முகப்பு
பழைய ஏ.டி.எம்-தான் டார்கெட்... "அட்டையை ஒட்டு; பணத்தை எடு" ஏ.டி.எம் திருடர்கள் மூவர் கைது..!
May 27, 2025 04:15 PM
244
பழைய மாடல் எஸ்.பி.ஐ ஏடிஎம் இயந்திரங்களைக் குறிவைத்து நூதன முறையில் பணத்தைத் திருடி வந்த மூன்று திருடர்கள்
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நரேன்குமார் Hitachi ATM Service நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேற்கண்ட நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலிருந்து நரேன்குமாரை தொடர்பு கொண்ட அதிகாரிகள் திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள SBI ATM மையங்களில் ஏதோ தவறு நடந்துள்ளது என்றும் ஆய்வு செய்யுமாறும் கூறியுள்ளனர். அதன்படி நரேன்குமார் மேற்படி SBI ATM மையங்களில் ஆய்வு செய்து போது, பணம் வரக்கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பணம் வெளியே வராமல் தடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.
நரேன்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருவான்மியூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். ATM கண்காணிப்பு குழுவினருடன் ஒருங்கிணைந்து மேற்கொண்ட விசாரணையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த திருடர்களின் அடையாளம் சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்தது. குல்தீப் சிங், பிரிஜ்பான், சுமித் யாதவ் குமார், ஆகிய அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
ATM இயந்திரத்தின் முதல் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து, பணம் வரக்கூடிய இடத்தில் ஒரு கருப்பு நிற அட்டையை டேப் வைத்து ஒட்டி விடுகின்றனர். வாடிக்கையாளர் வந்து டெபிட் கார்டை நுழைத்து பாஸ்வார்டை உள்ளீடு செய்ததும் வெளியே வரும் பணம் அந்த அட்டைக்குள் சிக்கிக் கொள்கிறது. “இயந்திரத்தில் ஏதோ பிரச்சனை இருக்கலாம்; நமது பணம் வங்கிக் கணக்குத் திரும்ப வந்துவிடும்” என நினைத்து, வாடிக்கையாளர் சென்று விடுகின்றனர். சிறிது நேரத்தில் அங்கு வரும் இந்த திருட்டு கும்பல், பணத்தை எடுத்துக் கொள்ளும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Breath...
உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்து, சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் கொள்ளையடிப்பதையும் பின்னர் ரயில் மூலம் சொந்த ஊருக்குத் தப்பிச் செல்வதையும் இந்த கும்பல் வாடிக்கையாக வைத்திருந்துள்ளதாகவும் போலீசார் கூறினர். கூகுள் மேப்பை பயன்படுத்தி எஸ்பிஐ ஏடிஎம் அமைந்துள்ள இடத்தை அடையாளம் காணும் இந்த கும்பல் உத்தரப்பிரதேசத்திலும் இதே பாணியில் கைவரிசை காட்டியுள்ளது.
இதுவரை எவ்வளவு பணம் இதுபோன்று கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்து வங்கி தரப்பில் இருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படாததால் கொள்ளையர்கள் எவ்வளவு பணத்தை கொள்ளையடித்தார்கள் என்பதை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது. அதனால் பழைய வகை இயந்திரங்கள் உள்ளன என்பது குறித்த பட்டியலை எஸ் பி ஐ நிர்வாகத்திடம் காவல்துறை கேட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu