RECENT NEWS

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு..! அஜித்குமாரின் தம்பி மற்றும் சக ஊழியர்களிடம் சி.பி.ஐ விசாரணை..

முகப்பு

மனைவியை டவலால் கழுத்தை இறுக்கி சடலத்தின் அருகே 12 மணி நேரத்திற்கு மேலாக உறங்கிய கணவன்..”வீட்டோடு மாப்பிள்ளை” விபரீதம்!

Jun 30, 2025 02:00 AM

101

மனைவியை டவலால் கழுத்தை இறுக்கி சடலத்தின் அருகே 12 மணி நேரத்திற்கு மேலாக உறங்கிய கணவன்..”வீட்டோடு மாப்பிள்ளை” விபரீதம்!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மத்தியோடு படுவூர் கிராமத்தை சேர்ந்தவர் பபிதா நித்திய செல்வி. 39 வயதுள்ள இவருக்கும் வட்டம் பகுதியைச் சேர்ந்த 46 வயது டார்வின் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு திருமணம் நடந்துள்ளது.

பபிதா நித்திய செல்வி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர், மட்டுமில்லாமல் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், பெற்றோர் தனது மகளுக்கு தங்கள் ஊரிலேயே புதிய வீடு கட்டி கொடுத்து டார்வினை வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கியதாக கூறப்படுகிறது.

டார்வின் - பபிதா நித்திய செல்வி தம்பதியருக்கு 9 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ள நிலையில், டார்வின் அருகில் உள்ள தனது மாமனார் -மாமியாரின் உறவினர் நடத்தும் மர அறுவை ஆலையில் வேலை செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிள்ளைகள் இருவரும் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்ற நிலையில், கணவனும் மனைவியும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

சனிக்கிழமை காலை, வீட்டிற்கு வெளியே வந்து சென்ற இருவரும், அதற்குப் பின் இரவு 8 மணிக்கு மேலாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று அறையில் பார்த்தபோது பபிதா நித்திய செல்வி கட்டிலிலும், டார்வின் தரையிலும் படுத்துறங்கியபடி கிடந்துள்ளனர். பபிதா நித்திய செல்வியின் தாலி சங்கிலி மற்றும் செல்போன், அருகில் உள்ள ஜன்னல் சுவற்றில் இருந்ததோடு, அவரது கழுத்தில் ரத்த காயமும் இருந்ததால், உறவினர்கள் அருகில் சென்று பார்த்தபோது அவர் மூச்சு இல்லாமல் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே, உறவினர்கள் பதறியடித்துகொண்டு ஓடிவந்த, சத்தம் கேட்டு எழும்பிய டார்வின், மனைவியின் சடலத்தின் அருகே சென்று அமர்ந்துள்ளார். “எங்க புள்ளைய என்னடா செஞ்ச?” என அவரிடம் உறவினர்கள் கதறியபடி விசாரித்தபோதுதான், “அவளை நான் தான் டவலால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்” என ஆக்ரோஷம் அடங்காமல் கூறிவிட்டு, அப்படியே அமர்ந்திருக்கிறார், டார்வின். இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கருங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு வந்த கருங்கல் போலீசார் பபிதா நித்திய செல்வியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, டார்வினை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பின்னணி வெளிவர ஆரம்பித்தது.

விசாரணையில், “குடி பழக்கத்திற்கு அடிமையான எனக்கு வீட்டோடு மாப்பிள்ளை என்பதால், உறவினர்கள் மத்தியிலும் ஊரார் மத்தியிலும் உரிய மரியாதை இல்லை. என்னை வந்தேறி என மனைவியின் குடும்பத்தினர் தொடர்ந்து வசைபாடி அவமானப்படுத்தினார்கள். அதனால், ஆத்திரத்தில் இருந்த நான் இன்று குடி போதையில் மனைவியின் தாலி சங்கிலியை கழற்றி வைத்து விட்டு, டவலால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் கொலை செய்த பின் சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் சடலத்தின் அருகில் தரையில் கிடந்து உறங்கினே” என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
.
இதனையடுத்து டார்வின் மீது கொலை வழக்கு பதிவு செய்த கருங்கல் போலீசார், அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண பந்தம் என்பது, கணவன் -மனைவி இருவர் ஒன்றாக வாழ்வது. ஆனால், வழக்கம், கலாச்சாரம் என்கிற பெயரில், கணவரது பெற்றோர் வாழும் வீட்டில், மனைவி வந்து வாழவேண்டிய சூழல்தான் தொடர்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை பெற்று, வளர்த்த பெற்றோரை பிரிந்து கணவரின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் மனைவியாக வாழ்கிறார்கள். அப்போதெல்லாம், “வீட்டோடு மணமகள்” என பெண்களை யாரும் இழிவுபடுத்துவதில்லை. அவர்களும் அதை இழிவாக நினைப்பதில்லை. ஆனால், ஆண்களை இழிவாக நினைக்கவைக்கிறது, இச்சமூகம். அதுவும், “வீட்டோடு மாப்பிள்ளை” என்று இழிவுபடுத்தும் இச்சமூகம், இப்போது ஒரு உயிரையே பறிக்கக் காரணமாக இருந்திருக்கிறது.

மாமனார், மாமியார் ஒரே வீட்டில் இருந்து, அவர்களது தலையீடு இருந்தால் கணவர் டார்வினால், முழுமையாக ஒரு குடும்பத்தலைவராக செயல்படமுடியவில்லை என்று கூறலாம். ஆனால், வசதி படைத்தவர்களாக இருந்த பபிதா நித்திய செல்வியின் குடும்பத்தினர், தங்கள் வீட்டருகே தனியாக ஒரு வீட்டை கட்டிக்கொடுத்து மகளையும் மருமகனையும் தனியாக வாழவைத்துள்ளார்கள்.

அப்படிப்பார்த்தால், இதை வீட்டோடு மாப்பிள்ளை என்றுகூட சொல்லமுடியாது. அதேபோல், “வீட்டோடு மாப்பிள்ளை”யாக இருப்பதை இழிவாக கருதும் டார்வின், குடிக்கு அடிமையாகாமல், குடியை நிறுத்திவிட்டு, நன்றாக உழைத்து, தனது மனைவி -குழந்தைகளை தனியாக வீடு எடுத்து தங்கும் அளவுக்கு தன்னை தகுதி படுத்தியிருக்கவேண்டும்.

‘ஊருக்குள் நாலு பேர் நாலு விதமாக பேசும்’ அந்த நான்கு பேர், மாமனார்- மாமியாரின் விருந்தை சாப்பிட்டுவந்தவரை, வீட்டோடு மாப்பிள்ளை என உசுப்பேற்றி அவமானப்படுத்தி, அவரது மனைவியையே கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்று, இப்போது அரசாங்க மாமியார் வீட்டில், களி திங்க வைத்துவிட்டார்கள். இழப்பு யாருக்கு?” என கேள்வி எழுப்புகிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

வில்லங்க 'டயட்' விபரீதமாக மாறியதா? குடும்பமே நம்பியிருந்த சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies