BIG STORIES
எம்.பி மகன் மண்டை உடைப்பு.. தேங்காய் வியாபாரி மன்னிப்பு கேட்டாரா ? கேட்க வைத்தனரா ? மதுரை தேங்காய்கடை சம்பவ பின்னணி
Jul 24, 2025 05:05 AM
271
எம்.பி மகன் மண்டை உடைப்பு.. தேங்காய் வியாபாரி மன்னிப்பு கேட்டாரா ? கேட்க வைத்தனரா ?
மதுரை மாநகர் கே.கே.நகர் லேக்வியூ பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த்(30). தேனி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் மகனான இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த 1 ஆம் தேதி காலை தனது கர்ப்பிணி மனைவியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார்
அப்போது கோவில் வாசலில் தேங்காய், பழம் வியாபாரம் செய்யும் அந்த பகுதியை சேர்ந்த மாணிக்கம் நகரைச் சேர்ந்த சமயமுத்து( 56), அவருடைய மகன் மணிகண்ட பிரபு( 25) ஆகியோரிடம் பழத்தட்டு வாங்கியபோது கோவில் நிர்வாகத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதலாக 30 ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நிஷாந்த் வாங்கிய பொருட்களில் வாழைப்பழம் அழுகியும், தேங்காய் உடைந்திருந்த நிலையில் வேறு தேங்காய், பழ தட்டு கொடுக்குமாறு கேட்டார்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சமயமுத்துவும் அவரது மகன் மணிகண்டபிரபுவும் தேங்காய்களை நிஷாந்த் மீது வீசியதால் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் இதில் நிஷாந்த் மண்டை உடைந்தது.
கடைக்குள் இருந்து வீசப்பட்ட தேங்காய் தனது கர்ப்பிணி மனைவி மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக கடைக்குள் சென்று அவர்களை தடுக்க சென்றபோது , தந்தையும் மகனும் சேர்ந்து ப்ளாஸ்டிக் சேரால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டதாக நிஷாந்த் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்
சமயமுத்துவும் அவரது மகன் மணிகண்ட பிரபுவும் சிரையில் அடைக்கப்பட்ட நிலையில் சமயமுத்துவின் மனைவி மகேஸ்வரி கடந்த 2 ஆம் தேதியன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் மதுரையை சேர்ந்த நிஷாந்த் என்பவர் கடைக்கு வந்து தேங்காய் பழம் தட்டு வாங்கியதில் எனது கணவர் மற்றும் மகன் வேலையாட்களுடன் தகராறு செய்தார் எனவும் கடைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியுள்ளார்.
இது CCTV யிலும் பதிவாகியுள்ளது. நிஷாந்த் மீது நடவடிக்கை கோரி தெப்பக்குளம் காவல்நிலையத்தில் தன் கணவர் புகார் மனு அளித்தும் காவல்துறையினர் ரசீது கொடுக்கவில்லை என்றும் தனது கணவரையும் மகனையும் தாக்கியவர் வழக்கறிஞர் என்பதாலும், அவரது தந்தை ஆளும் கட்சியான தி.மு.க-வின் தேனி தொகுதி ( M.P) பாராளுமன்ற உறுப்பினராகவும் இருப்பதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் திமுக எம்.பியின் மகன் நிஷாந்திற்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர் என்று புகாரில் கூறி இருந்தார்
தனது கணவர் மகன் செல்போன்களை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டனர். எங்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த CCTV கேமராக்களையும் DVR ஹார்டு டிஸ்க் எடுத்துச் சென்று விட்டார்கள். அதிலிருக்கும் உண்மையான தடயங்களையும், நடந்த சம்பவங்களையும் மறைத்து விட்டனர். மேலும் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
தேனி திமுக எம்பியின் மகன் மீதும், தெப்பக்குளம் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு வைத்து வீடியோ ஒன்றையும் சமயமுத்துவின் மனைவி மகேஸ்வரி வெளியிட்டிருந்தார்.
புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசிய வியாபாரியான சமய முத்து , தாங்கள் நடந்து கொண்ட விதத்திற்கு 22 நாட்கள் கழித்து மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். தான் மன்னிப்பு கேட்பதற்கு உரிய காரணத்தையும் சமய முத்து தெரிவித்தார்.
நிஷாந்த் எங்களது கடைக்கு வந்தபோது தேங்காய் வெயிலால் வெடித்திருந்த நிலையில் வேறு தேங்காய் வந்து கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் மாறி மாறி தேங்காயை வீசி சண்டையிட்டனர் இதனால் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் எங்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அடுத்த நாளே எனது மனைவி கமிஷனர் அலுவலகத்தில் எனது நாங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சிலரின் தூண்டுதலின் பெயரில் புகார் அளித்துள்ளார்.
கோவில் இடத்தில் பொது இடத்தில் இதுபோன்று சங்கடமாக தான் இருக்கிறது. கடையை 15 வருடமாக நடத்திக் கொண்டிருக்கிறேன் தேங்காய் கடை மாலை கடை எடுத்திருக்கிறேன் இதுவரைக்கும் அப்படி நடந்ததில்லை... நான் கடையில் இருந்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்காது, ரெண்டு பேரும் சண்டை போட்டார்கள் சும்மா வாக்குவாதம் ஆகிவிட்டது. நிஷாந்துக்கு ரத்த காயம் ஏற்பட்டதால் அவரது புகார் மீது FIR போட்டார்கள் பிளாஸ்டிக் சேரை வைத்து எனது மகன் அடித்தான்
கோவில், பொது இடம் சண்டை சத்தம் வேண்டாம் என்று சிலர் சொன்னவுடன் நிஷாந்த் மீது எந்தவித வழக்கும் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று கூறி புகாரை வாபஸ் வாங்கி விட்டேன். என்னை யாரும் மிரட்டவில்லை கோவில் இடத்தில் அப்படி நடத்திருக்கூடாது பெரியவங்க வந்து சொன்னாங்க ரெண்டு பேரும் சமாதானமாக போயிருங்க என்று சொன்னார்கள். நான் 26 லட்சம் ரூபாய்க்கு கடைகள் ஏலம் எடுத்துள்ளேன் யாரும் மிரட்டவில்லை என்றார் சமயமுத்து
ஒரு கோவில் இடத்தில் இப்படி நடந்து போச்சு என மனசாட்சி உறுத்தியதால் நான் மன்னிப்பு கேட்கிறேன்., எங்கு வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கிறேன்
நிஷாந்திடம் மன்னிப்பு கேட்க விரும்பினால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என் மகன் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
திமுக எம்பியால் மிரட்டலா ? என்ற கேள்விக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம். உங்களையெல்லாம் கூட பிறந்த அண்ணன் தம்பியாக கேட்டுக்கொள்கிறேன் பகை உணர்வு வேண்டாம் தொழில் நடத்துவதற்காக இதை செய்கிறேன் எங்களை மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறோம் நிஷாந்த்கிட்ட சொல்லி எங்களை மன்னித்து விட சொல்லுங்கள் என்றார் சமய முத்து
எங்கள் மீதான புகாரை வாபஸ் வாங்க சொல்லவில்லை என் கடைதான் என் வாழ்வாதாரம் , நான் நிஷாந்திடம் மன்னிப்பு கேட்கவில்லை சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் .எனது கடைக்கு ஒப்பந்தத்தின்போது போட்டியாக வந்தவர்கள் செய்திருப்பார்கள் என நினைத்தேன் . முதலில் அது தங்க தமிழ்ச்செல்வன் எம்பி மகன் என்று எனக்கு தெரியாது எனது மகனுக்கும், பணியாளர்களக்கும் தெரியாது
புகார் கொடுக்கும் போது தான் தெரியும் சன் ஆப் தங்க தமிழ்செல்வன் என கூறும் போது தான் அண்ணன் மகன் என தெரியும் என்றார் சமயமுத்து
மன்னிப்பு கேட்கிரவன் மனுஷன்... மன்னிக்கிரவன் பெரிய மனுஷன் என்று இந்த ப்பிரச்சனையை சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்று சொல்லும் சமூக ஆர்வலர்கள் 25 லட்சம் ரூபாய் கொடுத்து எடுத்துள்ள தேங்காய் கடை உரிமம் ரத்தாகிவிடும் என்று அஞ்சியே சமய முத்து மன்னிப்பு கேட்டிருக்க கூடும் என்கின்றனர்.
காசு கொடுக்காமல் தேங்காயை எடுத்து வீதியில் உடைத்தாலும்.... தேங்காயை எடுத்து அடுத்தவர் மண்டையை உடைத்தாலும் குற்றம் கேடும் தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu