மதுரையில் வீடு புகுந்து ரௌடி வெட்டிக் கொலை
Jun 12, 2025
மதுரையில் வீடு புகுந்து ரௌடி வெட்டிக் கொலை
Jun 12, 2025
Mayday Call என்றால் என்ன..?
Jun 12, 2025
அகமதாபாத் விமான விபத்தில் 110 பேர் பலி..
Jun 12, 2025
அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது
Jun 12, 2025
BIG STORIES
அவ லவ்வர.. அவகிட்டேயே கொடுத்துருங்க..! மணமகன் குட் பை..!
May 02, 2025 02:22 AM
1992
அவ லவ்வர.. அவகிட்டேயே கொடுத்துருங்க..! மணமகன் குட் பை..!
பெங்களூரு அருகே திருமணத்துக்கு முந்தின நாள் இரவு மணப்பெண்ணின் பழைய காதல் விவகாரம் தெரியவந்ததால், மணமேடையில் இருந்து தாலி கட்ட மறுத்து மாப்பிள்ளை எழுந்து சென்று விட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது.
நூறு வருஷமானாலும் அந்த முதல் காதல் வந்து ஞாபகப்படுத்திக்கிட்டு தாங்க இருக்கும்... என்று மணமகனிடம் உருகி பேசிய மணமகளால் ஒரு திருமணமே நின்று போயிருக்கின்றது..!
பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளி , பால்புரா கிராமத்தை சேர்ந்த வேணுவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஏப்ரல் 30-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதன்படி 29 ந்தேதி இரவு வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் வேணு மணமகளுடன் மகிழ்ச்சியாக கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றனர். மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் மேடையில் நின்று புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு வித விதமாக போஸ் கொடுத்தனர்.
வரவேற்பு முடிந்ததும் மணமகனும், மணமகளும் அவரவர் அறைக்கு சென்ற பின்னர். நள்ளிரவில் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. காலையில் திருமண மண்டபத்தில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் குவிந்து இருந்தனர். புரோகிதர் மந்திரம் ஓத, மேள, தாளங்கள் முழங்க முகூர்த்த நேரமும் நெருங்கியது. மணமேடையில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையிடம், மணமகள் கழுத்தில் தாலி கட்டும்படி புரோகிதர் சொன்ன கையோடு கெட்டி மேளம் ஒலிக்க தொடங்கியது.
கையில் தாலியை வாங்கிய மாப்பிள்ளை வேணு மிகுந்த மனச்சோர்வுடன் மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட மறுத்து எழுந்து சென்று விட்டார். இதனால் திகைத்து போன உற்றார் , உறவினர்கள் பதறி போய் மாப்பிள்ளை வேணுவிடம் என்னவென்று கேட்ட போது, “மணப்பெண் ஏற்கனவே வேறு ஒருவரை காதலித்துள்ளார். அந்த முதல் காதல் மறக்காது என்று அவளே என்னிடம் கூறினார்”. “அவளோட விருப்பம் இல்லாமல் அவள திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்காது, அவ காதலிச்ச பைனோடவே அவள சேர்த்து வச்சிருங்க அவ வாழ்க்கை நல்லாஇருக்கும்” என்று உருக்கமாக பேசினார் வேணு
மேலும், “ உங்க எல்லோருடைய நிர்பந்தத்தின் பேரில் அவளை திருமணம் செய்து கொண்டாலும் என் வாழ்க்கை நிம்மதியாக இருக்காது” என்று கூறி திருமணத்தை நிறுத்திய கையோடு மண்டபத்தில் இருந்தும் வெளியேறி விட்டார்.
சினிமாக்களில் கிளைமேக்ஸ் காட்சியில் நடப்பது போன்று நிஜ கல்யாண வீட்டில் நடந்த இந்த டுவிஸ்ட்டால் மணப்பெண் மகிழ்ந்தாலும், அவரது குடும்பத்தினர், திருமணத்திற்கு வந்த அனைவரும் உறைந்து போயினர்.
இதையடுத்து மாப்பிள்ளை வேணு மீது குற்றம் சாட்டிய பெண் வீட்டார் உடனே தேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உள்ளூர் பொண்ணு , உள்ளூர் மாப்பிள்ளை என்பதால் அவர்களது கடந்த கால காதல்.. மோதல்.. கசமுசா.. கிசு கிசு.. எல்லாம் தெரிந்ததால் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் மணமகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். “ஜெயிலுக்கு சென்றாலும் செல்வேன் அவ கழுத்தில் தாலிகட்ட மாட்டேன் “ என்று மாப்பிள்ளை வேணு மறுத்து விட்டதால் அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
திருமணம் நின்று போனதாக இரு வீட்டாரும் கவலையோடு இருக்க.. சிலர் “இலைய போடுப்பா.. பசிக்குது ” என்று பந்தியில் அமர்ந்து விருந்தை சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu