முகப்பு
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்
Dec 04, 2025 12:59 AM
77
11 நாட்கள் மலையில் தீபம் காட்சி அளிக்க ஏற்பாடு
கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு அக்னிக் தலமான திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாலையில் பஞ்சமூர்த்திகள் சுவாமி சன்னதி முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளி மகா தீபத்தை காண மலையை நோக்கி அமர்ந்தனர். பின்னர் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடியே தங்க கொடிமரத்தின் முன்னால், மலையை நோக்கியபடி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
சரியாக மாலை 6 மணிக்கு கொடிமரம் எதிரில் உள்ள அகண்ட தீபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதிலிருந்து, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டு, 2668 அடி உயர அண்ணாமலையார் உச்சியில் தீபம் ஏற்ற தயாராக இருந்த பக்தர்களுக்கு தெரியும்படி உயர்த்தி காட்டப்பட்டது. இதையடுத்து மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கம் எழுப்பியபடி வழிபட்டனர். கிரிவலப்பாதையில் இருந்த பக்தர்களும் மலையை நோக்கி மகா தீபத்தை தரிசனம் செய்தனர். 11 நாட்கள் மகா தீபம் மலை மீது காட்சி தரும்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu