RECENT NEWS

"அறையில் ரகசிய கேமரா வைத்து உடை மாற்றுவதைப் படம் பிடித்தார்" - ஓட்டுநரைக் கொன்றதாகக் கைதான ஜனசேனா பெண் நிர்வாகி

"அறையில் ரகசிய கேமரா வைத்து உடை மாற்றுவதைப் படம் பிடித்தார்" - ஓட்டுநரைக் கொன்றதாகக் கைதான ஜனசேனா பெண் நிர்வாகி

Jul 14, 2025

"அறையில் ரகசிய கேமரா வைத்து உடை மாற்றுவதைப் படம் பிடித்தார்" - ஓட்டுநரைக் கொன்றதாகக் கைதான ஜனசேனா பெண் நிர்வாகி

"அறையில் ரகசிய கேமரா வைத்து உடை மாற்றுவதைப் படம் பிடித்தார்" - ஓட்டுநரைக் கொன்றதாகக் கைதான ஜனசேனா பெண் நிர்வாகி

Jul 14, 2025

முகப்பு

"ஓஹோ..ஜோடியா ரவுண்டு அடிக்கிறீங்களா?"..கண் முன்னே கூறு போட்ட கணவர்.. வேடிக்கை பார்த்ததால் உயிர் போனது..

Jun 16, 2025 01:43 PM

60

"ஓஹோ..ஜோடியா ரவுண்டு அடிக்கிறீங்களா?"..கண் முன்னே கூறு போட்ட கணவர்.. வேடிக்கை பார்த்ததால் உயிர் போனது..

சாலையில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த நபரை அரை மணி நேரமாக அங்கிருந்த பொதுமக்களும் போலீசாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அதிர்ச்சிக் காட்சிகள் தான் இவை..

கிருஷ்ணகிரி ஐந்து ரோடு ரவுண்டானாவில் பொதுமக்கள் அதிகம் நடமாடிய நேரத்தில், நடத்தர வயதான ஆண் ஒருவர் ஒரு பெண்ணோடு பைக்கில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த ஆண் ஒருவர் ரவுண்டானா வளைவில் வைத்து முன்னாள் சென்ற பைக்கை வழிமறித்துள்ளார்.

இதனால் பைக்கில் இருந்த இருவரும் கீழே இறங்கியபோது வழிமறித்த அந்த நபர் , தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பைக் ஓட்டி வந்த நபரின் முகம், தலை என சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை பார்த்த பின்னால் இருந்த அந்த பெண் அலறி கூச்சலிட்டுள்ளார்.

உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அரிவாளால் வெட்டியவரை பிடித்து, புறநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் போலீசார் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அரை மணி நேரமாகியும் ரத்த வெள்ளத்தில் துடித்தவருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல்
பொதுமக்களும், போலீசாரும் வேடிக்கை மட்டுமே பார்த்ததாக கூறப்படுகிறது. பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் கைது செய்தவரை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேசுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 45 வயதான வெங்கடேசன் என்பவர் நாடகக் கலைஞராக இருந்து வந்துள்ளார். கூத்து நாடகம் போட பல ஊருக்கு சென்று வந்த அவருக்கு, குருவரெட்டி போடூர் பகுதியை சேர்ந்த சின்ன நரசிம்மன் என்பவரின் மனைவியோடு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் தகாத உறவாக மாறியதாக கூறப்படுகிறது

இருவரும் போனிலும், நேரிலும் நெருங்கி பழகி வந்த நிலையில் கடந்த மாதம் இந்த விஷயம் சின்ன நரசிம்மனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவரது மனைவியை அவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்போதும் இருவரும் தகாத உறவை கைவிடாததால் ஆத்திரமடைந்த சின்ன நரசிம்மன் ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.

தனது மனைவி வெளியே செல்வதை கவனித்த சின்ன நரசிம்மன் பைக்கில் பின் தொடர்ந்துள்ளார். அப்போது அவரின் மனைவி நாடகக் கலைஞர் வெங்கடேசனோடு பைக்கில் செல்வதை பார்த்த சின்ன நரசிம்மன், அவர்களை பின் தொடர்ந்து சென்று ரவுண்டானாவில் வைத்து வெங்கடேசனை ஆத்திரம் தீர வெட்டியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

போலீசார் சின்ன நரசிம்மனை கைது செய்துள்ள அதே நேரத்தில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வெங்கடேசன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அரை மணி நேரமாக யாரும் அவருக்கு உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்ததே அவரின் இறப்பிற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"லவ் மேரேஜ் பண்ண பொண்ண அடிச்சு மாட்டிட்டாங்க".. புள்ளத்தாச்சினு கூட பாக்கல" - ரிதன்யாவை அடுத்து குமுதா?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies