RECENT NEWS

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது..! 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..

முகப்பு

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025 03:35 PM

529

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

AI மூலம் பெண் தோழியை மிரட்டி.. உல்லாச டார்ச்சர்.. உடனிருந்து உதவி... நாடகமாடியவர் சிக்கிய பின்னணி..!

சென்னை நொளம்பூரில் உள்ள தனியார் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த மணிப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மார்ஃபிங் முறையில் தன்னையும், தனக்கு தெரிந்த நண்பரையும் இணைத்து ஆபாசமாக வீடியோ உருவாக்கி, அதன்மூலம் மிரட்டும் மர்ம நபர் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வழக்கறிஞருடன் வந்து, புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து, சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த பெண்ணும் அவரது நண்பரும் இருப்பது போன்ற ஆபாச வீடியோவை தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாது, டெலிகிராம், whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் அனுப்பி மிரட்டிய நபர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விசாரிக்க ஆரம்பித்தனர்.

குறிப்பாக, டெலிகிராமில் வீடியோ வெளியானதால், அந்த டெலிகிராம் செயலியை பயன்படுத்திய மர்ம நபரை போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர். இருப்பினும், தன் இருப்பிடத்தை கண்டறிய முடியாதபடி தொழில்நுட்ப ரீதியாக தப்பித்த அந்த நபரை, சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. கைதானவர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி, ஜோ ரிச்சர்ட் என்பது தெரியவந்தது. இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படித்துள்ளார். அது மட்டுமல்லாது சைபர் கிரைம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்களையும் கற்று அறிந்துள்ளார், எனப்து விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையெல்லாம் பயன்படுத்தி தான், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை, தன் ஆசைக்கு இணங்குவதற்காக மிரட்டியது விசாரணையில் அம்பலமானது.

குறிப்பாக, பகுதி நேரத்தில் Uber செயலியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய ஜோ ரிச்சர்ட், நொளம்பூரில் அடிக்கடி மணிப்பூரைச் சேர்ந்த பெண்கள் வீட்டிற்கு செல்வதற்கு, இருசக்கர வாகனத்தை புக் செய்வதை அறிந்து கொண்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை மீண்டும் மீண்டும் பிக்கப் செய்து வீட்டில் விடும் வகையில், Uber செயலியை நுட்பமாக பயன்படுத்தி உள்ளார், என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணிடம், ஜோ ரிச்சர்ட் நட்பாக பழக ஆரம்பித்துள்ளார். இருவரும் கிறிஸ்தவர்கள் என்பதால், தேவாலயங்களுக்கு செல்வது என தொடங்கி, நெருக்கமாகியுள்ளனர். அவ்வாறு நெருங்கி பழகுவதற்கு மணிப்பூர் பெண் மறுத்ததாக கூறப்படுகிறது. முன்னதாக பெண்ணிடம் பழகும்போது, அவரது இன்ஸ்டாகிராம் ஃபோட்டோக்கள் உள்ளிட்டவற்றை, நட்பு ரீதியாக வாங்கி வைத்து இருந்துள்ளார்.


இந்நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணிற்கு திடீரென மர்ம நபர் ஒருவர், instagram மூலமாக பேசியுள்ளார். அப்போது, தானும் மணிப்பூர் பெண்ணும் ஆபாசமாக இருப்பதுபோன்ற, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆபாச வீடியோ ஒன்றை தயாரித்து, மணிப்பூர் பெண்ணிற்கே அனுப்பி மிரட்டியுள்ளார். தொடர்ந்து டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளார்.

அவர்கள் குடும்பத்தினர், உறவினர்கள் சமூக வலைதள பக்கத்திலும், இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோவை அனுப்பியதால், தொடர்ச்சியாக உறவினர்கள் உள்ளிட்டோர் தொடர்புகொண்டு அதுகுறித்து கேட்டுள்ளனர். இதனால், அச்சமடைந்த மணிப்பூர் பெண், அந்த மர்ம நபர் குறித்து, ஜோ ரிச்சர்ட்டிடமே உதவி கேட்டுள்ளார்.

இத்தனை சேட்டைகளையும் செய்த ஜோ ரிச்சர்ட்டும் உதவுவதுபோல், அந்த instagram மர்ம நபரை தொடர்பு கொண்டு குறுஞ்செய்தி மூலமாக எச்சரிக்கை கொடுத்துள்ளார். அதாவது, தனக்குத் தானே மெசேஜ் அனுப்பி மிரட்டிக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

அப்போது, இந்த ஆபாச வீடியோவை வெளியில் விடாமல் இருப்பதற்கு, ஜோ ரிச்சர்ட் உடன் உல்லாசமாக இருந்து உண்மையாகவே வீடியோ அனுப்ப வேண்டும் என மர்ம நபர் வேடத்தில்,மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது, ஜோ ரிச்சர்ட் இந்த பிரச்சனையை முடிக்க உல்லாசமாக வீடியோ எடுத்து அனுப்பி விடுவோம் என மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை சம்மதிக்க வைத்துள்ளார்.

இந்தநிலையில் தான், அந்தப் பெண்ணின் சகோதரிக்கு தகவல் தெரிந்து, ஜோ ரிச்சர்ட்டின் கிரிமினல் ப்ளானை நடக்கவிடாமல், அப்பெண்ணை மீட்டு உள்ளார்.

குறிப்பாக, நாடகமாடும்போது, பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்காக உதவுவதுபோல் ஓட்டல் ரூம் புக் செய்து, உல்லாசமாக இருக்கலாம் என ஐடியா கொடுத்ததாக ஜோ ரிச்சர்ட் பற்றி சம்பந்தப்பட்ட மணிப்பூர் பெண், போலீசாரிடம் தெரிவித்ததால் சந்தேகம் வலுத்துள்ளது.

இருப்பினும் டெக்னிக்கலாக தப்ப முயன்ற ஜோ ரிச்சர்ட்டை, டெக்னாலஜியை வைத்து சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதிலும் அவர் வைத்திருந்த லேப்டாப் மற்றும் செல்போனை ஆய்வு செய்தபோது, ஆபாசமாக Artificial intelligence -ஐ பயன்படுத்தி வீடியோ தயாரிக்க தேவையான செயலிகளையும் புகைப்படங்களையும் அவர் வைத்திருப்பது ஆதாரமாகக் கிடைத்தது. இதனை அடுத்து, ஜோ ரிச்சர்ட்டை கைது செய்து அவர் பயன்படுத்திய லேப்டாப் மற்றும் அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஜோ ரிச்சர்ட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் சிறையில் அடைத்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அந்த 78 நாட்கள் கொடுமை.. அவங்க மதிக்க மாட்டாங்க.. பெண்ணின் கண்ணீர் ஆடியோ..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies