BIG STORIES
22 நாட்கள் கழித்து திமுக எம்.பி மகனிடம் மன்னிப்பு கேட்ட வியாபாரி..! தேங்காய் வீச்சு சம்பவ பின்னணி
Jul 24, 2025 01:44 AM
185
22 நாட்கள் கழித்து திமுக எம்.பி மகனிடம் மன்னிப்பு கேட்ட வியாபாரி..!
மதுரை தெப்பக்குளம் கோவில் தேங்காய் பழக்கடையில் திமுக எம்.பி தங்க தமிழ்செல்வன் மகனின் மண்டையை உடைத்த சம்பவம் தொடர்பாக 22 நாட்கள் கழித்து மன்னிப்பு கேட்பதாக தேங்காய் வியாபாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மதுரை மாநகர் கே.கே.நகர் லேக்வியூ பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த்(30). தேனி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் மகனான இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த 1 ஆம் தேதி காலை தனது கர்ப்பிணி மனைவியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார்
அப்போது கோவில் வாசலில் தேங்காய், பழம் வியாபாரம் செய்யும் அந்த பகுதியை சேர்ந்த மாணிக்கம் நகரைச் சேர்ந்த சமயமுத்து( 56), அவருடைய மகன் மணிகண்ட பிரபு( 25) ஆகியோரிடம் பழத்தட்டு வாங்கியபோது கோவில் நிர்வாகத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதலாக 30 ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நிஷாந்த் வாங்கிய பொருட்களில் வாழைப்பழம் அழுகியும், தேங்காய் உடைந்திருந்த நிலையில் வேறு தேங்காய், பழ தட்டு கொடுக்குமாறு கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அப்போது சமயமுத்துவும் அவரது மகன் மணிகண்டபிரபுவும் தேங்காய்களை நிஷாந்த் மீது வீசியதால் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் இதில் நிஷாந்த் மண்டை உடைந்தது.
கடைக்குள் இருந்து வீசப்பட்ட தேங்காய் தனது கர்ப்பிணி மனைவி மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக கடைக்குள் சென்று அவர்களை தடுக்க சென்றபோது , தந்தையும் மகனும் சேர்ந்து ப்ளாஸ்டிக் சேரால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டதாக நிஷாந்த் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்
சமயமுத்துவும் அவரது மகன் மணிகண்ட பிரபுவும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சமயமுத்துவின் மனைவி மகேஸ்வரி கடந்த 2 ஆம் தேதியன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் மதுரையை சேர்ந்த நிஷாந்த் என்பவர் கடைக்கு வந்து தேங்காய் பழம் தட்டு வாங்கியதில் எனது கணவர் மற்றும் மகன் வேலையாட்களுடன் தகராறு செய்தார் எனவும் கடைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாகவும் தங்கள் மீது மட்டும் போலீசார் நடவடிக்கை எடுத்ததாக புகாரில் கூறி இருந்தார். மேலும் தேனி திமுக எம்பியின் மகன் மீதும், தெப்பக்குளம் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு வைத்து வீடியோ ஒன்றையும் சமயமுத்துவின் மனைவி மகேஸ்வரி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசிய வியாபாரியான சமயமுத்து, நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். நான் 26 லட்சம் ரூபாய்க்கு கடைகள் ஏலம் எடுத்துள்ளேன் யாரும் மிரட்டவில்லை என்றும் ஒரு கோவில் இடத்தில் இப்படி நடந்து போச்சு என மனசாட்சி உறுத்தியதால் நான் மன்னிப்பு கேட்கிறேன், எங்கு வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கிறேன், நிஷாந்திடம் மன்னிப்பு கேட்க விரும்பினால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என் மகன் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்
போலீசில் தங்கள் மீது புகார் அளிக்கும் போது சன் ஆப் தங்க தமிழ்செல்வன் என கூறும் போது தான் , காயம் பட்டது அண்ணன் மகன் என தெரியும் , என்றும் வெயிலால் வெடித்த தேங்காயால் இந்த பிரச்சனை உருவானதாகவும் சமயமுத்து தெரிவித்தார்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu