BIG STORIES
லண்டன் டூ கோவை.. காதலனை கரம் பிடிக்க கல்லூரி மாணவி ட்ரிப்..! காருடன் பரிதவிக்கும் பெண் வீட்டார்
Oct 28, 2025 02:15 AM
774
லண்டன் டூ கோவை.. காதலனை கரம் பிடிக்க கல்லூரி மாணவி ட்ரிப்..!
லண்டனில் இருந்து கோவைக்கு வந்து கோவில் வாசலில் வைத்து காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவியை பெண் வீட்டார் அழைத்து செல்ல முயன்றதால், காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது
லண்டனில் இருந்து காதலியை விமானத்தில் கொச்சின் வரவைத்து... அங்கிருந்து கோவைக்கு காரில் அழைத்து வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்ததாக, பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் அழைத்து வந்த காதலன் இவர் தான்..!
நெல்லை பாளையங்கோட்டை மார்கெட் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் இசக்கி பாண்டி. இவரும், செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் வசதி வாய்ப்பில் பெரியவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார், தங்கள் வீட்டு பெண்ணை மேல் படிப்பிற்காக லண்டனுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து அந்த பெண் , காதலன் இசக்கி பாண்டியனுடன் செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் பெண்ணுக்கு அவரது வீட்டில் வசதியான இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து லண்டனில் படித்து வந்த அந்த பெண், காதலனின் திட்டப்படி , விமானம் மூலம் மும்பை வந்து அங்கிருந்து கொச்சின் விமான நிலையம் வந்ததாக கூறப்படுகின்றது.
அங்கு காருடன் காத்திருந்த இசக்கிப்பாண்டியின் சித்தப்பா செல்வம், காதல் ஜோடியை தனது காரில் ஏற்றி கோவை அழைத்து வந்ததாக கூறப்படுகின்றது. காதல் ஜோடி, கோவை சவுடேஸ்வரி அம்மன் கோவில் வாசலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறி பதிவு திருமணம் செய்ய ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்றபோது, பெண்ணின் உறவினர்கள் காதல் ஜோடியை மறித்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர காவல் ஆணையரகத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கிருந்த போலீசார் காதல் ஜோடியை பந்தயசாலை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். காதல் ஜோடியை விரட்டி வந்த உறவினர்கள் காவல் நிலையத்துக்கு வெளியே நின்று தங்கள் வீட்டு பெண்ணை தங்களிடம் ஒப்படைக்க கூறி மிரட்டல் விடுப்பதாக , இசக்கிப்பாண்டியின் சித்தப்பா, மீடியாக்களுக்கு தகவல் தெரிவித்தார். செய்தியாளர்களை கண்டதும், அந்த அவர்கள் கலைந்து சென்று விட்டதாகவும் இசக்கிப்பாண்டியின் சித்தப்பா செல்வம் தெரிவித்தார்
இதற்கிடையே பெண்ணின் உறவினர்கள் சிலர் காவல் நிலையத்திற்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போலீசார், தங்களை பதிவு திருமணம் செய்யவிடாமல் தடுப்பதாக கூறி இசக்கிப்பாண்டி காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தார்
காதல் திருமணம் செய்ததாக கூறிய ஜோடியை சமாதனம் செய்த போலீசார் மீண்டும் காவல் நிலையத்துக்குள் அழைத்துச்சென்றனர்
வெளி நாட்டுக்கு படிக்கச்சென்ற பெண்ணை, ஏமாற்றி கூட்டி வந்து விட்டதாக குற்றஞ்சாட்டிய பெண்ணின் உறவினர்கள் , எப்படியும் தங்கள் வீட்டுப் பெண் தங்களுடன் வந்து விடுவார் என்று காருடன் காத்திருந்தனர். நெருப்பான நெல்லையை சேர்ந்த காதல் ஜோடி என்பதால் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவர்களது சொந்த ஊருக்கே அழைத்துச்சென்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu