RECENT NEWS

நீதிபதியின் காட்டமான உத்தரவு கண்டு கொள்ளா காவல்துறை தீபம் ஏற்ற தடுப்பதன் பின்னணி..!

நீதிபதியின் காட்டமான உத்தரவு கண்டு கொள்ளா காவல்துறை தீபம் ஏற்ற தடுப்பதன் பின்னணி..!

Dec 05, 2025

நீதிபதியின் காட்டமான உத்தரவு கண்டு கொள்ளா காவல்துறை தீபம் ஏற்ற தடுப்பதன் பின்னணி..!

நீதிபதியின் காட்டமான உத்தரவு கண்டு கொள்ளா காவல்துறை தீபம் ஏற்ற தடுப்பதன் பின்னணி..!

Dec 05, 2025

முகப்பு

நாடு முழுவதும் 200+ விமான சேவைகளை திடீரென ரத்து செய்த இண்டிகோ.. பயணிகள் கடும் அவதி.. காரணம் என்ன?..

Dec 04, 2025 11:23 AM

73

நாடு முழுவதும் 200+ விமான சேவைகளை திடீரென ரத்து செய்த இண்டிகோ.. பயணிகள் கடும் அவதி.. காரணம் என்ன?..

சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் புதிய கிடுக்கிப்பிடி விதிகளால், விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, நாடு முழுவதும் 200க்கும் அதிகமான விமானங்களின் சேவையை இண்டிகோ நிறுவனம் திடீரென ரத்து செய்ததால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்களில், இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களுடன், விமானப் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல மணி நேர காத்திருப்புக்குப் பின், திடீரென விமானம் ரத்து என்பதை எப்படி ஏற்க முடியும் எனக்கூறி, விமானப் பயணிகள், இண்டிகோ நிறுவனத்திற்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு 8 மணியில் இருந்து, இன்று காலை 8 மணி வரை, 12 மணி நேரத்தில் மொத்தம் 39 விமானங்களின் சேவைகளை இண்டிகோ ரத்து செய்துள்ளது. இதேபோன்று, டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா விமான நிலையங்களில் இருந்தும் விமான சேவைகளை இண்டிகோ ரத்து செய்துள்ளதால், ஏர்போர்டுகளில், குழப்பம் நீடிக்கிறது.

விமான பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, DGCA புதிய விதிகளின் படி, விமானிகளுக்கு வாரத்தில் 48 மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வாரத்தில் இருநாட்கள் ஓய்வு போக, விமானிகளை 35 மணி நேரம் மட்டுமே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இதுதவிர, ஒரு விமான, ஒரு இரவில் இரண்டு முறை மட்டுமே விமானங்களை தரையிறக்க வேண்டும் என்றும், DGCA உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், ஒரு விமானி ஒரு இரவில் 6 முறை விமானங்களை தரையிறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது 2ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி விமானங்களை இயக்கினால், லைசென்ஸ் ரத்தாகும் என விமானிகளை DGCA எச்சரித்திருக்கிறது. இதேபோன்று விமான பணியாளர்களுக்கும் ஓய்வுடன் கூடிய பணி நேரத்தை, DGCA வரன்முறை செய்து அறிவித்திருக்கிறது.

இதனால், இரவு நேரங்களில் அதிகப்படியான உள்ளூர் விமான சேவைகளை வழங்கும் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு, விமானிகள், சிப்பந்திகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், விமான சேவைகளை ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஏர் இந்தியா, விஸ்தாரா, ஆகாசா போன்ற நிறுவனங்கள், பொதுவாக இரவு நேரங்களில் அதிக விமானங்களை இயக்குவதில்லை என்பதால், DGCAவின் புதிய விதிகளால் அவை பாதிக்கப்படவில்லை.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பூகம்பமாய் வெடித்த போலி மருந்து.. மாத்திரை தொழிற்சாலை விவகாரம்
வாய் திறக்காத முதலமைச்சர் அய்யோ... யாருக்கெல்லாம் ஆபத்து?!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies