம்.. மிரட்டல் சகோதரிகள் விபரீதம்..! “பட்டதாரி பெண் பலியான சோகம்

தஞ்சை நடுக்காவேரி போலீசாரால் கைது செய்யப்பட்ட தங்கள் தம்பியை விடுவிக்ககோரி , அந்த காவல் நிலையம் முன்பு விஷம் குடிக்க போவதாக மிரட்டல் விடுத்த சகோதரிகளில் ஒருவர் நிஜமாகவே விஷம் குடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தஞ்சாவூர் நடுக்காவேரி அரசமர தெருவில் வசித்து வருபவர் தினேஷ், இவர் மீது கொலை முயற்சி, மணல் கடத்தல், அடிதடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த பகுதியில் அவர் சார்ந்த சாதி சங்க தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது.

அதில் தலைவர் பதவிக்கு தினேஷ் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அருண்குமார் என்பவரும் போட்டிக்கு களமிறங்கியதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அருண்குமார் வீட்டிற்கு சென்ற தினேஷ், சங்க தலைவர் போட்டியில் இருந்து விலகிச்சொல்லி மிரட்டியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில் தினேஷை விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீசார் அரிவாளுடன் சுற்றியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து தங்கள் தம்பியை விடுவிக்க கோரி தினேஷின் சகோதரிகளான கீர்த்திகா, மேனகா இருவரும் நடுக்காவேரி காவல் நிலையம் சென்று காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஷர்மிளா தங்கள் இருவரையும் தரக் குறைவாக பேசியதாக குற்றஞ்சாட்டிய சகோதரிகள் இருவரும், காவல் நிலையம் வாயில் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது.

இதனை அறிந்து அங்கு வந்த உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சகோதரிகள் இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில் சிகிச்சை பலனின்றி பட்டதாரியான கீர்த்திகா உயிரிழந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் தம்பியை பொய் வழக்கில் கைது செய்தது தவறு என்று எதிர்ப்பு தெரிவித்த சகோதரிகளை காவல் ஆய்வாளர் அவதூறாக பேசி விரட்டியதாக தெரிவித்த உறவினர்கள், சகோதரிகள் இருவரும் அவமானம் தாங்காமல் விஷம் அருந்தி உயிருக்கு போராடிய போது போலீசார் எந்த முதல் உதவியும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர்

இந்த சம்பவம் குறித்து விவரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய தினேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், தற்போது ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் அவர் சுற்றி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு வழக்கிலும் போலீசார் தினேஷை கைது செய்ய செல்லும் போதெல்லாம், அதனை தடுப்பதற்காக அவரது இரு சகோதரிகளும் தற்கொலை மிரட்டல் விடுப்பது வாடிக்கை என்றும் இந்த சம்பவத்தில் எதிர்பாராத விதமாக ஒருவர் விஷம் குடித்து பலியாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

கீர்த்திகா உயிரிழந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் கீர்த்திகாவின் உடலை பிணகூறாய்வுக்கு அனுப்ப மறுத்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.


SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஏங்க.. அந்த பய பேச்சக்கேட்டு கூமாபட்டி ஐலாண்டு போன இன்ஸ்டா ஊர் சுற்றிகள் ஏமாற்றம்..!  “ஏங்க..வராதீங்க..” பொதுப்பணித்துறை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies