முகப்பு
மேடையில் நடிகர் தனுஷ் சரவெடி!.. ஒரு செங்கல்லை கூட ஆட்டமுடியாதாம்.. யாரை சொல்கிறார் தெரியுதா?
Jun 02, 2025 12:33 PM
260
சமீபகாலமாகவே நடிகர் தனுஷ் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், எதற்க்கும் எதிர்வினை ஆற்றாமல் மௌனம் காத்துவந்த தனுஷ், தற்போது தன்னுடைய பேச்சால் பதிலடி கொடுத்திருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா, ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு, மேடைக்கு வந்து நடிகர் தனுஷ் பேசியது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே நடிகர் தனுஷ் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே சமீபத்தில் சட்ட போராட்டமும், அதனால் சோஷியல் மீடியாவில் வெடித்த சர்ச்சைகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து நடிகர் ரவிமோகன்-ஆர்த்திக்கு இடையே ஏற்பட்ட பிரிவுக்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்றும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பட்டது. ஆனால் இவை எதற்க்கும் நடிகர் தனுஷ் எதிர்வினை ஆற்றாமல் அமைதியாகவே இருந்தார்.
இந்த நிலையில், தன்னைச் சுற்றி பரவிவந்த வதந்திகளுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசியிருக்கிறார்.
அதில், எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க. என்ன negativity வேணும்னாலும் spread பண்ணுங்க. ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாதம் முன்பு என்னைப்பற்றி நெகட்டிவிட்டி பரப்பபடுவதாக வேதனை தெரிவித்த தனுஷ், நாலு வதந்திகளை கூறி என்னை காலி பண்ணலாம்னு நினைச்சா, ஒரு செங்கல்லை கூட ஆட்டமுடியாது என கூறியுள்ளார்.இத்தனை நெகட்டிவிட்டிகளுக்குப் பிறகும் எனக்காக இத்தனை ரசிகர்கள் கூட்டம் இருக்குன்னா, உங்க அன்பும் மேலிருந்து கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி என்னை கை பிடித்துக் கொண்டு வழி நடத்துதே அந்த சக்தியும் என்னை எப்பவுமே கை விடமாட்டாங்க, ”தம்பிங்களா கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்க” என தனது ஹேட்டர்களுக்கு தரமான பதிலடியை தனது பேச்சின் மூலம் கொடுத்துள்ளார் தனுஷ்.
தொடர்ந்து பேசிய அவர், சினிமாவில் தன்னுடன் 23 ஆண்டுகளாக தனக்காக இருக்கும் ரசிகர்கள் கூட்டம் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லை, நீங்கள் எல்லாம் என்னுடைய கம்பேனியன் (companion), வழித்துணை என்னை எப்போதும் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் தீப்பந்தங்கள் தான் என்னுடைய ரசிகர்கள், இவர்கள் என்கூட இருக்க வரைக்கும் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வக்கில்லாம இருந்திருக்கேன், இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்கேன். ஆனால், எப்போதுமே மன நிம்மதியுடன் இருக்க வேண்டும். அதுதான் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் என தெரிவித்துள்ளார்
மேலும் பேசிய அவர், உங்களோட சந்தோஷம் மற்றும் மன நிம்மதியை வெளியே தேடாதீங்க, அதை உங்களுக்குள்ள தேடுங்க, அதுதான் உங்களை கடைசி வரைக்கும் ஹேப்பியா இருக்க வழிநடத்தும் என பேசி முடித்தார். இருப்பினும் நடிகர் தனுஷ் யாரின் பெயரையும் குறிப்பிடாமல் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக சுற்றிவந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் தனுஷின் இந்த பேச்சு, அவரது ரசிகர்களை மேலும் உற்சாகம் அடையச்செய்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu